Wednesday, December 24, 2008

புத்துணர்ச்சியோடு வரவேற்போம் புத்தாண்டை!

புத்தாண்டு வாழ்த்துக்கள்...ஹய்ய்ய்ய்ய்ய்.....யாஆஆஆ...



வருகின்ற புத்தாண்டு
வளமான புத்தாண்டாக
வரப்போகிறது!

ஆண்டவனின் அருளில்
ஆனந்தமாகவும்
அமைதியாகவும் அமையும்
அடுத்த ஆண்டும்,
அடுத்து அடுத்து வரும்
அனைத்து ஆண்டுகளும்!
வாழ்த்துக்கள் கூறுகிறேன்
வயதில் மூத்தவர்களிடம்
வாழ்த்துக் கோறுகிறேன்!

இனிய புத்தாண்டு
இதோ பிறக்கப் போகிறது!
இணைந்து கொண்டாடுவோம்!
இறைவன் அருளால்
இனிவருவதெல்லாம்
இனியவைகளாகவே
இவ்வுலகத்திற்கு அமையட்டும்!

இருக்கின்ற இன்னல்கள் எல்லாம்
இன்றோடு தொலையட்டும்!
வருகின்ற வருடத்தில்
வசதிகளும் வாய்ப்புகளும்
ஆரோக்கியமும், ஆனந்தமும்
அனைவரது இல்லத்திலும்
அமையட்டும்!
அமைதியும் நிலவட்டும்!
அன்பும், அரவணைப்பும்
என்றும் எல்லோரிடமும்
எல்லையில்லாமல் இருக்கட்டும்!

வாழ்க எல்லோரும் வளமுடன்!!
எல்லாம் வல்ல இறைவன்
எல்லோரின் வாழ்க்கைக்கும்
எல்லாவற்றையும் அருளட்டும்!
வாழ்க...வாழ்க....வாழ்க வளமுடன்!


என்றும்
பிரியமுடன்
பிரேம்குமார் @ குடும்பம்
சிங்கப்பூர்.

Friday, December 12, 2008

எல்லோரும் நல்லாயிருந்தால் அதுதான் எனக்கு பொறந்தநாள் பரிசு!

நாயகனுக்கு நாம்
நல்ல வாழ்த்துக்களை
நயம்பட சொல்லியிருந்தோம்!

இதோ
தலைவருக்கும் பிறந்தநாள்
தாராளமாக வாழ்த்தலாம்
தமிழர்களே வாருங்கள்!!

தமிழகம் போன்று
தன்நிகரில்லா
தன்மானத் தலைவா!
ஸ்டைலின் அகராதியே!
உன்னை வாழ்த்துவதில்
உன்னையும் உன் நடிப்பையும்
உன்மையாக ரசிக்கும்
உன் ரசிகர்கள்
உளமாற நிறைவுகொள்கிறோம்!

வாழ்க நீ வையகம் உள்ளவரை...




கண்ணா....எனக்கு ஆயுசு நல்லாயிருக்குன்னா அதுக்கு காரணம் புகை பிடிப்பதை விட்டுவிட்டேன்! எனவே என் அன்பு ரசிகபெருமக்களே...உங்களில் யாரேனும் புகைபிடித்தால் இன்றோடு...இன்று..இன்றோடு...உங்க..உங்க தலிவர் சொல்றேன் விட்டுவிடுங்கள் கண்ணா...ஹ..ஹாஅ.ஹ்..அஹா...இதுதான் எனக்கு நீங்கள் கொடுக்கபோகும் என் பிறந்தநாள் பரிசு...என்ன சரியா...ஜீஜிபீ.!

கண்ணா....வரும்போது நாம எதுவும் கொண்டுவரவில்லை, போகும்போது நாம எதையும் கொண்டு போகபோவதில்லை...இடையில் என்ன சிகரெட்...அது இதுன்னு,,,விட்டுவிடுங்கள் ரசிகர்களே! தமிழக நண்பர்களே! வாழ்த்துக்கள்! ஜெய் ராகவேந்திரா!

Friday, November 07, 2008

வருடா வருடம் வந்தாலும் வயதாகவில்லை உனக்கு!




உலக நாயகனே
உலகில் இன்று நீ
உதித்த நாள்!
உளமாற வாழ்த்துகிறேன்
உன்னை!


வயதில்லை
வாழ்துவதற்கு
அதனால் உன்
அடிபணிந்து
ஆசிர்வாதம் பெறுகிறேன்!

சினிமாவில் நீ ஒரு
சிகரம்!
நடிப்பில் நீ ஒரு
நவரசம்!!
அன்பில் நீ ஒரு
அம்மா!
பாசத்தில் நீ ஒரு
பசு!

அதனால்தான் என்னவோ இந்த வருடம் பிறந்தநாளை இலங்கை தமிழர்களின் துயரத்தை மனதில்கொண்டு கொண்டாடாமல் விட்டுவிட்டாய்! இருந்தாலும் எல்லா உள்ளங்களும் உன் பிறந்தநாளை உள்ளதில் கொண்டாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்! வாழ்த்துக்கள் நாயகரே!
இன்னும் நூறு ஆண்டுகள் வாழ்ந்து, எல்லோரையும் மகிழ்விக்க ஆண்டவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை தந்து ஆசிர்வதிக்கட்டும்! பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Tuesday, October 28, 2008

உனைப்பார்த பின்பு நான்!

என்ன, என் இனிய நண்பர்களே! எப்படி இருக்கீங்க, எப்படி போனது தீபாவளி எல்லாம்? ஒரு வலியும் இல்லாமல் சென்றிருந்தால் சரி!! அப்புறம் என்ன! எல்லோருக்கும் என் இனிய அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள்! நாட்கள் போகிற வேகத்தில அடுத்த நாளே அதுவும் வந்துவிடும்போலவே அதுக்குத்தான் சொல்லி வச்சேன்!

மூன்றுநாள் விடுமுறை, மூன்று மணி நேரம்போல பறந்துபோச்சு! இருந்தாலும் இந்த நாட்களில் என்ன என்ன நடந்தது என்று எழுத ஆசைதான், ஆனால் தமிழில் எனக்குபிடிக்காதது....அதிகம் எழுதுவது படிப்பது!! எனவே நச்சுன்னு...ஓகேவா...

கடந்த சனிக்கிழமை இரவு சினிமா பார்கலாம் என்ற ஆசை வர நண்பனும் அதை ஆமோதிக்க, இருவரும் இரவு உணவை முடித்துக்கொண்டு நள்ளிரவு காட்சிக்கு சென்றோம்!! என்ன படம்....அட அதுதான் நம்ம தல நடிச்ச...ஏகன்!!

பில்லா பார்த்த பீதியில் இருந்த எனக்கு ஏகன் எப்படியிருக்குமோ என்ற ஏக்கம் இருந்தது! ஆனாலும் அடுத்த இரு நாட்கள் விடுப்பு என்ற சந்தோஷம்...சூப்பர் இரவு உணவு சாப்பிட்ட சந்தோஷம்...நல்ல திரையயரங்கம், பக்கத்தில் என்னுடைய நல்ல சினேகிதன்....இதுபோன்ற சிறப்பு அம்சங்களுடன் திரையரங்கத்தில் அமர்ந்து படம் பார்ததால் ஏகன் எனக்கு என்னவோ ரொம்ப பிடித்திருந்தது என்றுதான் சொல்லவேண்டும்!!

