Friday, December 28, 2007

அடட....ட...ட...டா....2008 வந்துட்டாங்கய்யா....



வருடா வருடம் பிறக்கும்
இப்பூவுலகின் புதியக் குழந்தை!
இதோ பிறக்கிறது!
இந்த குழந்தைக்கு
பெயர் சூட்டுவிழா வரும்
01.01.2008 ல் உலகம் முழுவதும் நடைபெறுகிறது!
என்ன பெயர் தெரியுமா!
இனிய 2008!!!!!
என்ன பெயர் நல்லாயிருக்கா?
பெயர் நல்லாயிருக்கோ இல்லையோ தெரியாது,
2008 நல்லாயிருக்க வேண்டும்!
ஒரு கெட்ட செய்திகூட இப்புவிக்கு வரகூடாது என்று
ஆண்டவனை வேண்டிக்கொள்வோம்!

எல்லோருடைய வாழ்விலும், இந்த 2008 ஒரு மறக்கமுடியாத
இனிய, வளமான, நிறைவான நிகழ்வுகளை நிகழ்த்த
நித்தமும் ஆண்டவனை வேண்டிக்கொள்வோம்!

என் இனிய புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
இனிக்கட்டும் இனி எல்லோருடைய வாழ்வும்!
வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!

இனிய 2008 க்கு என் அன்பு முத்தங்கள்!

Friday, November 23, 2007

வந்தாஜி.....வந்தாச்சு.....வாங்க எல்லோரும்!

போக்கிரி: ஹாய்...ஹாய்....ஹாய் சரகணன்! எப்படி இருக்கீங்க!
சாகா : ஹாலோ...நான் ரொம்ப நல்லாயிருக்கேன்! நீங்க எப்படி இருக்கீங்க!
போ : நான் நலம் சரகணன்! ஆமாம், படம் போட்டாச்சா!?
சாகா : என்ன...படமா?! என்ன படம் போட்டாச்சான்னு கேட்குறீங்க?
போ : சரி...சரி...கலாய்காதீங்க சரகணன்! ஒரு டிக்கட் கொடுங்க பிளிஸ்!
சாகா : டிக்கட் தருகிறேன். ஆனால் ஏதோ படம், கிடம்னு சொன்னீங்க...
போ : ஆமாம், சரன்! இங்கே சிவாஜி படம் இலவசமா காட்டுறீங்கன்னு என்னுடைய நண்பர்கள் சொன்னாங்க, அதுதான் அவசரம் அவசரமா என்னுடைய பாஸ் காடியை எடுத்துகிட்டு ஓடிவந்தேன்! விளையாடம டிக்கட் கொடுங்க சாகா!
சாகா : ஹலோ..ஹலோ...என்ன காமடி செய்றீங்களா...இங்கே சிவாஜிக்கு டிக்கட் கொடுக்குறாங்கன்னு யாரோ உங்களை ஏமாத்தியிருக்காங்க அத மொதல்ல தெரிஞ்சுக்குங்க பிளிஸ்!
போ : ஆமாவா...என்னலா...என்னையவே ஏமாத்திபுட்டானுங்க படுபாவி பசங்க! சரி...சாகா..இங்கே என்ன டிக்கட் கொடுக்கிறீங்க!
சாகா : ம்ம்ம்ம்...அப்படி கேளுங்க...இங்கே ஒலிமயம் நடந்தும் தீபாவளி நிகழ்ச்சிக்குதான் டிக்கட் வித்துகிட்டு இருக்கோம்!
போ : ஹ...ஹா...ஹா...ஹா... என்ன கொடுமை சரகணன் இது! சும்மா ஒரு பீலா..விட்டுபாத்தேன்...உடனே நம்பிட்டீங்களே! தெரியும் சாகா, தெரிந்துதான் வந்திருக்கேன், இன்னைக்கு கொஞ்சம் அலுவலகத்தில் வேலையிருந்தது அதுதான் கொஞ்சம் தாமதமா வந்திருக்கேன்! பாஸ் வேற ஊரில் இல்லை, அதனால் வேலை அதிகமாயிருந்தது! அதுதான் கடைசி நேரத்தில் வந்துள்ளேன்...சரி...எனக்கு 3 டிக்கட் கொடுங்க!
சாகா : பாத்தீங்களா...கொஞ்ச நேரம் எனக்கே அல்வா கொடுத்தீட்டீங்க...சரி பேரு சொல்லுங்க!
போ : சரகணன்!
சாகா : அட...உங்க பேரும் இதுதானா!
போ : அட நீங்க வேற...இது என்னுடைய பேருன்னு யாரு சொன்னது, நான் இவ்வளவு நேரம் பேசியதால் உங்க பேறே உங்களுக்கு மறந்து என்கிட்ட கேட்கிறீங்கன்னு நெனச்சு உங்க பேறே உங்ககிட்ட சொன்னேன்!
சாகா : அய்யோ கடிக்காதீங்க...நேரம் ஆகிவிட்டது, கெளம்பவேண்டும், சரி, உங்க பேர் சொல்லுங்க பிளிஸ்!
போ : சாரி சரகணன்! நீண்ட நேரமா இங்கேயே அமர்ந்து சோர்வடைந்திருப்பீங்க என்றுதான் ஒரு நகைச்சுவையா இருப்பதற்காக குண்டக்க மண்டக்க பேசுகிறேன்! மன்னிக்கவும்!
சாகா : சரி..பரவாயில்லை...பேர் சொல்லுங்க, எத்தனை டிக்கட் பதிவு செய்திருத்தீங்க?
போ : போக்கிரி! பதிவு செய்தது எனக்கு, என் தங்கை மற்றும் அவரது கண்வர் ஆக 3 டிக்கட்
சாகா : இதோ இருக்கு டிக்கட் தொகையை கொடுங்க பிளிஸ்!
போ : சரகணன்! டிக்கட் நான் கிளியர் செய்வதற்கு முன்னுக்கு நீங்க ஒரு விஷயத்தை எனக்கு கிளியர் செய்யமுடியுமா?
சாகா : ஆ...ஆகா...ஆரம்பிச்சுடீங்களா....என்ன சார் வேண்டும் உங்களுக்கு கேளுங்க சார், வீட்டுக்கு போக விடமாட்டீங்க போலயிருக்கே!
போ : சாரி...சரகணன்! இந்த நிகழ்ச்சி பத்திதான் கேட்கணும்! கோச்சுகாதீங்க சரகணன்!
ஆமாம்...உங்களுக்கு, சித்ரா, சிரேயா கோஷல், மதுமிதா, ஹரிணி, சாலினி இவுங்கல்லாம் யாருன்னு தெரியுமா?
சாகா : ஓ...இவுங்க எல்லாம் பாடகிகள் சரிதானே!
போ : ஆமாம் சாகா! முன்னணி பின்னணி பாடகிகள், இவுங்க எல்லாம் முன்னணி பாடகிகளாக வருவதற்கு பின்னணியில் எவ்வளவு கஷ்டபட்டிருப்பாங்கன்னு உங்களுக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது, ஆனா... நிறைய பாடல்களை பாடி கஷ்டபட்டுதான் வந்திருக்காங்ன்னு எல்லோருக்கும் தெரியும்தானே!
சாகா : ஆமாம்...அதுக்கு இப்ப என்ன சார்!
போ : இருங்க சொல்கிறேன்....இப்படி பின்னணியில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடித்தான் அந்த பாடகிகள் பிரபலமாகியிருக்காங்க...ஆனா இந்த சிங்கப்பூரில...இரண்டு பாடகிகள் இருக்காங்கப்பா...அதுவும் இரண்டே இரண்டு வரிகள்தான்....பாடுறாங்க....இரண்டு வரிகள் பாடியே...டோட்டல் சிங்கப்பூரையுமே சிரிக்க வைத்து பெரிய புகழ் பெற்றுவிட்டார்களே.. பேய் புடிச்சு..... ஆடுதம்ம்மா.......ம்ம்ம்ம்ம் ராத்திரியில் இந்த பாட்டை நினைத்தால் பயமாயிருக்கு தூக்கம் வரமாட்டேங்குது! எப்படி சார் ஒரு பேய் கூட குடும்பம் நடத்துவது! அப்படின்னு நான் கவலை படவில்லை...வந்தாஜி கவலைப் படுகிறார்!
சாகா : ஹ..ஹ...சரி ..சரி...இதுக்கு என்னால ஒன்னும் சொல்லமுடியாது, நீங்க நிகழ்ச்சிக்கு வந்து பாருங்க பிறகு எல்லாமே புரியும்! இந்தாங்க டிக்கட் புடிங்க ஆள விடுங்கப்பா...எஸ்கேப்!
போ : ஓகே சாகா...நிகழ்ச்சி நல்லபடியா நடக்க ஆண்டவன் உங்க எல்லோருக்கும் நல்ல உடல், உள்ள ஆரோக்கியத்தை கொடுக்க வேண்டிக்கொள்கிறேன். நிகழ்ச்சியில் சந்திப்போம்! குட் நைட்! ஆல் த பெஸ்ட்!

