Friday, November 23, 2007

வந்தாஜி.....வந்தாச்சு.....வாங்க எல்லோரும்!

போக்கிரி: ஹாய்...ஹாய்....ஹாய் சரகணன்! எப்படி இருக்கீங்க!
சாகா : ஹாலோ...நான் ரொம்ப நல்லாயிருக்கேன்! நீங்க எப்படி இருக்கீங்க!
போ : நான் நலம் சரகணன்! ஆமாம், படம் போட்டாச்சா!?
சாகா : என்ன...படமா?! என்ன படம் போட்டாச்சான்னு கேட்குறீங்க?
போ : சரி...சரி...கலாய்காதீங்க சரகணன்! ஒரு டிக்கட் கொடுங்க பிளிஸ்!
சாகா : டிக்கட் தருகிறேன். ஆனால் ஏதோ படம், கிடம்னு சொன்னீங்க...
போ : ஆமாம், சரன்! இங்கே சிவாஜி படம் இலவசமா காட்டுறீங்கன்னு என்னுடைய நண்பர்கள் சொன்னாங்க, அதுதான் அவசரம் அவசரமா என்னுடைய பாஸ் காடியை எடுத்துகிட்டு ஓடிவந்தேன்! விளையாடம டிக்கட் கொடுங்க சாகா!
சாகா : ஹலோ..ஹலோ...என்ன காமடி செய்றீங்களா...இங்கே சிவாஜிக்கு டிக்கட் கொடுக்குறாங்கன்னு யாரோ உங்களை ஏமாத்தியிருக்காங்க அத மொதல்ல தெரிஞ்சுக்குங்க பிளிஸ்!
போ : ஆமாவா...என்னலா...என்னையவே ஏமாத்திபுட்டானுங்க படுபாவி பசங்க! சரி...சாகா..இங்கே என்ன டிக்கட் கொடுக்கிறீங்க!
சாகா : ம்ம்ம்ம்...அப்படி கேளுங்க...இங்கே ஒலிமயம் நடந்தும் தீபாவளி நிகழ்ச்சிக்குதான் டிக்கட் வித்துகிட்டு இருக்கோம்!
போ : ஹ...ஹா...ஹா...ஹா... என்ன கொடுமை சரகணன் இது! சும்மா ஒரு பீலா..விட்டுபாத்தேன்...உடனே நம்பிட்டீங்களே! தெரியும் சாகா, தெரிந்துதான் வந்திருக்கேன், இன்னைக்கு கொஞ்சம் அலுவலகத்தில் வேலையிருந்தது அதுதான் கொஞ்சம் தாமதமா வந்திருக்கேன்! பாஸ் வேற ஊரில் இல்லை, அதனால் வேலை அதிகமாயிருந்தது! அதுதான் கடைசி நேரத்தில் வந்துள்ளேன்...சரி...எனக்கு 3 டிக்கட் கொடுங்க!
சாகா : பாத்தீங்களா...கொஞ்ச நேரம் எனக்கே அல்வா கொடுத்தீட்டீங்க...சரி பேரு சொல்லுங்க!
போ : சரகணன்!
சாகா : அட...உங்க பேரும் இதுதானா!
போ : அட நீங்க வேற...இது என்னுடைய பேருன்னு யாரு சொன்னது, நான் இவ்வளவு நேரம் பேசியதால் உங்க பேறே உங்களுக்கு மறந்து என்கிட்ட கேட்கிறீங்கன்னு நெனச்சு உங்க பேறே உங்ககிட்ட சொன்னேன்!
சாகா : அய்யோ கடிக்காதீங்க...நேரம் ஆகிவிட்டது, கெளம்பவேண்டும், சரி, உங்க பேர் சொல்லுங்க பிளிஸ்!
போ : சாரி சரகணன்! நீண்ட நேரமா இங்கேயே அமர்ந்து சோர்வடைந்திருப்பீங்க என்றுதான் ஒரு நகைச்சுவையா இருப்பதற்காக குண்டக்க மண்டக்க பேசுகிறேன்! மன்னிக்கவும்!
சாகா : சரி..பரவாயில்லை...பேர் சொல்லுங்க, எத்தனை டிக்கட் பதிவு செய்திருத்தீங்க?
போ : போக்கிரி! பதிவு செய்தது எனக்கு, என் தங்கை மற்றும் அவரது கண்வர் ஆக 3 டிக்கட்
சாகா : இதோ இருக்கு டிக்கட் தொகையை கொடுங்க பிளிஸ்!
போ : சரகணன்! டிக்கட் நான் கிளியர் செய்வதற்கு முன்னுக்கு நீங்க ஒரு விஷயத்தை எனக்கு கிளியர் செய்யமுடியுமா?