படம் பார்பதற்கு நல்ல மனநிலை வேண்டும் என்பது என்னவோ உண்மைதான் போலிருக்கு! ஆனால் அதற்கு பின் சில நண்பர்களிடம் படத்தை பற்றி கருத்து கேட்கும்போது அவ்வளவாக நல்ல கருத்து வரவில்லை! எனக்கு பிடிச்சிருக்குப்பா....
என்ன சிறப்பு அம்சங்கள் என்று கேட்டால்...சொல்வதற்கு ஒன்னுமில்லைதான்!!
1. நல்ல கேமரா!
இதில் ஒரு காமடி இருக்கு, திரைப்படம் பார்த்துகொண்டிருக்கும்போது, இந்த வார்த்தையை பக்கத்தில் இருக்கும் என் நண்பரிடம் சொன்னபோது, எனக்கு வலதுபக்கம் உட்காந்திருந்த ஒரு முந்திரிகொட்டை நபர் என்னிடம் சொன்னது, ஆமான்னே....இப்ப எல்லாம் டிஸிட்டல் கேமராதான் பயன்படுத்துகிறார்கள்! அவரிடம் அதுக்குமேல நான் பேச விரும்பவில்லை!
2. அஜித் நடிப்பு எப்போதும் போல இருந்தாலும் ரசிக்கும்படியும் இருந்தது!!
3. முக்கியமான அம்சம்...நம்ம நயன்ஸ்தான்....அட...அட....சொல்லும்படி ஒன்னும் இல்லீங்க.....அட..ஒன்னும் இல்லேன்னு சொல்றேன்ல...திரும்ப திரும்ப....என்ன என்னன்னு கேட்டா என்னத்த சொல்வது....போய் பருங்கப்பா.....
இப்படி பல நல்ல விஷயங்களும் கதையில்லா சூப்பர் கதையும் இருந்தது! எனக்கு பிடிச்சிருக்கு......




உன்னை பார்த்த பின்பு நான்...நானாக இல்லையே! என்னை மறந்து இன்று நான்......அட நான் பாடலீங்க...அப்புறம் ஆறு...பாடுறது? சொல்வோம்ல...









அட...நாந்தாங்க அஜித்குமார்! என்ன பாட்டுன்னு கேட்குறீங்களா! அட ஒன்னுமில்லீங்கோ....என்னுடைய "ஏகன்" படத்தில் அந்த நயன்ஸ் வருகின்ற அழகை பார்த்துதான் இப்படி பாடுகிறேன்!




அதுக்காக ஏகன் படத்தில் இப்படியெல்லாம் இருப்பேன்னு நினைத்து அதிர்ந்து போய்விடாதீங்க!! சும்மா....சும்மா....அப்படித்தான் இருக்கேன்? எப்படி இருக்கீங்க! அதான் சொன்னோம்ல....."சும்மா"




கெளம்புங்க...எல்லாரும் கெளம்புங்க...இன்றே போய் என் படத்தை எல்லோரும் பார்கனும்.. இல்லேன்னா......சுட்டுவிடுவேன்! இதுதான் நம்ம புது கெட்டப்பு, எப்படியப்பு இருக்கு?





என்ன....ஏகன் பார்க தயாராகிவிட்டீங்கலா! தலமேல உங்களுக்கு நம்பிக்கையிருந்தா வந்து பாருங்க....ரொம்ப நன்றி!

Friday, October 24, 2008

தீபாவளி தித்திக்கட்டும்! வாழ்த்துக்கள்!


நண்பர்களே, உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே வாழ்த்து அனுப்பி வைக்கவேண்டும் என்ற ஆசை வருடா வருடம் வருகிறது! ஆனா.....இயலாமல் போய்விடுகிறது, எனவே வழக்கம்போல வரைப்பூவில் வாழ்த்துச் சொல்லிவிடுகிறேன்!!
எல்லோருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!




இந்தியர்களின் கூட்டம்
இந்த அகல் விளக்குபோன்று
இவ்வுலகில் என்றும்
இனிதாய் ஒளிவீச
இவனின் வாழ்த்துக்கள்!

கூட்டமாக இருந்தாலும்
இது குதுகலம்குறையாத
இனியதமிழர் கூட்டத்தின்
அடையாளம்!




வானத்தை தொட்டுவரும்
வான வேடிக்கையை
வாடிக்கையாக கொண்டு
வருடா வருடம்
வந்து நிற்கும் இந்த
வளமான திருநாளை
வாழ்நாள் முழுவதும்
வளமாக வாழ்ந்துகொண்டாட
வாழ்த்துகிறேன்!

எல்லோருக்கும் என் இனிய தீப திருநாள் வாழ்த்துக்கள்! எல்லோரும் கொண்டாடுவோம்!
தீபத்திருநாளை கொண்டாடும்வேலையில் பாதுகாப்பிற்கும் முன்னுரிமை கொடுத்தால் ஆனந்தம் அனைவருக்கும் திகட்டாத தித்திப்பாக இருக்கும்! சந்தோஷமாயிருங்க!! சங்கடங்களை நினைக்காதீர்கள்! வருடத்திற்கு ஒருமுறை வரும் நல்லநாளை நல்லமுறையாக ஆனந்தத்துடன் அனுபவிக்கவும்! ஆண்டவன் ஆசிர்வதிப்பார்!! வாழ்த்துக்கள்!

Friday, October 10, 2008

பாதையை மாற்றிய பாதகன்! (கப்சா கவிதை)


நீ
கனியைப் போன்று
இனிமையானவள்!





உன்னை எனக்கு
ரொம்ப பிடிக்கும்
உன்னை மட்டும்
என்று கூட சொல்லலாம்!





அந்த அக்கறையில்
சொல்கிறேன்!
பாதை மாறி
பயணம் செய்கிறாய்!
ஊர் வந்து சேரப்போவதில்ல!





திசையை மாற்றிய
காவலன் இந்த
திருடனாக கூட இருக்கலாம்!





பாதையை மாற்றி காட்டிவிட்டு
ஒன்னும் தெரியாதவனாய்
ஒக்காந்திருக்கான் பாருங்கள்!
இதற்குமேல் வழியில்லை
என்பது என்னவோ உண்மைதான்!






இதற்குமேலும்
இப்பாதையில் செல்வதில்
இனிமையேது
இறைவன் இங்கே
அமைத்துக்கொடுத்திருக்கும்
இறுதி U திருப்பத்தை
இப்பொழுதேனும் பயன்படுத்தி
புதியவழியில்
புறப்படுவது புத்திசாலிகளுக்கு அழகு!






என் இதயத்துக்குள்
என்றுமே நீ
குறுதியாய் இருக்கப்போகிறாய்!
என்ற எண்ணத்தில் சொல்கிறேன்
என் இதயம் நல்லாயிருக்க
எனக்கு ஆசையாயிருக்கு!






ஆண்டவன் உன்னை
ஆசிர்வதிப்பார்
வாழ்க்கை இனி உனக்கு
வளமாய் அமையும்!






நான் சொன்ன 'U'திருப்பம் வேறு....
மீண்டுமா.....

Friday, September 26, 2008

இரவைக் கிழிக்கும் இயந்திரங்கள்!



ஏன், எதுவுமே இத்தனை நாளா எழுதவில்லை என்று கேட்க நினைத்தவர்களுக்கு, எதையாவது எழுதி கிழிக்கவேண்டும் என்றுதான் இந்த இரவைக் கிழிக்கும் இயந்திரங்கள். தலைப்பு என்ன தலைவர் படம் மாதிரி எந்திரம் கிந்திரம் என்று வருகின்றதே என்று நினைத்தால், அதில் தவறில்லை!

நீண்ட நாட்களுக்கு பிறகு தலைவர் படம் மாதிரி வந்து உங்களை தடுமாற வைக்க விருப்பமில்லை. சொல்லவந்ததை சட்டுன்னு சொல்லிவிடுகிறேன்..... சொல்லவந்ததை சொல்லாமல் இருந்தால் வருடங்கள் கூட வாரம் போல போய்கிட்டேல்ல இருக்கும்!

அட...ஒன்னும் இல்லீங்க சாமிகளா....எங்க ஊர விசேஷமுங்க....அட...பார்முலா ஒன்று கார்பந்தயம் நடக்குதுல்ல அதை பற்றிதான் சொனேன்....