Tuesday, November 13, 2007

Wednesday, November 07, 2007

தித்திக்கட்டும் இந்த தீபாவளி!


என் வரைப்பூவின் வாசம் தேடி வந்த வாசகர்களே! தமிழ்தாயின் மக்களே! உங்கள் அனைவருக்கும் இந்த பிரியமுடன் பிரேம்குமாரின் பிரியமான.....தித்திக்கும் தீப ஒளி பெருநாள் வாழ்த்துக்கள்! ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் விரைவில் நல்லொளி பிறக்கட்டும்! நல்வாழ்வு கிட்டட்டும்! நலம் பல கிடைக்கட்டும்! வாழ்வில் நிம்மதி தொடரட்டும்!
இந்த தீபாவளி எல்லையில்லா இன்பத்தை எல்லோருக்கும் இறைவன் தந்து அருளட்டும்! உலகம் அமைதியாக இருக்கட்டும்! வாழ்க மக்கள்! பெருகுக மக்களிடம் இன்பம்! தீபாவளி வாழ்த்துக்கள்!

எல்லோரின் மனதிலும் நிம்மதி நிலைக்கட்டும்!

Wednesday, October 24, 2007

இதயத்தை இதமாக்கும் இவர்களுக்கு வாழ்த்துக்கள்!

எல்லா புகழும் இவர்களுக்கு கிடைக்க என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!



உள்ளூர் வானொலியில் தேனொலி கேட்க காரணமான ஒலி விமலாவுக்கும், பச்சை தமிழை பிச்சு பிச்சு வீசும் பிஞ்சு நெஞ்சம் பாஞ்சாலிக்கும் என் உளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Tuesday, October 23, 2007

உலகம் ஒரு நாடகமேடை

வந்துட்டேன்....சொல்லுவோம்ல...என்ன அவசரம்! கடந்த போஸ்ட்ல என்னமோ சொல்றேன்னு சொல்லியிருந்தேன்ல, அதப்பத்திதான் இப்ப, என்ன சரியா! ஆனா நீங்க எதிர்பார்க்கும் அளவிற்கு சுவராஸ்சியம் இல்லாம போய்விட்டது அந்த நிகழ்ச்சி!

அட, ஆமாங்க! சில நாட்களுக்கு முன் இங்கே இயங்கிகொண்டிருக்கும் ஒரு தொலைக்காட்சி சானலுக்கு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் ஒரு நிருவனம், தாங்கள் படபிடிப்பு நடத்தவிருக்கும் நாடகத்தில் நடிக்க ஆட்களை தேடும் வகையில் ஒரு ஆடிசன்( திறமையரியும் சோதனை) நடத்தினார்கள்...

நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டார்கள். நான் கூட போக விரும்பாமல் இருந்து கடைசி நேரத்தில் வீட்டில் போர் அடித்ததால் கிளம்பி சென்றேன். அங்கே நான் சென்றபோது கிட்டதட்ட ஆடிசன் முடியும் தருவாயில் இருந்தது, எனவே வந்தவர்களும் எந்த வசன குறிப்பும் கொடுக்காமல் செய்துகாட்டச் சொன்னார்கள்! அந்தவகையில் எனக்கு முன் நிறையப்பேர் போனார்கள் கேமரா முன் நின்றார்கள் ஏதேதோ செய்ய முற்பட்டார்கள், சிலர் சுமாராக செய்தார்கள், சிலர் திகைத்து நின்றார்கள் சிலர் நிற்பதை பார்தே அவர்கள் போகச் சொல்லிவிட்டார்கள்!

நடப்பவற்றை வெளியிலிருந்து பார்த்துகொண்டிருந்த எனக்கு அடிக்கடி கழிவறை நோக்கி ஓடவேண்டியதாயிற்று! ஒரு கட்டத்தில் திரும்பி ஓடிவிடலாமா என்று கூட தோன்றியது, ஆனால் கூட இருந்த என் நண்பர்கள் டேய்...இருடா...எல்லோரையும் போல நீயும் போய்விட்டு ஒரு சின்ன அறிமுகச் செய்துவிட்டு வாடா என்று தைரியம் சொன்னார்கள்! சரி என்று நின்றுவிட்டேன்!

என் திருப்பம் வந்தது, என்னை அழைத்தார்கள், போய் நின்றேன், லைட்ஸ் ஆன், புகைப்படம் எடுத்தார்கள், சுய அறிமுகம் செய்துகொண்டேன். திடீர் என்று ஏதாவது நடித்துக்காட்டுங்கள் என்றதும் எனக்கு டர்....ஆகிவிட்டது! அதுவும் சூழ்நிலை எதுவும் அவர்கள் தருவதாக இல்லை.. உடனே எனக்கு ஒரு யோசனை வர. நானே ஒரு சூழ்நிலையை எடுத்துக்கொண்டு, அதை பற்றி அவர்களிடம் சொல்லிவிட்டு......ஆரம்பித்தேன் பாருங்கள்....
அட...அட...எங்கிருந்துதான் வந்ததோ தெரியவில்லை....என்னை அரியாமேலே சும்மா சீன் அப்படித்தான் போனது. எனக்கே தெரிந்துவிட்டது நம்ம அசத்துகிறோம் என்று, செய்துகாட்டிவிட்டு நிறுத்தியதும் அங்கிருந்த சோதனையாளர்கள், கேமராமென்கள் எல்லோரும் வெகுவாக பாராட்டியதோடு, தயாரிப்பாளரும் வெளியில் வரும் போது ரொம்ப நல்லா செய்தீர்கள் என்று பாராட்டி அனுப்பினார்கள்... அதைவிட பிறகு தொலைபேசியில் கூப்பிடுவதாகவும் சொல்லி அனுப்பினார்கள்!

ஆனால், நேற்று வரை எந்த தகவலும் அவர்களிடமிருந்து வராததால், நான் அழைத்து கேட்டேன், அதற்கு அவர்கள் சொன்ன பதில் எனக்கு சந்தோஷத்தை தரவில்லை! அவர்கள் ஒரு சில மாதம் கழித்து நாடகம் உருவாக்க போகிறார்களாம், அதில் எனக்கு ஏற்ற கேரக்டர் இருந்தால் என்னை கட்டாயம் கூப்பிடுகிறார்களாம்! நான் போவதாக இல்லை! ஏன் என்று கேட்கிறீர்களா! வாழ்க்கையே ஒரு நாடகமேடை இதில் தினமும் தினமும் நடிக்கவேண்டியுள்ளது, இதில் நாடகத்தில் நடிப்பதற்காகவெல்லாம் காத்திருக்க முடியாது, ஒருவேலை உடனே அழைத்திருந்தால் நடித்திருப்பேன்! காத்திருந்து நடிக்கவெல்லாம் விருப்பமில்லை!

புரியுது, புரியுது, நீங்க கேட்பது புரியுது, ஏன்டா கேமராவில் முகத்தை காட்ட கிளம்பிட்டியே அதுக்கு முன்னாடி கண்ணாடியில் ஒருமுறை உன் முகத்தை நீயே பாத்துகிட்டாயா என்று நீங்கள் கேட்பது புரிகிறது! சத்தியமா பாத்திருக்கிறேன். ஊஹும்...ஒன்னுமில்லை...இருந்தாலும் முகத்தில் 0 இருந்தாலும் அகத்தில் ஒரு சின்ன நம்பிக்கை! சினிமாவிலேயே பார்க்க போனால் கதாநாயகனை தவிர வேற யாரும் அழகாக இருப்பதாகத் தெரியவில்லையே, அட சில காதாநாயகன்களே அழகு இல்லையே!