சாகா : ஆ...ஆகா...ஆரம்பிச்சுடீங்களா....என்ன சார் வேண்டும் உங்களுக்கு கேளுங்க சார், வீட்டுக்கு போக விடமாட்டீங்க போலயிருக்கே!
போ : சாரி...சரகணன்! இந்த நிகழ்ச்சி பத்திதான் கேட்கணும்! கோச்சுகாதீங்க சரகணன்!
ஆமாம்...உங்களுக்கு, சித்ரா, சிரேயா கோஷல், மதுமிதா, ஹரிணி, சாலினி இவுங்கல்லாம் யாருன்னு தெரியுமா?
சாகா : ஓ...இவுங்க எல்லாம் பாடகிகள் சரிதானே!
போ : ஆமாம் சாகா! முன்னணி பின்னணி பாடகிகள், இவுங்க எல்லாம் முன்னணி பாடகிகளாக வருவதற்கு பின்னணியில் எவ்வளவு கஷ்டபட்டிருப்பாங்கன்னு உங்களுக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது, ஆனா... நிறைய பாடல்களை பாடி கஷ்டபட்டுதான் வந்திருக்காங்ன்னு எல்லோருக்கும் தெரியும்தானே!
சாகா : ஆமாம்...அதுக்கு இப்ப என்ன சார்!
போ : இருங்க சொல்கிறேன்....இப்படி பின்னணியில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடித்தான் அந்த பாடகிகள் பிரபலமாகியிருக்காங்க...ஆனா இந்த சிங்கப்பூரில...இரண்டு பாடகிகள் இருக்காங்கப்பா...அதுவும் இரண்டே இரண்டு வரிகள்தான்....பாடுறாங்க....இரண்டு வரிகள் பாடியே...டோட்டல் சிங்கப்பூரையுமே சிரிக்க வைத்து பெரிய புகழ் பெற்றுவிட்டார்களே.. பேய் புடிச்சு..... ஆடுதம்ம்மா.......ம்ம்ம்ம்ம் ராத்திரியில் இந்த பாட்டை நினைத்தால் பயமாயிருக்கு தூக்கம் வரமாட்டேங்குது! எப்படி சார் ஒரு பேய் கூட குடும்பம் நடத்துவது! அப்படின்னு நான் கவலை படவில்லை...வந்தாஜி கவலைப் படுகிறார்!
சாகா : ஹ..ஹ...சரி ..சரி...இதுக்கு என்னால ஒன்னும் சொல்லமுடியாது, நீங்க நிகழ்ச்சிக்கு வந்து பாருங்க பிறகு எல்லாமே புரியும்! இந்தாங்க டிக்கட் புடிங்க ஆள விடுங்கப்பா...எஸ்கேப்!
போ : ஓகே சாகா...நிகழ்ச்சி நல்லபடியா நடக்க ஆண்டவன் உங்க எல்லோருக்கும் நல்ல உடல், உள்ள ஆரோக்கியத்தை கொடுக்க வேண்டிக்கொள்கிறேன். நிகழ்ச்சியில் சந்திப்போம்! குட் நைட்! ஆல் த பெஸ்ட்!

Tuesday, November 13, 2007

Wednesday, November 07, 2007

தித்திக்கட்டும் இந்த தீபாவளி!


என் வரைப்பூவின் வாசம் தேடி வந்த வாசகர்களே! தமிழ்தாயின் மக்களே! உங்கள் அனைவருக்கும் இந்த பிரியமுடன் பிரேம்குமாரின் பிரியமான.....தித்திக்கும் தீப ஒளி பெருநாள் வாழ்த்துக்கள்! ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் விரைவில் நல்லொளி பிறக்கட்டும்! நல்வாழ்வு கிட்டட்டும்! நலம் பல கிடைக்கட்டும்! வாழ்வில் நிம்மதி தொடரட்டும்!
இந்த தீபாவளி எல்லையில்லா இன்பத்தை எல்லோருக்கும் இறைவன் தந்து அருளட்டும்! உலகம் அமைதியாக இருக்கட்டும்! வாழ்க மக்கள்! பெருகுக மக்களிடம் இன்பம்! தீபாவளி வாழ்த்துக்கள்!

எல்லோரின் மனதிலும் நிம்மதி நிலைக்கட்டும்!