என் அலுவலகம் இருக்கும் பகுதிக்கு வெகு அருகில்தான் இந்த பந்தயம் நடக்கிறது. இன்றுதான் சோதனை ஓட்டம் ஆரம்பம், மாலை மணி 4 லிருந்தே ஒரே சத்தம்...எங்கள் அலுவலகம் இருப்பது 25 மாடி, நடப்பது கிட்டதட்ட ஒரு ஒரு கிலோமீட்டர் தூரம்தான் இருந்தாலும், சத்தம் வ்வ்வ்வ்வ்வ்வ்...வாஆஆஆ...வ்வ்வ்வ்வ்வ்வ்......ஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....வ்வ்வ்வ்ய்ய்ய்ய்ய்ய்.....ஆஆஆஆச்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....... சும்மா கிழிக்கிது!

சரி..அலுவலகத்தில் இருந்து இறங்கி அது நடக்கும் இடத்திற்கு சென்றால், செவிப்பறை கிழிந்துவிடும் சத்தம்.....பெரிய கூட்டம் நின்று பார்கிறது....மன்னிக்கவும்...சத்தத்தை கேட்கிறது என்றுதான் சொல்லவேண்டும். பந்தயம் முழு பாதுகாப்பு அரண்களுடன் பொதுமக்கள் சிறுதுகூட பார்த்துவிடக்கூடாது என்ற நல்ல எண்ணத்துடனும் அமைக்கப்பட்டுள்ளதால், வெறும் சத்தம் மட்டுமே கேட்கமுடிகிறது! ஆனால்ல்ல்ல்.....ஆனால் என்ன இது சம்மந்தமான் முழு கதையும் மிகவிரைவில் புகைப்படங்களுடன் போடுகிறேன் சரியா....சுவையான தகவல்கள் பல காத்திருக்கு! எனவே நீங்களும் கொஞ்ச நாள் காத்திருங்கள்...அந்த பார்முலா ஒன்று தகவலுடன் மீண்டும் சந்திக்கிறேன்...வர்டா.....வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........வ்வ்வ்வ்வ்வ்வ்......வ்வ்வ்வ்வ்வ்....

Wednesday, July 30, 2008

ஆகாயப் பாவைகள்!



கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் ஆதாவது கடந்த ஞாயிற்றுக்கிழமை 27/07/08 அன்று, இந்தியாவின் சென்னை நகரத்திலிருந்து முதன் முதலாக இந்தியத் தொலைக்காட்சியில் முதல் முறையாக என்பதுபோல...முதல் முறையாக முழுக்க முழுக்க பெண்களே இயக்கும் விமானம் சிங்கப்பூருக்கு வந்து சென்றது. நமக்கெல்லாம் உண்மையிலேயே பெருமையாகத்தான் இருக்கிறது. இதை கேள்வி பட்டவுடன் சில பெண்கள் காலரை...இல்லை..இல்லை... ஷாலை தூக்கிவிட்டு கொள்வார்கள். சரி போகட்டும் விடுங்கள். இதுவரை வானொலி வரைதான் பெண்கள் என்பதெல்லாம் மாறி வானிலும் சாகசம் செய்யத் தொடங்கிவிட்டனர். அதுவும் இந்திய பெண்கள் சாதிப்பது இந்தியராக இருக்கும் எல்லோருக்கும் பெருமைதான். அந்த வகையில் அடியேனும் பெருமைகொள்கிறேன்.

ஏன் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிருவனம்தான் இந்த முயற்சியில் முதலில் இறங்கியிருக்கிறது. அந்த விமனத்தில் சாமிலி என்ற பெண் கமாண்டராக பதவி ஏற்றுகொண்டுள்ளார், அவர்தான் அந்த விமானத்தை செலுத்திவந்துள்ளார், அவருக்கு துணையாக அம்ரித் என்ற பெண்ணும் மற்றும் சில பெண் விமான சிப்பந்திகளும் இடம்பெற்றுள்ளனர். நல்லபடியாக வந்து சிங்கப்பூரில் தரையிறங்கி மீண்டும் இந்தியா சென்று பத்திரமாக சேர்த்துவிட்டனர்.

சரி...இதை ஏன் இங்கே நான் எழுதுகிறேன் என்று கேட்கிறீர்களா....காரணம் இருக்கு, அவர்கள் பத்திரமாக வந்து சேர்ந்ததால் தான் நான் இதை இங்கே எழுதிக்கொண்டிருக்கிறேன். என்ன புரியலையா....அய்யோ சாமி....எனக்கே தெரியாமல் அந்த முதல் பயணத்தில் நானும் வந்திருக்கிறென் என்பதுதான் கதையே!

ஒருவாரம் அலுவல வேலை சம்மந்தமாக இந்தியா சென்றிருந்த நான், மூன்று நாளில் அலுவலக வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு நம்ம பிறந்த ஊரான பட்டுக்கோட்டைக்கு சென்றிருந்தேன். பிறகு கடந்த ஞாயிற்றுக்கிழமைதான் சிங்கப்பூர் திரும்பினேன். திங்கட்கிழமை வேலைக்கு வருவதற்கு ஏதுவாக அமைந்திருந்தது அந்த விமானபயண நேரம், எனவேதான் அந்த விமானத்தை தேர்ந்தெடுத்து கிளம்பிவந்தேன். சத்தியமா சொல்றேன். இங்கு வந்து சேரும் வரை எனக்கு தெரியவே தெரியாது. ஆனால் ஒரு சந்தேகம் இருந்தது. போர்டிங்க் ஆபிஸர் முதல் அனைவரும் பெண்களாகவே இருந்தனர். பயணத்தின்போது விமாணியின் அறையிலிருந்து இரண்டு பெண்கள் மட்டும் பேசுவது கேட்க முடிந்தது. ஆனால் அப்போது என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. வந்து இறங்கி வீடுவந்து சேர்ந்து அன்றைய தமிழ்முரசு செய்திதாளை படித்தால் தெரிந்தது. நம்ம வந்த விமானம் ஒரு சாதனை பெண்களுக்கு என்று, நல்ல வேலை நம்மளுக்கு சோதனையா போகாமல் இருந்தவரை அந்த சாதனையை பாராட்டியே ஆகவேண்டும்.

இதில் ஒரு சுவராஷ்யமான விஷயம் என்னவென்றால், இந்த தகவலை உடனே நான் என் அப்பாவுக்கு முதலில் தெரியப்படுத்தினேன். அதுவும் பெருமையாக நான் சொல்லிகொண்டேன். ஆனால் அங்கே நடந்ததுவேறு, இதை கேள்விபட்ட என் தாய், மறுநாள் முழுவதும் பள்ளியில் உட்கார்ந்து சிந்தித்து சிந்தித்து....அவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் உச்ச நிலையை அடைந்திருக்கிறது என்றால் பாருங்கள், ஏன் என்று கேட்கிறீர்களா, அடுத்த நாள் இரவு நான் தொலைபேசியில் எங்கள் ஊருக்கு தொடர்புகொண்டபொழுது என் தங்கை போனை எடுத்தார்கள், அவளிடம் நலம் விசாரிப்பதற்குள், போனை வை அப்புறம் பேசு, அம்மாவுக்கு இரத்த அழுத்தம் சோதித்துக்கொண்டிருக்கிறென் என்று சொன்னாள். என் தங்கை ஒரு மருத்துவக்கல்லூரி முதுகலை மாணவி. வீட்டிலேயே அனைத்து சோதனை கருவியும் இருப்பதால் எளிதாக இருந்தது. என் அம்மாவுக்கு அன்று வழக்கத்தைவிட அதிகமாக கொதிப்பு இருந்திருக்கிறது, சிறிது நேரம் கழித்து எங்க அம்மாவிடம் பேசியபோது, அவர்கள் தன்னுடைய இரத்த கொதிப்புக்கு என்ன காரணம் சொன்னார்கள் தெரியுமா?!!