சரி என்ன இப்ப....என் முகத்தையும் இங்கே ஒருநாள் போஸ்ட் செய்கிறேன் நீங்க பாத்துவிட்டு ஓகே சொல்லுங்கள் அப்பறம் பார்போம்! எனக்கு என்ன பயமாயிருகுன்னா...நான் என் முகத்தை இங்கே போட...அதை நீங்க எல்லாம் பார்க்க அப்புறம் பயந்துகிட்டு நீங்க யாரும் என் பிலாக் பக்கமே வாராமல் போய்விட்டால்.....என்ன செய்வது...சரி சரி...போடுறேன்...ஏன்னா நீங்க எல்லோரும் இந்து பிரேம்குமாரின் முகத்துக்கு ஒருநாளும் முக்கியத்துவம் கொடுக்காமல் என் எழுத்துக்குதான் முக்கியத்துவம் கொடுத்து இங்கு வந்து போகிறீர்கள் என்று தெரியும். என்வே துனிந்து என் முகத்தையும் விரைவில் வெளியிடுகிறேன்!
அப்படியே எடுத்துகிட்டு போய் வீட்டு வாசலில் திருஷ்டியாக மாட்டிவைத்துக்கொள்ளுங்கள்!

Wednesday, October 10, 2007

மீண்டும்....கெளம்பிட்டாய்யா...கெளம்பிட்டாய்ய்யா!

என் இனிய நண்பர்களே தலைப்பை பார்த்ததும் தலை சுற்றுகிறதா, கொடுத்து வைத்தவர்கள், உங்கள் முதுகை நீங்களே பார்த்துகொள்ளலாம் இல்லையா! அய்யோ என் முதுகை காப்பாத்திக்கொள்கிறேன் இப்பொழுது!

கெளம்பிட்டாய்யா...பிரேம் மீண்டும் கிளம்பிட்டாய்யா...என்பதற்கு நீங்கள் நினைப்பதுபோல மீண்டும் எங்கேயும் வெளிநாடு எங்கேயும் கிளம்பவில்லை...இந்த கிளம்பல் என்பது, ஒருவகை நக்கல், நய்யாண்டி, எடக்கு, மொடக்கு, எகத்தாலம், இருமாப்பு, ஆப்பு, வேட்டு, வேடிக்கை இதுபோன்ற அர்த்தங்களில் ஒன்று! காத்திருங்கள் சொல்கிறேன்! எல்லாம் நம்ம சம்மந்தப்பட்டதுதான். நமக்கு நம்ம கதையை பேசவே நேரமில்லை இதில் எங்கே உலகத்தை பற்றியெல்லாம் இங்கே எழுதுவது! நான் ரொம்பவும் தற்பெருமை இல்லாத ஆளாக்கும்! விரைவில்.......

Thursday, September 13, 2007

நீண்டநாள் கனவு நிறைவேறியது!!!





ஆடாத ஆட்டமெல்லாம் போட்டா....மண்ணுக்குள்ளே....என்ன சொல்லவர்ரேன்னு புரியலையா, இருங்க இருங்க வத்துட்டோம்ல...

என்ன கனவு, என்ன நடந்தது! யாரும் அடிக்க வரமாட்டேன்னு உத்திரவாதம் கொடுத்தா சொல்றேன்! என் இனிய தமிழ் மக்கள் அப்படியெல்லாம் செய்யமாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் இதோ......நடந்த கதை....

நேற்று மாலை சுமார் 7 மணி இருக்கும் வீட்டிற்கு கிளம்புவதற்கு முன் அலுவலக டாய்லட்டுக்கு போயிருந்தேன், ஏன் என்றெல்லாம் கேனத்தனமாக கேட்க மாட்டீர்கள் தெரியும். திடீர் என்று, தலை சுற்றியது மயக்கம் வந்தது, என்னடா இது இதுவரை நிகழாத ஒன்று நம் உடம்புக்கு வந்துவிட்டதே என்ற பதட்டத்தில் அலுவலகத்துக்குள் நுழைந்தேன். உள்ளே சென்றதும், அங்கிருந்த என் மேலாளார் என்னிடம் ஓடிவந்து என்ன பிரேம்..ஏதாவது உனக்கு உணரமுடிகிறதா என்று கேட்டபிறகுதான் உண்மை புரியவந்தது. ஆட்டம் வந்தது நமக்கல்ல நம்ம கட்டிடத்திற்கே என்று, உடனே அங்கே வந்த என் பாஸ் எல்லோரும் கீழே செல்லுங்கள் என்று சொன்னதுதான் என் காதில் விழுந்தது, திரும்பிகூட பார்க்கவில்லை, படிக்கட்டு இருக்கும் பகுதிக்கு விரைந்தேன்....

எங்கள் அலுவலகம் இருப்பதோ 25 மாடி, என்ன செய்வது இறங்கினால் உயிர் பிழைக்க வாய்ப்பு இருக்கிறது என்று தெரிந்திருந்ததால்,எத்தனை மாடியாக இருந்தால் என்ன....சரசரவென்று இறங்கத்தொடங்கினேன்...அங்கே பார்த்தால் எனக்கு முன் பலபேர் அவசரம் அவசரமாக இறங்கிகொண்டிருந்தனர். ஒரு பக்கம் பதட்டம், ஒரு பக்கம் இன்றோடு வாழ்க்கை முடிந்துவிடுமோ என்ற பயம், இதையும் மீறி...போனால் போகட்டும் போடா...என்ற துனிவோடு தடதடவென்று இறங்கினேன். சில நொடிகளுக்கு பிறகு பார்த்தால் 17 மாடியில்தான் இருந்தேன். ஆஹா...இப்படி இறங்கினால் வேலைக்கு ஆகாது என்று...விட்டேன் ஓட்டம், சும்மா 4 படி இறங்குவது 7 படி தாண்டுவது இப்படியாக மிச்சம் இருந்த 17 மாடியையும் சுமார் 70 நொடிகளில் இறங்கியிருக்கிறேன் என்றால் பாருங்கள். நான் இறங்கி 4 நிமிடம் கழித்துதான் என் அலுவலக நண்பர்கள் வந்து சேர்ந்தார்கள். கீழே வந்தால் எல்லோரும் அங்கேதான் நிற்கிறார்கள்.

இந்த சூழ்நிலையிலும் நம்ம வாய் சும்மா இருக்கவில்லை... படிக்கட்டில் இறங்கும்போதே, அங்கே ஓடிவந்து கொண்டிருந்தவர்களிடம் பயப்படத் தேவையில்லை.. ஒன்றும் ஆகாது, இது நம் உடம்புக்கு ஒரு பயிற்சிதான் எனவே கவலைப்படாமல் இறங்கிவாருங்கள் என்று ஆறுதலகா பேசிக்கொண்டே வந்தேன்...கீழே வந்தால் எல்லோரும் கட்டிடத்திற்கு கீழேயே கூட்டமாக நின்றார்கள். உடனே ஒரு சத்தம் போட்டேன்...ஏன் எல்லோரும் கீழே வந்தீர்கள்! நீங்கள் இப்படி நிற்பதற்கு பதில் மேலேயே இருந்தால் பாதுகாப்புதான் என்று சொல்லிவிட்டு அதற்கான காரணத்தையும் சொன்னேன்! நம் கட்டிடம் முழுவதும் கண்ணாடியால் முடப்பட்டிருக்கிறது. கட்டிடம் அதிரும்போது அந்த கண்ணாடி பேனல்கள் கீழே விழ வாய்பிருக்கிறது அப்படி விழுந்தால் நினைத்துப்பாருங்கள். எனவே அனைவரும் கட்டிடத்தின் எல்லையை விட்டு தள்ளி நில்லுங்கள் என்று ஒரு சத்தம்போட்டேன்.. அதற்கு பிறகு அங்கிருந்தவர்கள் நகரத் தொடங்கினார்கள்! வாழ்க்கையில் முதல் முறையாக நில அதிர்வை சந்தித்திருந்தாலும் வந்தால் எப்படி நடக்கவேண்டும் என்பதை அறிந்திருந்ததால் மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லி பாதுகாத்த சந்தோஷம் மனதில்!

பிறந்ததிலிருந்து நிலநடுக்கத்தை உணரவில்லையே என்ற கேவலமான ஏக்கம் இருந்தது அதுவும் அன்று நிறைவேறிவிட்டது. ஆனால் வாழ்க்கையில் இதுபோன்ற சம்பவம் நிகழக்கூடாது என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன். படிக்கட்டில் இறங்கிவரும் போது எத்தனை வயதானவர்கள் மற்றும் பெண்மனிகள் அழுவதைப் பார்தேன் தெரியுமா... இறைவா இதுபோன்ற கஷ்டத்தை இனியொருமுறை அவர்களுக்கு தந்துவிடாதே என்று இறைவனிடம் இன்னொருமுறையும் வேண்டிக்கொள்கிறேன்!