ஏன்ப்பா தம்பி, நேத்து நீ போன விமானத்தை இந்த குட்டியலுவ ஓட்டிகிட்டு போனாலுங்கலாமே அதாந்டா தம்பி அதை கேள்வி பட்டதிலிருந்து எனக்கு ஒரே பதட்டமா போய்விட்டது, அதிலிருந்துதான் இரத்த கொதிப்பு அதிகமாகிவிட்டது, இனிமே அதுமாதிரி விமானத்தில் ஏறாதடா.... என்று கவலையுடன் கூறியதை கேட்டவுடன், ஒரு சிறிய வருத்தத்திலும் என்னால் சிரிப்பை அடக்க மூடியவில்லை. எனது தாயார் ஒரு முதுகலை பட்டம் பெற்ற மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியை! அவர்களே அப்படி பேசியது எனக்கு வியப்பாக இருந்தது! ஒரே காரணம்தான், அவங்களே ஒரு பெண்ணாக இருந்தாலும் தன் மகன் பயணம் செய்யும்போது பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்ற பயம்தான் காரணம். பிறகு அவர்களிடம் எல்லாவற்றையும் விளக்கி கூறியபோதுதான் சமாதானத்திற்கு வந்தார்கள்! உண்மையைச் சொன்னால் ஆண்களைவிட திறமையாக அவர்கள் விமானத்தை செலுத்தி வந்ததாகத்தான் எனக்கு உணரமுடிந்தது. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....இனிமே விமானிகள் எல்ல்லாம் யாரு என்று தெரிந்துகொண்டுதான் விமானத்தில் ஏறவேண்டும்போலவே...இருப்பினும் அந்த சகோதரிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்!

Thursday, July 03, 2008

குசேலா...சாரல் தூவுதோ...

வணக்கம், நீண்ட நாட்களுக்கு பிறகு எழுதுவதால் அறிவுப்பூர்வமாகவோ அல்லது ஆக்கப்பூர்வமாகவோ எழுதி உங்களை வெறுப்பேற்ற விரும்பவில்லை, பிறகு என்ன செய்வது ஒரு நகைச்சுவையாக இருக்கட்டுமே என்று இப்படி எழுதி பார்த்தேன், குண்டக்க மண்டக்க யோசிச்சாதானே எல்லோருக்கும் இப்பெல்லாம் பிடிக்கிறது...இதோ...
தாயீ.....நீங்க எங்க ஊரு படப்பிடிப்புக்கு வந்த பிறகு ஒரு பய கூட கோயிலுக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டு இங்கே வந்து உங்களை பாத்துகிட்டு நிற்கிறார்கள்! தாயீ நாந்தான் இந்த ஊர் கோயில் பூசாரி...அவர்கள் யாரும் வராததால் கோயில்ல கூட்டமில்லை, தட்டிலும் நாலு காசு இல்ல....எனக்கு பொழப்பு கொடு தாயீ...சீக்கிரமே கிளம்பிவிடும்மா...நீங்க நல்லாயிருப்பீங்க...
கவலை படாதே வடிவேலு...கட்டாயம் சயந்தாரா திரும்பிவந்துவிடுவார்! உன் கவலைகளை நீ மறந்துவிடு! இந்த படத்தில் நீ சயந்தாராவோடு இணைந்து ஆட ஆண்டவன் உன்னை ஆசிர்வதிப்பார், வாழ்த்துக்கள்!
அய்யோ...பயமாயிருக்கு, நான் திரும்ப வந்திருக்கிறேன், கிழவன் வந்தாலும் வந்துவிடபோகிறான், வண்டியை விட்டு இறங்கவே பயமாயிருக்கு! ப...ப..ப்...ப..பயமாயிருக்கு! கி..கி..கி..கிழவனை நினைத்தால்...
அஹா...வந்துட்டாயா...வந்துட்டாயா... கிழவனுக்கு பயந்து வராமல் போய்விடுவாளோ என்று பயந்துகிடந்தேன்...ம்ம்ம்ம்ம்..ம்ம்ம்ம் வந்துட்டாயா!

நான் இல்லாம நடிக்கமாட்டேன்னு சொன்னீங்கலாமே...ஆமாவா! சொல்லுங்க வடிஸ்! ஏன் ஊளையிடுறீங்க....பயமாயிருக்கு!
சிவசிவ...எப்படியோ வடிஸ்சும் சயந்தராவும் சேந்துட்டாங்க நமக்கு இனிமே இந்த டூயட் பாட்டில் எல்லாம் ஆட வேண்டியதில்லை...நம்ம கிளம்பவேண்டியதுதான்...
கூல்...கூல்யா...நான் என்ன செய்வது எல்லா பாட்டுக்கும் வடிஸ்தான் சயந்தராவுடன் ஆடுவேன்னு அடம் பிடிக்கிறார், நான் என்ன செய்ய முடியும்,அவர் மார்கெட் இப்ப நம்ம மார்கெட்டை விட அதிகமா போச்சுல்ல...கூல்...
முடியல...என்னதான் பெரிய மனசோட விட்டுகொடுத்தாலும் வடிஸ் செஞ்சத ஏத்துக்க முடியல..அதான் தண்ணி பாட்டிலும் கையுமா ஆயிட்டேன்....என்ன செய்றதுன்னு எனக்கே புரியல...வடிஸ்...வடிஸ்...சயந்தர...சயந்தரா...
பரவாயில்லை விடுங்க...எதை எதையோ விட்டு கொடுத்துட்டேன். பழைய படி பட்டையை போட்டுகிட்டு இமையமலை பக்கம் கூலா போகவேண்டியதுதான்! என்ன சரியா...ஹ..ஹா..ஹா...
எல்லோருக்கும் வணக்கம் போய்ட்டு வருகிறேன்! நல்லாயிருக்க!!
ஏய்..ஏய்...சீக்கிரம் தள்ளுங்கடி! கஜினி அங்கிள் கோச்சுகிட்டு போகிறாராம்...சீக்கிரம் போய் சமாதானப் படுத்தி கூட்டிகிட்டு வரனும் அவர் இல்லாம நம்ம படத்தை யாரு பார்பா! சீக்கிரம் தள்ளு...தள்ளு...
என்ன வீனா அக்கா கஜினி அங்கிள சமாதான படுத்தி அழைத்து வந்துட்டீங்களா? ஹலோ..ஹலோ...என்ன குட்டிகளா இவ போய் சமாதான செய்தால் கஜினி வராமல் போய்விடுவாரா என்ன! ஏன்னா இவளுக்குத்தான் சின்ன வயதிலிருந்தே அவரை தெரியுமே! என்ன சரியா வாண்டுகளா? என்ன பொடுசுகளா...எப்படி எனக்கு வீனா அக்கா ஜோடின்னு கேட்குறீங்களா! நம்ம ஆளுதான் டல்லு...இவளுக்கு இப்ப மார்கெட்டே டல்லா போச்சுல்ல..
கருப்புதான் எனக்கு புடிச்ச கலருன்னு இப்ப இவுங்களும் பாட ஆரம்பிச்சுட்டாங்க...எப்படி நம்ம ஜோடி!

Monday, June 30, 2008

கொஞ்சம் காத்திருக்க முடியுமா?

எல்லோரும் என்னை மன்னிக்கவும். எழுதுவதற்கு நிறைய இருந்தாலும், நேரமில்லை என்று சொல்லி தப்பித்துக்கொள்வது நமக்கு வழக்கமான வழக்கம்தானே! அதைத்தான் சொல்கிறேன். நேரமில்லீங்க! கொஞ்சம் பொறுமையா இருங்க...எதையாவது எழுதிவிடுகிறேன். விரைவில்

Tuesday, June 03, 2008

பாடும் வானம்பாடி...வாழ்க...வாழ்க!





பாட்டுத்தலைவனுக்கு இன்று 04 ஜுன் 2008 பிறந்தநாள்! இவர் இவ்வுலகில் ஒருமுறை பிறந்ததால் என்னைபோன்ற இசைப் பிரியர்களுக்கு இன்பம் இவர் பாடலை ஒவ்வொருமுறையும் கேட்கும்போதும் பிறக்கிறது!