எல்லோருமே ஒருமுறை இறைவனிடம் இப்புவியை இயற்கை பேரழிவுகளிடமிருந்து காக்குமாறு வேண்டிக்கொள்ளுங்கள் தயவுசெய்து! மிக்க நன்றி! விளையாட்டாக நான் போட்டுள்ள தலைப்புக்கு மன்னிக்கவும்! இறைவா எல்லா உயிர்களுக்கும் என்றுமே நிம்மதியை தாருமையா! நன்றி!

Wednesday, September 05, 2007

இடைப்பட்ட காலத்தில் இவைகள் அனைத்தும்...

வேட்டையாடு விளையாடு
அன்புக்குரிய நண்பர்களே! நலம்தானே அனைவரும்? நீண்ட நாட்கள் காணாமல் போயிருந்தேன், அலையடிக்க ஆரம்பித்துவிட்டது, அடிப்பது அலையாக இருந்தாலும், போர் அடிக்காமல் இருந்தால் சரி! என் பிலாக் என்பதால் நம்ம சங்கதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் ஒன்றும் தப்பில்லையே? தப்பாக இருந்தால் மன்னிக்கவும். மன்னிப்பதற்கு தமிழர்கள் என்றும் சலைத்தவர்கள் அல்லவே! நன்றி!

என்ன....என்ன நடந்தது இத்தனை நாட்களாக! நாட்கள் நகர்ந்ததே ஒழிய ஒன்றும் பெரியதாக நடந்துவிடவில்லை! சும்மா சின்ன சின்ன விஷயங்கள் நடந்தது அதை இங்கே ...
அதில் முக்கியமான மூன்று மட்டும் சொல்கிறேன்...

1. ஒரு சில மாதங்களுக்கு முன் நான் ஒரு போட்டிக்கான முதல் சுற்று தேர்வு எழுதியிருந்தேன், அதில் தேர்வு பெற்ற விஷயம் எனக்கு இறுதியாகத்தான் எனக்கு தெரியவந்தது, என்னவென்று கேட்கிறீர்களா.. அதுதான் வேட்டையாடு விளையாடு என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி!
பொது அறிவு வினா-விடை நிகழ்ச்சியான் இந்த நிகழ்ச்சிக்கு நானும் தேர்வு பெற்றிருந்த விஷயம் அந்த நிகழ்ச்சியில் பங்குபெற வேண்டிய நாளுக்கு 2 தினம் முன்பு தெரியவர என்ன செய்வது என்றே புரியவில்லை. பொது அறிவு எங்கே தேடுவது என்று குழம்பிபோய்விட்டேன். அதைவிட ஒரு மோசமான விஷயம், அந்த நிகழ்ச்சியை ஒரு முறை கூட டி.வி யில் பார்த்தது கிடையாது! ஒரு வழியாக போய் பார்போம் என்று ஒளிப்பதிவுக்கு சென்று விட்டேன்!
ஒரு நாள் முழுவதும் ஒளிப்பதிவு கூடத்தின் குளிரில் உட்காரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது! 5 வாரங்களுக்கான ஒளிப்பதிவு நடந்தது. என்னுடைய சுற்று 4 வது சுற்றுதான்..
ஒளிப்பதிவு தொடங்கப்பட்டு கேள்விகள் கேட்கப்பட்டது, முதல் சுற்றில் நான் வென்ற தொகை 0 டாலர். ஏனெனில், முதல் முறையாக கேமரா முன் அதுபோன்ற ஒளிப்பதிவு கூடத்தில் நின்றேன், எனவே அந்த பதட்டத்தில் என்ன கேள்வி கேட்கிறார்கள் என்ன பதில் சொல்வது என்று திகைத்து நின்றதில் ஒரு கேள்விக்கு கூட ஊகூம்...முக்கிய காரணம் என்னவென்றால், ஒரு முறையாவது அந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்த்திருந்தால் அந்த நிகழ்ச்சியின் அம்சம் தெரிந்திருக்கும்! சரி அப்புறம் என்ன நடந்தது....
அப்புறம் என்ன அனுபவம் இல்லை என்றாலும் அடுத்த அடுத்த சுற்றுகளில் சுதாரித்துக்கொண்ட அடியேன் ஒரு அசத்து அசத்தி இறுதியில் வெற்றி பெற்றது அடியேந்தான்.
இந்த வார வெற்றியாளர் நான் தான் என்றாலும், ஒரு மிகப்பெரிய சோகம் நடந்தது! போட்டியில் ஒரு கிளிப்பிங் சுற்றில்.. 6 கேள்விகளுக்கு பதில் ஒரு நிமிடத்தில் சொல்லவேண்டும்...என்ன நடந்தது... 30 வினாடிகளுக்குள் 5 பதில்களை சொல்லிவிட்டு அந்த ஒரு பதில் சொல்ல முடியாமல் சொலையாக ஆயிரம் டாலர் இழந்தேன்... வேதனையாக இருந்தது! அதற்கு காரணம் நிகழ்ச்சியை பார்க்காததுதான். சரி விடுங்க ஒரு தொகை கிடைத்தது!
அதன் பிறகு அடுத்த வாரத்திற்கான ஒளிப்பதிவும் உடனே நடத்தினர். ஆடையை மட்டும் மாற்றிக்கொண்டு அடுத்த வாரத்திற்கான ஒளிப்பதிவுக்கு தயாராகிவிட்டேன்... அதுமட்டுமல்ல அதுதான் அந்த நிகழ்ச்சியின் இறுதிவாரமும் கூட அந்த வாரத்துடன் அந்த நிகழ்ச்சி ஒரு முடிவை நாடியது. என்ன நடந்தது, முதல் வாரத்தில் அடைந்த வெற்றி ஒரு உற்சாகமாக இருந்தாலும் ஏனோ தெரியவில்லை நாட்டம் அதிகமாக இல்லாமல் ஏனோ தானோ என்று பதில்கள் சொன்னேன்... இருந்தாலும் மற்றவர்களை விட அதிக சரியான பதில்களை சொல்லியிருந்தபோதும் இரு முறை தவறான பதில் கொடுத்தது, சரியான நேரத்தில் பொத்தானை அழுத்தாத காரணத்தால் மயிரிழையில் வெற்றியை தவறவிட்டேன். இருந்தாலும் இந்த வாரமும் ஒரு தொகை கிடைத்தது.. ஆக மொத்தம் ஒரு வழியா திருப்தி இல்லாமல் செய்துவிட்டோமே என்ற கவலை இருந்தாலும் ஒரு மகிழ்ச்சியும் இருந்தது! அதைவிட ஒரு பெரிய விஷயம் என்னவென்றால், இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் காலக்கட்டத்தில் சுமார் 15 தினங்கள் தினமும் என்னை தொலைக்காட்சியில் காட்டி காட்டி, என்னை மக்கள் மத்தியில் ஒரு வழி செய்துவிட்டார்கள்.. அந்த நேரத்தில் நம் தமிழ் மக்கள் பக்கம் சென்றால் என்னை அடையாளம் கண்டுகொண்டு ஒரு பார்வை பார்பார்களே....யம்மா...வெட்கமாக இருக்கு போங்க! அவுங்க பார்த்த பார்வைக்கு 2 அர்த்தம் இருந்திருக்கும். ஒன்று, பரவாயில்லை இவன் என்றும், மற்றொன்று, அந்த ஆயிரம் வெள்ளியை விட்டுட்டானே பாவி என்றது போலவும் இருக்கும். என்ன செய்வது எனக்கு தொகை ஒரு பெரிய விஷயம் இல்லை என்றுதான் தோன்றுகிறது. அதில் கிடைத்த ஒரு திருப்தி ஆயிரம் மில்லியனுக்குச் சமம்!
வசந்தம் நட்சத்திரம்