எல்லோரும் பாடுகிறார்கள், எல்லோருமே ரசிக்கிறார்கள்! என்னை பொறுத்தவரை இவரைவிட இனிமையாக யாரும் பாடிவிட்டதாகவோ இனிமேல் பாடிவிட முடியுமோ என்று தோன்றவில்லை!
எண்ணில் அடங்கா எத்தனைப் பாடல்கள்....தித்திக்கும் தேனாகவும், மெய்மறக்கும் வஸ்தாகவும், இதயம் நெகிழும் இனிமை! தமிழ் பாடல் ரசிகர்களுக்கு எத்தனையோ இனிமைகளை இவர் குரல் ஏற்படுத்திவருகிறது என்று சொன்னால் மிகையாகாது!

பாடும் நிலா பாலா என்றால் எல்லோருக்கும் மனதில் ஒரு இனிமை பிறக்கிறது! அவருடைய நாதத்தில் பிறக்கும் ஓசை அவருடைய குரல்வளையும் தாட்டும்போது ஏனோ தேனாக மாறிவிடுகிறது! இறைவனுடைய இணையற்ற படைப்பு இவர்!

சிறுவயதிலிருந்தே எனக்கு இவரை எக்க சக்கமாக பிடித்துவிட்டது! நான் பிறந்த 70 -80 காலகட்டத்தில்தான் இவருடைய பாடல்கள் இனிமை பெற தொடங்கி 80 களில் சக்கைபோடு போட்டது! 80 களில்தான் எனக்கும் பாடல்களை கேட்டு ரசிக்கும் வயது தொடங்கியது என்பதால் ஆரம்ப காலத்திலிருந்தே அவருடைய பாடல்கள்களை ரசிக்க கற்றுக்கொண்டதின் காரண்மாக இன்றுவரை பாலா என்றால் மனதில் பாலை வார்பதுபோன்ற உணர்வு உள்ளத்தில் ஊற்றெடுக்கிறது!

ஒரு காலகட்டதில் அவருடைய பாடல்களை சதா வீட்டில் பாடிக்கொண்டே இருப்பது கூட உண்டு! ஏன் இன்றுவரை நான் பதிவுசெய்து வைத்துகொண்டு கேட்கும் பாடல்களில் 90 சதவீதம் அவர் பாடல்கள்தான்! அவர் மீது ஒரு பக்திகூட உண்டு என்று சொல்லலாம்! அதற்கு சில காரணங்களும் உண்டு! கல்லூரி, பல்கலை கழகங்களில் படித்த கால கட்டங்களில் அவருடைய பாடல்களை சிறப்பாக இல்லையென்றாலும் சுமாராக பாடி பரிசுகள் வாங்கியிருக்கிறேன் என்று சொல்லிக் கொள்ள பெருமைபடுகிறேன்! ஆனால் இன்று அந்த குரல்வளம் முழுவதும் எங்கேபோய்விட்டது எனக்கு என்று எனக்கே தெரியவில்லை!

இவர்மேல் கொண்டிருந்த ஆர்வத்தின் காரணமாக என்னுடைய பெயரின் சுருக்கத்தையே மாற்றி அமைத்துக்கொண்டேன் என்றால் பாருங்கள்! இவருடைய பெயர் சுருக்கம் sP.B தானே. என்னுடைய பெயரில் எப்படி மாற்றம் என்றால்... ஏற்கனவே என்னுடைய பெயரை ஆங்கிலத்தில் என் தத்தை BREM என்று பள்ளியில் சேர்க்கும்போதோ கொடுத்துவிட்டதால் அதில் B அமைந்துவிட்டது, அப்பா பெயர் P என்ற எழுத்தில் தொடங்கும் எனவே P.B என்று இயற்கையிலேயே அமைந்துவிட்டது! இப்ப "S" தேவை என்ன செய்வது, பெரிய கஷ்டமில்லாமல் போய்விட்டது! ஏனெனில் என்னுடைய அம்மா பெயர் S ல் தான் ஆரம்பிக்கும், அதை முன்னே போட்டேன். எனக்கு முன் என் அம்மா அப்பா இருப்பதால் என்னுடைய பெயர் SP.B ஆகிவிட்டது! அதற்காக நான் sp.B மாதிரி பாடிவிட முடியுமா என்றால் வாய்பே இல்ல! அவரு அவருதான், இவரு இவருதான்! ஹி..ஹி..ஹீ....

இதில் என்ன ஒரு ஆச்சர்யம் என்றால்! அக்டோபரில் பிறப்பவர்கள் அழகாக இருப்பார்கள் என்பதைபோல், ஜூன் மாதம் பிறப்பவர்கள் நல்லா பாடுவார்கள் என்பது தெரிகிறது ஏனென்றால் நான் பிறந்ததும் இதே மாதத்தில்தான் இன்னும் ஒரு சில நாட்களில் நம்ம பொறந்தநாளும் வருதுல்ல! என்ன....எஸ்.பி.பி சாருக்கு 66 முடிந்து 67 ஆரம்பமாகிறது! நமக்கு 32 வயது முடிந்து 31 ஆரம்பமாகிறது அவ்வளவுதான் வித்தியாசம்.......

எப்படியோ...இப்படியெல்லாம் கலக்கிவரும் நம்ம இசைசகாப்தம், பாடலரசர்! பத்மஸ்ரீ, டாக்டர் மரியாதைக்குரிய SP.B அய்யா அவர்கள் என்றுமே நல்லாயிருக்க என்னுடைய எண்ணங்கள் என்றுமே இறைவனை வேண்டியபடியே இருக்கும்! இவ்வுலகம் இருக்கும்வரை அவரும் அவருடைய பாடல்களும் நீண்ட ஆயுளுடன் இருக்க ஆண்டவன் ஆசிர்வதிப்பார்!

டாக்டர் சார்.....பிறந்தநாள் வாழ்த்துக்கள்! வாழ்க பல்லாண்டு! வளர்க உமது புகழ்!

பாடும் நிலவே உமக்கு
தேன் கவிதை ஒன்று!

தேனே...தேனே!
உன் பாடலை ரசித்தேனே!
மானே...மானே!
உன் பாடலை கேட்டால்
மனம் மாறி மானாக
துள்ளி குதிக்குது தினமும்தானே!

Thursday, May 08, 2008

குண்டக்க மண்டக்க விருந்து!

வணக்கம் நண்பர்களே.... நீண்ட நாட்களுக்கு பிறகு பிரேம் எதையோ பெரிய விஷயத்தை எழுத வந்துவிட்டதாக் நீங்கள் நினைதால் அது உங்கள் பெருந்தன்மை, ஆனால் இங்கே ஓன்னும் இல்லை, சும்மா ஒரு சின்ன குட்டி கதை, அட நடந்த சம்பவம்தான்! நமக்கு நடக்கும் சிறு சிறு சம்பவங்களை எழுதுவதற்குதானே இந்த பிலாக்ஸ்பாட் வைத்திருக்கிறோம்! வந்து படிப்பவர்கள் தலைவிதியெல்லாம் பற்றி கவலைப்படக்கூடாது, நாம கூப்பிட்டோமா.....அவர்களாக வருகிறார்கள் படிக்கிறார்கள், பிடிக்கவில்லையென்றால் யார் என்ன செய்வது! ஹ...ஹ.... கோச்சுகாதீங்க நண்பர்களே....உங்களிடம் இப்படி உதார் விடாம, வேற யாரிடம் கலாய்ப்பது! ஓகேவா கதைக்கு போவோமா.....

ம்ம்ம்ம்...சரி....எல்லோரும் கல்லை கீழே போடுங்க அப்பதான் கதை சொல்வேன்! நல்ல பிள்ளைங்க சரியா....

ஒரு ஊர்ல...கமலா..கமலான்னு இரண்டு....சாரி ஒரு வானொலி படைப்பாளர் இருந்தாங்கலாம், அவுங்க எப்ப பார்தாலும் தன்னுடைய படைப்பு அங்கத்தின் ஒரு பகுதியாக, குண்டக்க மண்டக்க என்ற ஒரு அங்கத்தை வைத்திருக்கிறார்கள், ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு குண்டக்க மண்டக்க கேள்வி கேட்பார்கள், நாங்களும் அடித்து பிடித்து கொண்டு, அலுவலகத்தில் யாருக்கும் தெரியாம திருட்டு தனமா உட்கார்ந்து யோசித்து பதில் சொல்வோம்!

அன்று வழக்கம்போல் அவர்களுடைய குண்டக்க மண்டக்க கேள்வி கேட்கப்பட்டது, ஆனால் ஒரு போட்டி அங்கமும் இருந்தது, ஆதாவது முதலில் அந்த கேள்விக்கு பதில் அளிப்பவருக்கு 50 டாலர் பற்றுச்சீட்டு பரிசு!

பொதுவாகவே அந்த அங்கத்திற்கு சரியான பதில் அனுப்பும் ஒருசிலர்களில் நானும் ஒருவன் என்று சொல்லாம், சொல்லமலும் இருக்கலாம்! அந்தவகையில் அன்று நாந்தான் முதலில் அனுப்பியதாக அந்த படைப்பாளர் அறிவித்தார், இதில் என்ன கொடுமை என்றால் முதலில் அனுப்பியவர்களிடம் அவர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசுவது வழக்கம், நம்ம அதிஷ்டம்....அப்படி ஒன்றும் நடக்கவில்லை! பிறகு குறுஞ்செய்தி மூலம் என்னுடைய தகவல்களை கேட்டு தெரிந்துகொண்டார்!

இந்த கூத்தை ரேடியோவில் கேட்டுகொண்டிருந்த என் நண்பர்களில் ஒருவர் உடனேயே மற்ற 3 நெருங்கிய நண்பர்களிடமும் தகவலை தெரிவித்துவிட்டார்< எப்படி தெரியுமா>>> ஒலியில் பிரேமுக்கு 50 வெள்ளி கிடைத்திருக்கு என்று சொல்லிவிட்டார்!

என்ன நடந்தது!!! அடுத்த நாள் மாலை ஆப்பு காத்திருந்தது, என் கெரகம்...அன்று மாலை அந்த நண்பர்களில் 3 பேர் வழக்கமாக சந்திக்கும் இடத்தில் இருந்தனர், அலுவலகம் முடிந்து அங்கே சென்றேன்....வழக்கத்துக்கு மாறா இருந்தது அவர்களுடைய வரவேற்பு! வரவேற்பு என்று நினைத்து நானும் ஏமாத்து போய்விட்டேன்...அது வரவேற்பு இல்லை ஆப்பு என்று அப்புறம்தான் தெரிந்தது!

டேய்..பிரேம்! கமலா உனக்கு 50 டாலர் கொடுத்ததாமே! வாங்கிட்டாயா....சரி, நீ வாங்கு வாங்காமல் போய். முதலில் இதற்கு பார்டி வைத்துவிட்டு போ! என்று பிடித்த பிடியில் நின்றுவிட்டார்கள்! அன்பாய் வேறு கேட்டுவிட்டதால், நானும் கொஞ்சமும் யோசிக்காமல் இதுக்கு என்ன இருக்கு, உங்களுக்கு இல்லாத பார்டியா வாங்க எல்லோரும் என்று சொல்லி கடல் உணவகம் சென்றுவிட்டோம்!

வழக்கம்போல் சாப்பிடாமல் சற்று குறைவாகவே பாவிகள் சாப்பிட்டார்கள்....சாரி நண்பர்கள் சாப்பிட்டார்கள்! இதில் பீர் வேற ஊத்திகிட்டார்கள்! நான் ஒரே ஒரு பிரைட் ரைஸ், ஒரு வாட்டர் மெலன் சூஸ்! கொஞ்சம் பெப்பர் சிக்கன் அவ்வளவுதான், மற்றவைகள் அனைத்தையும் அன்பு நண்பர்கள்தான் கட்டினார்கள்!

கடைசியில் பில் வரும்ல...பின்ன வராதா...அதெல்லாம் வரும்! மன்னிக்கனும் நீங்க நினைப்பது புரிகிறது, அந்த கடையில் மாவாட்ட முடியாது, வேண்டுமென்றால் இறாலுக்கு தோல் உரிக்கலாம்! 76 டாலர் பில்! பெரிய தொகை இல்லைதான், இருந்தாலும் இந்த பார்ட்டி எதுக்கு என்று பார்த்தால்தான் உங்களுக்கு இது பெரிசா இல்லையா என்று புரியும்!

வெறும் 50 டாலர் பற்றுச்சீட்டு வாங்கியதற்கு பார்டி 76 டாலருக்கு! இப்ப சொல்லுங்க இது பெரிசா இல்லையா! இல்லங்க எனக்கு பெரிசா தெரியல...என் நண்பர்களுடன் உட்காந்து ஒன்னா சாப்பிடும் பாக்கியத்திற்கு என்னால் இயன்ற எவ்வளவு வேண்டுமென்றாலும் செய்ய தயாராக இருந்ததால்தான் அந்த பார்டி!

சரி...பற்றுச்சீட்டு வாங்கியாச்சா....நீங்க கேட்பது கேட்கிறது, யாருக்கு தெரியும். அட...எதுக்கு அந்த பற்றுச்சீட்டு, எங்கே போய் வாங்குவது என்று கூட எனக்கு இன்றுவரை தெரியாது! இந்த 50 டாலருக்காக மீண்டும் அந்த வானொலி படைப்பாளர் அக்காவை தொந்தரவு செய்ய விரும்பவில்லை!

என்னைப் பொறுத்தவரை எனக்கு வானொலியில் பரிசு கிடைத்தது என் நண்பர்களுக்கு மகிழ்ச்சி, என் நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்தது எனக்கு மகிழ்ச்சி அது போதும்! நன்றி

Wednesday, April 30, 2008

உழைப்பின் வாரா உயர்வும் உண்டோ!





உழைத்து உழைத்து
உலகத்தை
உறுதியாக்கிவிட்டு
களைத்துப்போய்விட்ட
காளையர், கன்னியர்களுக்கு
இன்று ஒருநாள்
இன்பத்தையும் ஓய்வையும்
இனிதே தரட்டும்!

எல்லோருக்கும்
ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து
டயர்ட் ஆகியவர்களை தவிர
எல்லோருக்கும்
என்னுடைய
உளம் கனிந்த
உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்!

உழைப்பு உழைப்பு என்று
உரைக்கும் போதுதான்
உழைக்க ஆர்வமாயிருக்கிறது
ஆனால் இன்று விடுமுறை....ஹ..ஹா..ஹா...
வாழ்த்துக்கள்!

Friday, April 18, 2008

படிங்க....முடிஞ்சா சிரிங்க!

கவிதைகளுக்கு மத்தியில் சில கடிகளையும் அவ்வப்போது தந்தால்தான் இங்கே வந்துபோகிறவர்கள் நொந்துபோக ஏதுவாக இருக்கும்! வந்தாச்சுல்ல...அப்புறம் என்ன முழுசா படிச்சுட வேண்டியதுதானே! வேற வழியேயில்லை.....


சரி..என்ன நடந்தது, இப்ப சொல்லப்போகிற கடி, உண்மையிலேயே நடந்ததுப்பா! கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் என்னுடைய நண்பர்களில் ஒருவர் செங்காங் பகுதியில் வீடு வாங்கி குடிபுகுந்தார், குடிநுழையும் விழாவிற்கு (House warming) என்னையும் அழைத்திருந்தார். நெருங்கிய நண்பர் என்பதால் செல்லவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஓய்வுதான், பகலில் நல்ல ஓய்வுஎடுத்துவிட்டு மாலையில் அங்கே செல்ல முடிவெடுத்திருந்தேன்!

அன்று, மாலை நேரத்தில் அந்த நிகழ்ச்சிக்கு செல்ல ஆயத்தம் ஆகும் வேலையில், என்ன வாங்கிச் செல்லவது, திடீர் குழப்பம், நானும் மாற்றி மாற்றி யோசித்தேன் ஒன்றும் மனதில் தெளிவாக தெரியவில்லை! விலை மதிப்புமிக்க பொருள் வாங்கவேண்டிய அளவிற்கு அவசியமில்லை என்றிருந்தபோதும், சரி...என்னதான் வாங்குவது......குழப்பத்துடன் லிட்டில் இந்தியா பகுதிக்குச் சென்றேன். வழக்கம்போல என்னுடைய நண்பர்களை சந்தித்தேன். அவர்களிடம் நிகழ்ச்சிக்கு செல்லவேண்டியது பற்றி கூறினேன். அவர்களும் ஆளுக்கு ஒரு ஐடியா தந்தார்கள். ஆனால் எனக்கு உடன்பாடு இல்லை.