2. இரண்டாவது என்ன.....இருங்க இருங்க அதையும் சொல்லிவிடுறேன்! அதுதாங்க நம்ம ''VASANTHAM STAR'' தேர்வுச் சுற்று நிகழ்ச்சி! என்ன வசந்தம்...அது இதுன்னு கேட்கிறீங்களா, அதான் முன்பே சொல்லியிருக்கேன்ல, எங்களுக்கு இந்த வசந்தம் தொலைக்காட்சி, ஒலி வானொலி இதுதாங்க பொழுதுபோக்கு மீடியாக்கள்! அந்த வசந்தம் சென்ட்ரல் தொலைக்காட்சியில் வருடா வருடம் நடத்தப்படும் ஒரு பாட்டு போட்டி நிகழ்ச்சிதான் இந்த வசந்தம் ஷ்ஷ்ஷ்டார்!
உள்ளூர்வாசிகள் மட்டும் பங்குகொள்ளும் இந்த நிகழ்ச்சியின் தேர்வு சுற்றுக்கு நான் இந்த முறை சென்றிருந்தேன். அதிலும் ஒரு சோதனை, முதல் நாள் இரவு வரை அந்த நிகழ்ச்சியில் கலந்தும்கொள்ளும் முடிவு இல்லாமல் இருந்ததால், ஒரு பாடல் கூட பயிற்சி செய்யாமல் இருந்துவிட்டு, திடீர் என்று மறுநாள் காலை கலந்துகொள்ள சென்றேன்.. அதுவும் அங்கே நிகழ்சி நடக்கும் கூடத்தில் கிட்டதட்ட 4 மணிநேரம் உள்ளே உட்காந்திருந்ததில் இருந்த குரலும் உள்ளே போய்விட்டது, இருந்தாலும் நான் எழுதிக்கொண்டு போயிருந்த பாடலை அங்கேபோய்தான் மனப்பாடம் செய்தேன். பார்த்துபாடக்கூடாது என்று விதிமுறை என்றதும் தடுமாற்றம் வந்துவிட்டது, நமக்குத்தான் இரண்டு வரிக்குமேல் எந்த பாட்டும் தெரியாதே, என்ன செய்வது டென்சன் அதிகமாகிவிட்டது, என்னுடைய எண் வந்ததும், உள்ளே பாடச் சென்றேன், உள்ளே சென்று அந்த ஒளிப்பதிவு கூடத்தைப் பார்த்ததும் கொஞ்சம் கொஞ்சம் இருந்ததும் டர்ர்ர் ஆகிவிட்டது, இருந்தாலும் சமாளித்துக்கொண்டு பாட ஆரம்பித்தேன்...
சும்மா சொல்லக்கூடாது, இசையின் பின்னணியுடன் சேர்ந்து என்பாட்டை கேட்டது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. ஆனால் என்னுடைய பாடல் வரிகள் பிரச்சனை என்னை சோதித்துவிட்டது, பாடும்போது அதிக பாடல் வரிகள் தவறுசெய்தேன், பாடல் வரிகளில் கவனம் செலுத்த நினைத்ததால் சுருதி தப்பிவிட்டது, வெற்றியும் தப்பிவிட்டது! அப்புறம் என்ன வீடுதான்!
உண்மையைச் சொல்லப்போனால், இந்த போட்டியில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்காவது போகவேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் இருந்தது , அதுவும் அவுட்! அடுத்த முறை உங்கள் பிரேம் யாருன்னு நிருப்பிக்கிறேன் சரியா, யாரும் திட்டாதீங்க! அதுக்கெல்லாம் ஞானம் வேண்டும்...ஞானம் வேண்டும்...ஏன் ஞானப்பழம் அண்ணனுக்கு ஞானப்பழம் ஒன்று கொடுப்பா! ஹ..ஹா...ஹா...அஹ்...அஹ...ஹாஆ
கண்ணதாசன் பிறந்தநாள் விழா


3. இதுதாங்க மூன்றாவது, அட இதுவும் ஒரு பாட்டுத்திறன் போட்டி, என்னன்னு தெரியனுமா, சொல்லாம எங்கே போகப்போறேன், இதோ.....
"கண்ணதாசன் பிறந்தநாள் விழா, பாட்டுப்போட்டி" இதில் கலந்துகொள்ள ஆசை வந்துச்சா... உடனே நிகழ்ச்சியை நடத்துபவர்களை தொடர்புகொண்டு என்னுடைய பெயரையும் பதிவுசெய்துகொண்டேன், அதன் படி அந்த வார இறுதியில் நடந்த தேர்வு சுற்றுக்குச் சென்றேன், ஒரு 50 பேருக்குமேல வந்திருந்தாங்க. அவுங்க எல்லோரையும் பார்த்து இதிலும் நமக்கு உஹும்...நோ...வே... என்று நினைத்துக்கொண்டு காத்திருந்தேன்...ஒவ்வொருவராகப் பாடத்தொடங்கினார்கள்...எல்லாமே கண்ணதாசன் பாடல் என்பதால், ஒரே பழமைதான். அதுவும் எல்லாமே திரு. டி.எம்.சவுந்தர் சார் பாடியதும், சீர்காழி சார் பாடியதுமா இருந்தது, இதில் என்னத்த நம்ம பாடி...ஆனால் நான் போகும்போது, நம்ம SP.B சார் பாடிய ஒரு பாடல் பயிற்ச்சி செய்துகொண்டு போயிருந்தேன். சற்று வித்தியாசமான பாட்டு, என்ன பாட்டுன்னு யாரும் கேட்க கூடாது, கேட்டாலும் சொல்லமாட்டேன். அந்த பாடல் என்றதும் பாடுவதற்கு முன் சிலர் சிரிப்பதையும் பார்த்தேன்.

பாட ஆரம்பித்தேன்.. ஒலிவாங்கி இல்லாமல் பாடவேண்டும் என்பதால் ஒரு நேர்த்தி இல்லாமல் போய்விட்டது, இருந்தாலும் நன்றாக பாடியதாக நண்பர்கள் சொன்னார்கள்.. கடைசியில் என்ன நடந்தது, நீதிபதிகள் தீர்ப்புக்காக ஒரு 30 நிமிடம் காத்திருந்தோம், அதற்கு முன்பே யார் யார் தேர்வு பெறுவார்கள் என்று அங்கே குழுமியிருந்த நாங்கள் ஒரு ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தோம். அதில் ஒரு சிலர் என்னையும் பட்டியலில் குறிப்பிட்டார்கள். ஆனால் இறுதியில் அரைமணி நேரமாக கதைவை அடைத்துக்கொண்டு ஆலோசித்த நீதிபதிகள் ஒரு பட்டியலை கொடுத்து படிக்கச் சொன்னார்கள். என்ன கொடுமை சரவணன் அது, அந்த பட்டியலில் நாங்கள் அனைவரும் யோசித்து வைத்திருந்த ஒருவர் கூட இல்லை என்பது எல்லோருக்கும் ஒரு அதிர்ச்சியையும், வியப்பையும் தந்தது! என்ன நடந்தது அங்கே என்றே தெரியவில்லை. அவர்கள் தேர்வு செய்தவர்களும் திறமைசாலியாகத்தான் இருந்தார்கள்..ஆனாலும்......என்ன சொல்லுவது, திகைப்பில் அனைவரும் வெளியாகிவிட்டோம். இதில் நான் தேர்வு செய்யப்படவில்லை என்று கவலைப்படவில்லை, நல்லா பாடிய சிலர் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்றுதான் புரியவில்லை! இனிமேல் அவர்கள் நடத்தும் எந்த ஒரு போட்டிக்கும் நான் போகப்போவதில்லை என்ற முடிவை மட்டும் இப்போது எடுத்திருக்கிறேன்! சரி விடுங்க....அது இருந்தா இது இல்லை,, இது இருந்தால் அது இல்லை....எல்லாம் இருந்தால் அப்புறம் நம்மை பிடிக்க ஆள் ஏது! எல்லாம் ஆண்டவன் கணக்கு! எது நடந்ததோ நன்றாக நடக்கவில்லை என்றாலும், எது நடக்குமோ அதுவாவது ஆண்டவன் கருணையால் நன்றாக நடக்கட்டும்...சார் போய் வேலையை பாருங்க..எவனாவது கதை சொன்னாபோதுமே.. அப்படியே வேலையைவிட்டு விட்டு கேட்பதா! போங்க...போங்க...வேலையப்பாருங்கப்பா....நன்றி!

Tuesday, August 21, 2007

சிங்கம் வந்திருச்சு!

அனைவருக்கும் எனது இனிய வணக்கம்!

இதுவரை சிங்லா இருந்து தனது வேலைகளை மட்டும் பார்த்து வந்த சிங்கம்! இன்று கூட்டத்தோடு சேர வந்திருக்கு! கூட்டமாயிருக்கும் தாங்கள் யாரையும் நான் பன்னி என்று சொல்லவே மாட்டேன்! நீங்க கூட்டமாயிருந்தாலும் நீங்களும் என்றும் சிங்கந்தான் எனக்கு! வாங்க சிங்கங்களா...இந்த காட்டை ஒரு கலக்கு கலக்குவோம்!