கடைசியில் நானே முடிவெடுத்து, அவர்களிடம் கூறினேன்! என்ன கூறினேன்....இப்படியே கடையோரமாக செல்கிறேன் வழியில் என்ன என் மனதுக்கு பிடிக்கிறதோ அதை வாங்கி கொண்டுபோகிறேன் என்று சொன்னேன். முக்கிய விஷயம் என்னவென்றால் அதோடு நான் நிறுத்தவில்லை....அப்படி சொல்லிவிட்டு அங்கிருந்த ஒரு நண்பரிடம்..... சரி....நான் ஒருபொருளை வாங்கி சென்றால் , அதே போன்ற பொருள் ஏறகனவே அவர்கள் வீட்டில் இருந்தால் என்ன செய்வது அண்ணே! என்று என் நண்பரிடம் கேட்க.......
அவர், கொஞ்சமும் தயங்காமல்.....நீ வாங்கிகொண்டு போகும் பொருள் மாதிரி அங்கே பயன்பாட்டில் இருந்தால், நீ வாங்கிகொண்டு போகும் புது பொருளை கொடுத்துவிட்டு அங்கே ஏற்கனவே இருக்கும் அதை எடுத்துகொண்டு வந்துவிடு.....என்று cool ஆக பதில் சொன்னதுதான் மிச்சம்....அங்கிருந்த அனைவரின் சிரிப்பையும் அடக்க அரைமணி நேரம் ஆகிவிட்டது...அட நாந்தான் எப்பவும் அவர்களை மணி கணக்கில் சிரிக்கவைத்துகொண்டே இருப்பேன்...ஆனால் அன்று அவர் அடித்த ஜோக்கை...இன்று நினைத்தாலும் சிரிப்புதான் வருகிறது.....உங்களுக்கு எப்படி? சிரிப்பு வரவில்லையா?! அட இன்னும் நான் ஜோக்கே சொல்லவில்லையே......இது எப்படி இருக்கு!!!

Thursday, April 10, 2008

என்ன எழுதுவது என்று யோசித்தபோது...

காலத்தின்
நொடி,
நொடிப்பொழுதில்
நிமிடமாகி
மணியாகி
நாளாகி நாளாகி
மாதமாகி
மாதம் பலவாகி
வருடமாகி
வருடம் பலவாகி!

எத்தனை
வருடங்களாகியும்
என் இதயம்
எங்கிருக்கிறதோ
என்றும் அங்கேயே!
இதயத்திற்கு
இடமாற்றம் என்றும்
இருந்ததில்லை!
இதயத்திற்குள்ளும்
இடமாற்றம்
இருந்துவிட்டால்
இறந்துவிடுமே
இதயம்
என்று தெரிந்து
என் இதயத்தை
என்றோ உன்னிடம்!


என்ன நண்பர்களே...கவிதையை படித்தீர்களா? கவிதை எங்கிருக்கு என்று கேட்ககூடாது, என் பிலாக் வந்துட்டா நான் சொல்கிற பொய் எல்லாவற்றையும் கேட்டுகனும் சரியா! அது! அப்புறம் என் கவிதை படித்துவிட்டு.....கரகாட்டக்காரனில் செந்தில் கவுண்டரிடம் கேட்பதுபோன்று, இதயத்தை வச்சிருந்த உடம்பு இங்கிருக்கு.....இப்ப இதயதை யாரு வச்சிருக்கா என்றெல்லாம் கேட்க பிடாது ஓகேவா!!! யார்..யாரு காரை....சாரி இதயத்தை எங்கே வச்சிருக்காங்க என்று கணக்கெடுப்பதா என்வேலை...படிச்சாச்சுதானே...அப்புறம் என்ன! என்ன பார்ட்டி வைக்கனுமா? எதுக்கு? படிச்சதுக்கா?!! எத்தனை பேர் கிளம்பியிருக்கீங்க!

Wednesday, April 02, 2008

கவிதை கவிதையா....வருதுப்பா!!!

மறுபடியும்
வரவேண்டும்
வரம் வேண்டும்!
கரம் வேண்டும்
தர வேண்டும்!
மனதிற்கு,
உரம் வேண்டும்
உடன் வேண்டும்!
மதிமயக்கும்,
சுரம் வேண்டும்
சரமா வேண்டும்!
குரல் வேண்டும்!


எனக்கு
சம்மந்தமில்லா
என் வரிகள்
என்னை இங்கே
சந்தோஷப் படுத்தி...
எனக்கு
சம்மந்தப்பட்ட
என் வலிகள்
என்றுமே என்னை
சங்கடப்படுத்தியே....


நான்
பிடித்த பேனா
எனக்கு
பிடித்த வரிகளை
எழுதித் தந்தது!
என்னை
பிடிக்காதவருக்கு
எழுதுகிறேன்
என்று தெரிந்தும்!

ஆஹா..ஆஹா...கவிஞன் ஆகிட்டேனோ?!
ஏதோ வந்தா இதெல்லாம் வருமாமே!
எனக்கென்னவோ இதெல்லாம் வருகிறது ஆனா
அது வந்தமாதிரி தெரியலையே!!

என்னது அதுவல்லையா,
ஏழு கழுதை வயசாச்சு அது வரலையா...ஆசையப்பாரு....எடு செருப்ப...

Monday, February 04, 2008

இது என்ன மாயம்! எதுவரை போகும்!

உயிரை
விலகச் சொல்ல
உடலுக்கு
உரிமையில்லை!
உரிமையில்லா
உடலில்
உயிர் இருந்தும்
உறவுமில்லை!

தூரத்தில் சென்றுவிட்டால்
துயரம்
தூரமாகிவிடாது!
துயரத்தின் வேகம்
தூரயிருந்தால்
தூரமாயிருக்கும்!

என்ன எழுதியிருக்கிறேன்
எனக்கே புரியவில்லை!
இப்படி
எழுதிவிட்டால்
இது கவிதை என்று
எவன் சொன்னது!
நீங்க யாரும் சொல்லமாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்
நன்றி! நன்றி! நன்றி! அட அடிக்கடி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி பார்கிறோம்ல....

Monday, January 28, 2008

மீண்டும் மலாக்கா!



அன்புள்ள அன்பர்களே....நண்பர்களே! வம்பர்களே! அனைவருக்கும் என் வணக்கம்! தலைப்பு பார்ததும் புரிந்திருக்குமே! ஆமாம்...ஆமாம்! ரொம்ப சரியா கண்டுபிடிச்சுட்டீங்க!

வெள்ளிக்கிழமை இரவு, என்னுடைய நெருக்கமான நண்பர்களில் ஒருவர் என்னை அழைத்து, என்ன பிரேம், வார இறுதியில் என்ன புரோக்கிராம் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்க, நானும் சற்று அவசரப்பட்டு வழக்கம்போல உண்மையைச் சொன்னேன்! அட ஒன்னும் வேலை இல்லை இரண்டு நாட்களுக்கும் நல்லா சாப்பிட்டு விட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ரசித்தவாறு வீட்டில் தூங்க வேண்டியதுதான் என்றேன்! இதுதான் தக்க தருணம் என்று நினைத்த என் நண்பர், ஒரு போடு போட்டார், நாளை காலை மலாக்கா வரைக்கும் போய்விட்டு வரலாம் வருகிறீர்களா, என்னுடைய தங்கைக்கு சற்று உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறது என்று அவருடைய கணவர் இப்போதுதான் போன் செய்தார். எனக்கும் மனசு சரியில்லை, ஒரு எட்டு போய்விட்டு வரலாம் என்று நினைக்கிறேன், எனவே நீங்களும் ஓய்வாதான் இருக்கீங்க வாங்கலேன் அப்படியே ஜாலியா இரு பயணம் போய்விட்டு வரலாம் என்று அழைக்க....