இனிது இனிது நட்பினிது!
நட்பினும் இனிது நம்பிக்கை!

Tuesday, May 22, 2007

வணக்கம்..வணக்கம்....வந்துட்டேன்ன்ன்ன்..

என்னுயிருனும் மேலான என தமிழ் மக்களே! எல்லோரும் நலமாக இருக்கீறீங்களா? என்மேல் அனைவருக்கும் கோபமா? மன்னிக்கவும்... என்ன செய்வது. வாழ்க்கை என்றால் அப்படி இப்படித்தான் இருக்கிறது...

Monday, April 30, 2007

coming soon.......Sivaji!

Hi Friends! Im sorry! still im busy. coming soon! what coming soon! he...he..he.. Sivaji! Take care bye!

Wednesday, March 07, 2007

BACK....BACK....

Hello Friends! How r u all? im here oredi in singapore! will soon start......pls wait for a while! God bless u all! bye bye....

Monday, January 22, 2007

பணியிடம் மாற்றம்!

என வரைப்பூவுக்குள் தேன் எடுக்க தினந்தோறும் வந்துபோகும் தேனி நண்பர்களே!
உங்கள் அனைவருக்கும் வணக்கம்! என்னுடைய நிர்வாகம் என்னுடைய பணியிடத்தை சில வாரங்களுக்கு இந்தியாவுக்கு மாற்றியுள்ளது.... என்னுடைய நிருவனம் இந்தியாவில் ஒரு Project எடுத்து உள்ளார்கள்....அதற்கு என்னையும் அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.... இந்தியனாக இருப்பதுமட்டுமே அதற்கு காரணம்... நான் உள்ளூர் வாசிதான் என்றாலும் ஒரு நிருவனத்தில் மாட்டிக்கொண்டால் அவர்கள் சொல்வதெல்லாம் செய்யத்தான் வேண்டியுள்ளது....இந்தியாவும் நம்முடைய தாயகம்தானே....சென்றுவரலாம் என்று நானும் சம்மதித்துவிட்டேன்... எனவே பயணம் இன்னும் இரண்டொரு நாளில் இருக்கும்.... அங்கு சென்றபிறகு பதிவுக்கு எல்லாம் நேரமிருக்கா தெரியாது....எனவே.... அனபர்கள் அனைவரும்.....நினைவுகளோடு இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் விடைபெறுகிறேன்....
என்னுடைய மின்னஞ்சல் இருக்கிறது...நன்றி!
poopremkumar@gmail.com

Friday, January 12, 2007

கதை மாறிப்போன கதை...கடியாக மீண்டும்!



வணக்கம் நண்பர்களே! என்னடா!!! கதை எழுதுறேன்...எழுதுறேன்னு கதைவிட்டுபுட்டு இப்ப என்ன எழுத வந்திருக்கிறாய் என்று கேட்பது புரிகிறது....
அய்யா சாமி...மன்னிச்சுக்குங்கோ....கதை எழுத, கதை வேணும்ல...நம்ம கிட்ட அது எங்கே இருக்கு! இருந்தாலும் என் மனதில் தோன்றிய செய்திகளை ஒரு கடியாக அதுவும் சில திரைப்பட நகைச்சுவைகளை நினைவுகூரும் வகையில் எழுதுகிறேன்... சும்மா சிரிக்க முடிந்தா சிரிச்சுட்டு போங்க... யாரும் சீரியஸாக எடுத்துகிட்டு பின்னூட்டம் போடாதீங்க....வேண்டும் என்றால் ரெண்டு கிக்கு விட்டுட்டு போங்க வாங்கிகொள்கிறேன்....ஹ...ஹ...ஹாஅ...இதோகதை......

முன்னுரை: கதை என்றால் இது இருக்கனும்ல...அட...இந்த கதைக்கு(கடி) காரணம்... கடந்த ஆண்டின் இறுதி நாளன்று நடந்த, சிங்கப்பூர் ரேடியோவான ஒலி 96.8 நடத்திய COUNT DOWN 2007 நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன்... நீங்கள் நினைப்பது புரிகிறது.. என்னடா இவன் எப்ப பார்த்தலும் ஒலி..ஒலி..ன்னு சொல்லிகிட்டே இருக்கான்னு கேட்பது கேட்கிறது... அய்யா... இந்த ஊரில் இத விட்டா நம்ம தமிழர்களுக்கு வேறு நாதி இல்லை... இவுங்கதான் எங்களுடைய கதி! சின்ன நாடு... வேற என்ன இருக்கு தமிழர்களுக்கு... இவுங்க நடந்துர நிகழ்ச்சிகள்தான் ஏதோ கொஞ்சம் இங்கு வாழும் தமிழர்களுக்கு உறுதுணையாக இருக்கு... இவர்களை விட்டா கோவில் குளம்தான் இருக்கு... அதனாலதான் இவுங்க பின்னாடியேயயயயயய போய்கிட்டு இருக்கிறோம்... இப்ப புரியுதா....

அந்த வகையில் அன்று அந்த நிகழ்ச்சிக்கு போனேனா... அப்ப அங்கே நடந்த நிகழ்சிகளை பார்த்துவிட்டு வந்து வீட்டில் படுத்தவுடன் அந்த நிகழ்ச்சி பற்றி சில கர்பனன எனக்குள் ஒடியது.. எனக்குள் உதித்த நகைச்சுவையான கர்ப்பனையை ஒரு கப்சா கட்டுரையாக எழுதலாம் என்ற எண்ணம்தான் அது...

சரி... இப்ப என்ன நடக்கபோவுதுன்னா.. அந்த நிகழ்ச்சியை ஒரு திருமணம் ஆகாத ஒரு அழகான திறமையான படைப்பாளர் வழி நடத்துவதாக கற்பனை... அப்போது... நிகழ்ச்சியில் ஆண்களுக்கான பாட்டு போட்டி நடத்த சில ஆண்களை மேடைக்கு அழைகிறார் அந்த பெண் படைப்பாளர்... அவர் பெயர் கமலா!

இப்பொழுது ஒவ்வொரு ஆணாக மேடை ஏறுகிறார்கள்.. ஒவ்வொரு பங்கேற்பாளரிடமும் சில கேள்விக் கனைகளை தொடுத்துவிட்டு அவர்களை திக்குமுக்காட செய்துதான் பிறகு பாட அனுமதிக்கிறார் அந்த படைப்பாளர்.... இதை பார்த்துகொண்டிருந்த நம்ம நண்பர் அதாங்க இந்த கதையின் கதாநாயகன் மிஸ்டர் போக்கிரி!( அட இப்ப Hero வுக்கு இப்படித்தான் பேர் வைத்தால்தான் எடுப்பா இருக்கும்!) என்னடா நம்ம ரசிகர்கள் படையை இந்த காச்சு காச்சுறாங்களே இவுங்க, என்ற கடுப்போடு அடுத்த பங்கேற்பாளராக நம்ம போக்கிரி மேடை ஏற....

கமலா: வணக்கம்!
போக்கிரி: வணக்கம்!
கமலா: சரி, எங்கிருந்து வர்றீங்க?
போ: வீட்டிலிருந்து!
கமலா: அது தெரியாதா, வீடு எங்கேயிருக்கு?
போ: நான் எங்கே இருக்கேனோ அங்கேயத்தான் இருக்கு!
கமலா: ய்ய்ய்ய்ய்ய்... சரி, நீங்க எங்கே இருக்கீங்க?
போ: என் வீடு எங்கே இருக்கோ, அங்கேதான் நானும் இருக்கேன்!
கமலா: கடவுளே...காப்பாத்து! சரி..சரி...இப்ப சரியா கேட்கிறேன்..
நீங்களும், உங்க வீடும் எங்கே இருக்கீங்க..?
போ: இப்ப நான் சரியா சொல்லிவிடுகிறேன்...நானும், என் வீடும் எங்கே இருக்கிறோமோ
அங்கேயத்தான் நானும் என் வீடும் இருக்கிறோம்!
கமலா: அய்ய்யய்ய்ய்யோ.....ஆள விடுங்க.....
போ: ஹலோ..ஹலோ...இருங்க..இருங்க... உங்களுக்கு என்ன தேவ... என்னுடைய
அட்ரஸ் வேணுமா? அட்ரஸ் என்னன்னு கேட்கவேண்டியதுதானே... ஏன் குழப்புறீங்க
சரி... இதோ என்னுடைய அட்ரஸ்
நம்பர் 6, சுவாமி கமலானந்தா தெரு
சிங்கப்பூர் குறுக்கு சந்து,
சிங்கப்பூர் மெயின் ரோடு,
சிங்கப்பூர். 600006
கமலா: ஹாங்...ஹாங்...ய்ய்ய்ய்ய்ய்... என்ன இது....
போ: என்ன புரியலையா? வேண்டுமென்றால் திருப்பிச்சொல்லட்டா....திருப்பி..திருப்பி..
கமலா: அய்யோ...வேண்டாம்..வேண்டாம்... நம்ம இப்ப நிகழ்ச்சிக்கு போகலாம்..
போ: என்ன நிகழ்ச்சிக்கு இனிமேதான் போறோமா.. அப்ப இவ்வளவு நேரம் என்னை ரேகிங்க் செய்தீங்களா... சரி சரி... பரவாயில்லை... கேளுங்க.....
கமலா: சரி..அதெல்லாம் இருக்கட்டும் இப்ப என்ன பாட்டு பாட வந்திருக்கீங்க...
போ: என்ன பாட்டா....சினிமா பாட்டுதான்...
கமலா: ஆகா...ஆரம்பிச்சிட்டீங்களா...அது தெரியுது, எந்த சினிமாவிலிருந்து எந்த பாட்டுடுடு?
போ : ஓ...அதுவா.... தமிழ் சினிமாவிலிருந்து, தமிழ் பாட்டு!
கமலா: அய்யோ... என்னால முடியாது வேற படைப்பாளரை மேடைக்கு அனுப்புறேன்....
போ: ஹலோ..ஹலோ... இருங்க...இருங்க.... என்னங்க இதுக்கெல்லாம் போய்...
நீங்க மட்டும் ரேடியோவில யாராவது பேச தெரியாத ஆள் மாட்டிகிட்டா அவனை டர்ர்ர்... ஆங்கிவிடுவதில்லையா? இதுக்குபோய் இப்படி ஜகா வாங்குவது ஒங்கல மாதிரி திறமையான படைப்பாளருக்கு அழகா...அதுவும் அழகான படைப்பாளருக்கு!!!!
கமலா: சரி..சரி... ரொம்பத்தான் ஐஸ் வைக்கிறீங்க... போனா போவுது...உங்களை பாடவிடறேன்... பாடிட்டு ஓடிவிடுங்க சரியா?
போ : ரொம்ப நன்றி கமலா மேடம்! நான் பாடிட்டு நீங்க சொன்னமாதிரியே ஓடிவிடுகிறேன்...
கமலா: சரி.. பாடலாம்... இருங்க,இருங்க.. என்ன.... பாட்டு முழுசா தெரியுமா... இல்ல நாலு வரிமட்டும் பாடுவீங்களா? ஏன் கேட்கிறேன் என்றால்.. இப்படி அதிகமாக பேசுபவர்கள் எல்லோருக்கும் சரியா பாடத் தெரியாதுன்னு யாரோ சொல்லி கேள்வி பட்டிருக்கிறேன்... அதான் கேட்கிறேன்....
போ: அதுதான் எனக்கு நல்லா தெரியுமே!
கமலா; என்ன...என்ன தெரியும்!
போ: அதாங்க...அதிகம் லொட...லொடன்னு பேசுபவர்களுக்கு பாட்டு வராது... பாடவும் தெரியாதுன்னு தெரியும்ன்னு சொன்னேன்!
கமலா: எத வச்சு உறுதியா இப்படி சொல்றீங்க.....
போ: எல்லாம் உங்கள வச்சுத்தான்... அப்படின்னு சொன்னா கோச்சுகுவீங்க...அதனால என்னை வைத்துதான்ன்னு வச்சுகுங்களேன்...
கமலா: ஆமாம்... இந்த லொள்ளு பேசுறீங்களே உங்களுக்கு எந்த கம்பெணி வேலை
கொடுத்திருக்காங்க....ங்ங்ங்....
சரி... பாடுவதற்கு முன் ஒரே ஒரு கேள்வி இருக்கு அதையும் கேட்கனும்.. ஏன்னா இந்த கேள்வி எல்லோரிடம் கேட்டேன் அதுதான்... உங்களிடமும் கேட்கனும்...
போ: சரி...கேளுங்க... என் பாட்டை கேட்பதைவிட உங்கள் கேள்வியை கேட்கதான் மக்கள்
ஆசைப்படுகிறார்கள்... கேளுங்க..
கமலா: சரி, எங்க வேலை பாக்குறீங்க?
போ: எங்க...வேலை பாக்கிறோம்... சும்மா அலுவலகத்தில் போய் உட்காந்துவிட்டு நேரம்
ஆனா... வீட்டுக்கு போவதுதான் வேலை!
கமலா: சரி..சரி... இங்க உங்களுடைய வேலை பற்றியெல்லாம் கேட்கவில்லை கேட்ட கேள்விக்கு புரிந்துகொண்டு சரியா பதில சொல்லுங்க...
போ: சாரி மேடம்.... மன்னிச்சுக்குங்க.... எ..எ...என்ன... கேட்டீங்க....
கமலா: ம்ம்ம்ம்ம்...எங்கே வேலை செய்றீங்க...
போ : வேற எங்கே அலுவலகத்தில்தான்!
கமலா: அட...அட... அது தெரியுது எந்த அலுவலகத்தில்
போ; நான் வேலை செய்றேன்ல அந்த அலுவலகத்தில்!
கமலா: போச்சுடா...கெளம்பிட்டீங்களா...சரி....உங்க அலுவலகம் எங்கே இருக்கு?
போ: நான் வேலை செய்யுற எடத்தில்தான் இருக்கு!
கமலா: உஹிம்...உஹிம்...ம்ம்ம்ம்ம்ம்ம்......அம்ம.....ம்ம்ம்ம்ம்ம்...
போ: ஹலோ..ஹலோ...கமலா...கமலாமேடம்.. ஏன்...ஏன் அழுவுறீங்க..
கமலா: சும்மா இருங்க... அழுவாம என்ன செய்றது... எந்த கேள்வி கேட்டாலும் இப்படியா
பதில் சொல்றது.....
போ: ஹலோ... என்ன... என் பதிலுக்கு என்ன கொறை... இத பாருங்க... உங்களுக்கு
சரியா கேட்க தெரியலைன்னு சொல்லுங்க....
கமலா: ஹாங்....ஹி...ஹிங்ங்....எனக்கு கேட்க தெரியலையா?!!!!!
போ: அட..ஆமாங்க நீங்க குண்டக்க மண்டக்க கேள்வியைத்தான் தெளிவா கேட்குறீங்க....
ஆனா... தெளிவா கேட்கவேண்டிய கேள்வியெல்லாம் குண்டக்க மண்டக்க கேட்டா
இப்படித்தான் பதில் சொல்ல முடியும்...
கமலா: இனிமே... உங்க கிட்ட கேள்வி எதுவும் கேட்பதற்கு இல்லை... நீங்க பாடலாம்
வணக்கம்!
போ: சரிங்க... அப்படியே நடக்கட்டும்... கமலா மேடம்... உங்க கிட்ட ஒன்னு சொல்லனும்!
அதுவும் ரகசியமா... கொஞ்சம் ஒலிவாங்கியை பின்னாடி வைத்துகொண்டு உங்க காதை
என் முன்னாடி கொண்டு வரமுடியுமா?
கமலா: அதெல்லாம் முடியாது.... நீங்க இவ்வளவு நேரம் கடித்தது போதாதுன்னு என் காதை
கடிக்கலான்னு நினைக்கிறீங்களா...
போ: அப்படி ஒன்னும் இல்ல... சரி.. போனா போவுது விடுங்க... வேற யாருகிட்டையாவது
அந்த விஷயத்தை சொல்லிகிறேன்.... சரி...நீங்க இறங்கி போங்க நான் பாடனும்....