எனக்கு வார இறுதியில் வீட்டில் அமர்ந்து வெட்டி பொழுது போக்குவதைவிட நானும் கூட அந்த அன்புச் சகோதரியை கண்டு நேரில் நலம் விசாரித்துவிட்டு வரலாமே என்ற நோக்கத்தில் ஓகே சொல்லிவிட்டேன்!

திட்டபடி, சனிக்கிழமை காலை லிட்டில் இந்தியா தொகுதியில் இருவரும் பசியாறிவிட்டு அப்படியே மலேசியாவுக்கு பேருந்தில் புறப்பட்டு இருநாட்டு எல்லைகளையும் கடந்து மலாக்கா சென்றடைந்தோம்! மதியம் அருமையான சாப்பாடு தங்கை சமைத்திருந்தார், உடல் நிலை தேரியிருந்தது அவருடைய நல்ல சமையலில் தெரிந்தது! சாப்பிட்டுவிட்டு ஒரு நல்ல தூக்கம், பொதுவாக பகலில் தூங்குவதில்லை நீண்ட நாட்களுக்குபிறகு ஒரு குட்டி பகல் தூக்கம்!

மாலை எழுந்து அப்படியே ஷாப்பிங்க் சென்றோம்! ஷஸ்கோ என்ற நிருவணம் வீட்டுக்கு அருகில் இருந்தது அதில் ஒரு சுத்து...பெருசா ஒன்னும் வாங்கவில்லை! அதற்கு பிறகு அங்கிருந்து நீண்ட தொலைவில் இருந்த ஒரு உணவகத்திற்கு இரவு உணவுக்காக அழைத்துச் சென்றார்கள்! " பாக் புத்ரா " அந்த உணவகத்தின் பெயர்...தந்தூரி உணவகம்! சுவையான உணவு, ரொம்பவே நல்லாயிருந்தது! ஒரு கட்டு கட்டிவிட்டு வீடு திரும்பினோம்! இப்படியாக இரண்டு தினங்கள் ஓடிவிட்டது, ஞாயிறு மாலை கிளம்பி சிங்கப்பூர் வந்துவிட்டோம்!

மலேசியா எனக்கு மிகவும் பிடித்த நாடு அதிலும் மலாக்கா செல்வதென்றால் ரொம்பவும் பிடித்திருக்கிறது! இப்ப மலாக்கா போன விஷயத்தை என் நண்பர்களிடம் சொன்னபோது அவர்கள் கூட என்னை நக்கல் செய்தார்கள்....ஏய்..ஏய்....அங்கே நண்பரின் தங்கை மட்டும்தான் இருக்காங்கலா....அல்லது ஏதாவது மச்சினிச்சி யாராவது இருக்காங்களா? என்று கலாய்த்தார்கள்! நான் அப்படியாபட்ட ஆள் இல்லை என்று அவர்களுக்கு தெரியும், இருந்தாலும் நண்பர்கள் ஒருவரையொருவர் கலாய்ப்பது ஜாலிதானே! ஆமாம்...நீங்க இங்க என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க??!!!!! என்ன? கதை படிக்கிறீங்களா? ஏங்க எனக்குதான் பொழுதுபோகவில்லை சும்மா இதை எழுதினேன்....உங்களுக்கு இருக்கிற ஆயிரம் வேலையில இதையெல்லாம் போய் படித்துகிட்டு அய்யே....போங்க...போங்க..போய் உறுப்படியா யாராவது எழுதியிருப்பாங்க அத படிச்சு அறிவாளி ஆகுங்கப்பா...என்னுடைய பதிவை படிச்சா, கடுப்புதான் ஆவீங்க! இருந்தாலும் ஒரு பெரிய நன்றி! வந்ததுக்கும் படித்ததுக்கும்! மீண்டும் சந்திப்போம்!

Wednesday, January 23, 2008

வரம் வேண்டா தவம்!


தலைப்பே தடுமாற்றமாக இருக்கா? இருக்காதா பின்னே! தவமே வரம் வேண்டிதானே இதில் என்ன வரம் வேண்டா தவம்! அட ஒன்னுமில்லீங்க, சும்மா ஒரு மாற்றத்திற்காக மாற்றி எழுதினேன்! ஆனால் இதன் மூலம் ஒன்று சொல்ல நினைக்கிறேன், அதுதான் தலைப்பில் சிறு குழப்பம்!

வரம் வேண்டி தவமிருந்து, கிடைத்ததைக்கொண்டு தான் நலமுடனும், மகிழ்வுடனும், புகழுடனும் வாழ்வதற்கு ஆசை கொண்டு தவமிருப்பது எனக்கு என்னவோ உடன்பாடில்லா செய்தியாக தோன்றுகிறது! எனவே எதுவுமே வேண்டாம் ஆளை சும்மா விட்டால் போதும் ஆண்டவா! கொஞ்ச காலம் வாழ்வில் அமைதியாக வாழ்ந்துவிடுகிறேனே! நீயாக பார்த்து என் தலையில் என்ன எழுதியிருக்கியோ அதன் படி எல்லாம் நடக்கட்டும், என்னுடைய தவத்திற்காக நீ எதையாவது கொடுத்து என்னை அசாதரண மனிதன் அந்தஸ்துக்கு உயர்த்திவிட வேண்டாம் என்பதுபோல சொல்வதற்காக இந்த தலைப்பு!

கொஞ்ச காலம் இரு கண்களையும் மூடி....இதயத்திற்குள் அடங்கி கிடக்கும் ஆயிரம் ஆயிரம் ஆசைகளையும், பாசங்களையும், அவைகளையும், இவைகளையும் மூட்டை கட்டிவிட்டு, அப்படியே அமைதியாக நம்ம புத்தர்போல இருந்தால், நம்முடைய மனதிற்கு ஒரு அமைதி கிடைக்குதோ இல்லையோ....நம்முடைய தொந்தரவு இல்லாமல் மற்ற ஜீவன்களாவது நிம்மதியாக இருக்கும் இல்லையா...எனவே மக்களே! உங்களுக்கென்று எழுதப்பட்ட வேலைகளையும், கடமைகளையும் மட்டும் கவனித்துக்கொண்டு, மற்ற விஷயங்களில் புத்தராக இருந்து, அடுத்தவர்களை சுதந்திரமாக சிந்திக்க வழி விடுங்கள்!

என்ன கதை சொல்கிற மாதிரி இருக்கா....அட...என்னவோ ஆரம்பித்து எப்படி முடிப்பது என்று தெரியாமல் ஏதோ எழுதியிருக்கிறேன்! மன்னிக்கவும், முடிந்தால் ஒருநாள் புத்தராக அமைதியாக இருக்க முற்படுங்கள்! அதில் யாருக்காவது நல்ல பிறக்கும்! என்ன முடியுமா? சற்று சிரமம்தான்! நாலு பேறு நல்ல்லாயிருக்கவேண்டும் என்றால் நீ சும்மா இருந்தாலே போதும்! இது கமல் சொல்லவில்லை.....நான் சொன்னது! ஹி...ஹி....ஹி....என்ன பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கா....பின்ன....பைத்தியக்காரன் பிலாக்குக்கு வந்துட்டு தெளிவா வெளியாக முடியுமா என்ன?!!!!!!

Thursday, January 17, 2008

பொங்கல்....சும்மா...பொங்குதுல்ல...




என்ன இனிய தமிழ் மக்களே! பொங்கல் வந்துட்டா....பொங்கல் என்றதுமே, மனதில் ஒரு மகிழ்ச்சி பொங்குவது என்னவோ உண்மைதான்! தமிழர்களின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் ஒர் விழா என்றால் மிகையாகாது!

தமிழர்களுக்கும், தமிழர்களுக்கு அவர்களது உழவு தொழிலில் உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கும் நல்ல மக்களுக்கும், நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!