அ...அ...ஆஅ....ஆஅ......
ம்ம்ம்...ம்ம்ம்..ம்ம்..ம்ம்....
இதயம் ஒரு கோவில்
அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவதை நீ!
...............................
(ஒரு வழியா பாடி முடித்தான் நம்மபோக்கிரி, சொல்லப்போனால் ரொம்ப நல்லாவே பாடினான்)
பாடிமுடித்ததும்... படைப்பாளர் கமலா... சிரித்த முகத்துடன் மேடைக்கு வந்து ...
வாழ்த்து தெரிவித்து....
கமலா: ரொம்ம நல்லாவே பாடுனீங்க...வாழ்த்துக்கள்...
ஆமாம் ஏதோ சொல்றேன்னு சொன்னீங்களே...
(என்று கேட்டவாறே ஒலிவாங்கியை கீழிறக்கிக் கொண்டார்)

போக்கிரி: இல்ல....வருஷம் வேற பொறக்க போவுது இப்ப போய் ஒரு பொய் சொல்லனுமான்னு நினைச்சேன், அதான் வேண்டான்னு விட்டுட்டேன்..
கமலா: அப்படி ஏன் நினைக்கிறீங்க... இன்னும்தான் இந்த வருடம் முடியவில்லையே.. நீங்க சொல்லப்போகும் பொய் இந்த ஆண்டின் இறுதி பொய்யாக இருக்கட்டுமே... அது என்னதான்னு தெரிந்துகொண்டால்தான் இங்கே வந்திருக்கும் வருகையாளர்களுக்கு நிம்மதியிருக்கும் எனவே சும்மா தைரியமா சொல்லுங்க...

போக்கிரி: நீங்களே ரொம்ம ஆவலா கேட்கும்போது சொல்லித்தான் ஆகனும், சரி அந்த விஷயம் என்ன தெரியுமா.... அதுவந்து...அதுவந்து.... நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க...ம்ம்ம்ம்

கமலா: அய்யே....ரொம்பத்தான்.... வழியுது தொடச்சுகுங்க....இதெல்லாம் அருந்த பழசு...இதெல்லாம் எப்பவோ சினிமாவில வந்திருச்சு....புதுசா எதாவது சொல்லுப்பா...
போக்கிரி: என்ன.....சினிமாவில வந்திருச்சா...இது நான் சிந்திச்சு வச்ச டலயாக் ஆச்சே அதுக்குள்ள இது எப்படி கோடம்பாக்கம் போனது.... இதுக்குத்தான்... இந்த மாதிரி காமெடி விஷயங்களை எல்லாம் பப்ளிக்கா யாரிடமும் பேசக்கூடாது என்கிறது.... இப்ப பாருங்க என்னுடைய காமெடியை யாரோ எடுத்து எந்த படத்திலொயோ போட்டுவிட்டானுங்க....
கமலா: ஹலோ...ஹலோ.... நிறுத்துங்க...நிறுத்துங்க.... இந்த கதையெல்லாம் இங்கே வேணாம்.. இது பாட்டா கூட வந்திருச்சு...

போக்கிரி: என்ன்ன்ன்ன.....பாட்டா கூட எழுதிவிட்டார்களா....ம்ம்ம்ம்ம்ம்....என்னடா இந்த போக்கிரிக்கு வந்த சோதனை! எத சிந்திச்சாலும் நமக்கு முன்னாடி கண்டுபிடிச்சு இப்படி நம்ம சரக்கையெல்லாம் இவனுங்க வித்துகிட்டு இருக்கானுங்க....கட்டாயம் கன்சூமர் கோர்ட் போகனும்....

போக்கிரி:
கமலா மேடம்.... இதுவரை நான் ஒரு நகைச்சுவைக்காகத்தான் இப்படியெல்லாம் கொஞ்சம் அதிகமாகவே பேசிவிட்டேன்... தயவுசெய்து பெரிய மனதுகொண்டு மன்னிக்கவும்....என்ன இருந்தாலும் என் போன்ற ஒரு நல்ல ரசிகர்களுக்கு நீங்கள் எப்போதுமே ஒரு கலங்கரை விளக்கம்தான்... அதில் எந்த கலங்கமும் என்றுமே வராது....உங்களுடைய படைப்புக்கு முன நாங்கள் அனைவரும் நல்ல நேயர்களாகவே கடைசிவரை இருந்து உங்களுக்கு நல் ஆதரவு வழங்க விரும்புகிறோம்... எங்களுடைய ஆரோக்கியமான ஆதரவு உங்களை போன்ற திறனாளர்களுக்கு என்றுமே உறுதுணையாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இனி இருக்காது..... நன்றி!

கமலா: அட...நீங்க வேற மிஸ்டர் போக்கிரி! நான் எதுவும் தப்பா நினைக்கவில்லை, நீங்க இப்படி பேசியதைகூட நம் நேயர்கள் நன்றாக ரசித்து கைதட்டியதை பார்த்தீர்கள் அல்லவா, எனவேதான் நானும் உங்களை இதுபோன்று பேச விட்டுவிட்டேன்.... என்னை பொறுத்தவரை மக்களை சந்தோஷப்படுத்தும் பணியை நான் செய்தாலும் அல்லது உங்களைப் போன்ற நல்ல நேயர்கள் செய்தாலும் எனக்கு மகிழ்ச்சிதான்... எனவே எந்த வருத்தமும் இல்லாம இருங்கள்... இதோ உங்களுடைய சிறந்த பாட்டுக்கான... எங்கள் சிறப்பு பரிசு...
இதில் இருக்கும் பரிசை கண்டு நிச்சயம் நீங்கள் மகிழ்வீர்கள்...வீட்டில் சென்று திறந்து பாருங்கள்...வாழ்த்துக்கள்...நன்றி!

நல்லிரவில் வருடம் பிறந்ததும்....கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய போக்கிரி....அவசரம்...அவசரமாக...அந்த பரிசு பொட்டலத்தை பிரித்தான்....
கிர்..........கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........
அலார சத்தம்....அதில் இருந்தது அலாரம் இல்லை...அங்கே அடித்ததுதான் அலராம்....
அப்படின்னா அதில் இருந்தது....அட அதுதான் நம்ம கனவு கலைந்துவிட்டதே....அப்புறம் அதில் என்ன இருந்துச்சுன்னு எனக்கு என்ன தெரியும்....வேண்டும் என்றால் போக்கிரி கிட்ட கேட்டுச் சொல்றேன்... ஓகேவா.......
சரி...சரி....படம் முடிஞ்சு போச்சு.... எல்லோரும் எழுந்துபோய்.... புதுசா யாரோ நம்ம கதை கதாநாயகன் பேரை சுட்டு படத்துக்கு பெயராக வைத்து படம் எடுத்திருக்காங்கலாம் அத போய் பாருங்க.....என்ன வர்டா.......டா...டா....

Friday, January 05, 2007

புத்தாண்டில் புது முயற்சி!


என் இனிய தமிழ் மக்களே! இதுவரை ஒரு பயனும் இல்லாத பதிவுகளை போட்டுவந்த இந்த பிரியமுடன் பிரேம்குமார் இப்பொழுது சுத்தமாக ஒரு பயனும் இல்லாத பதிவுகளை போட முடிவெடுத்துள்ளான்!

வணக்கம் மக்களே! நண்பர்களே! உங்களுக்கெல்லாம் புத்தாண்டு எப்படி பூத்துள்ளது? சந்தோஷமா பிறந்திருக்கா? எனக்கு உண்மையிலேயே குதுகலத்துடன் பிறந்ததது....
நான் புத்தாண்டு பிறந்த போது... சிங்கப்பூர் ரேடியோ ஒலி 96.8 நடத்திய கவுண்ட் டவுன் நிகழ்ச்சியில் ஆட்டம் பாட்டத்தோடு இருந்தேன்....
ஒரு நாள் முழுவது நடந்த நிகழ்ச்சி அது... அதில் பல்வேறு அங்கங்கள் படைக்கப்பட்டது...
அப்படி அந்த நிகழ்ச்சியை பார்த்துவிட்டு வந்த எனக்கு இரவில் படுக்கும்போது ஒரு கற்பனை உதித்தது.... அந்த கற்பனையின் படி ஒரு கதை எழுதலாமே என்று கூட தோன்றியது... நம்ம என்ன பட்டுக்கோட்டை பிரபாகரா அல்லது பாலகுமாரா கிரைம் நாவல் எழுதுவதற்கு... சும்மா நம்ம பிளாக்கில் கப்சா விடலாம் என்று எண்ணியிருகிறேன்....


விரைவில் முடிந்தால் நாளைக்கு நான் அலுவலகம் வந்தால் நாளையே எழுதிவிடுகிறேன்...
அப்படி என்ன இருக்கும் அந்த கதையில் என்று கேட்டால் ஒன்றும் இருக்காது
சில கற்பனை, கதை, காமெடி.....அப்புறம் கதைக்கா ஒரு சின்ன காதல் அவ்வளவுதான்
பாட்டு கூட இருக்கும் ஆனா சண்டை இருக்காது! விரைவில்......