Monday, February 04, 2008

இது என்ன மாயம்! எதுவரை போகும்!

உயிரை
விலகச் சொல்ல
உடலுக்கு
உரிமையில்லை!
உரிமையில்லா
உடலில்
உயிர் இருந்தும்
உறவுமில்லை!

தூரத்தில் சென்றுவிட்டால்
துயரம்
தூரமாகிவிடாது!
துயரத்தின் வேகம்
தூரயிருந்தால்
தூரமாயிருக்கும்!

என்ன எழுதியிருக்கிறேன்
எனக்கே புரியவில்லை!
இப்படி
எழுதிவிட்டால்
இது கவிதை என்று
எவன் சொன்னது!
நீங்க யாரும் சொல்லமாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்
நன்றி! நன்றி! நன்றி! அட அடிக்கடி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி பார்கிறோம்ல....

5 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வணக்கம் கவிஞர் பட்டுக்கோட்டை பிரேம்குமார்,
கவிதையில் கலக்குகிறீர்கள்!
வாழ்த்துக்கள்!!



அன்புடன்,
ஜோதிபாரதி.

Divya said...

\\தூரத்தில் சென்றுவிட்டால்
துயரம்
தூரமாகிவிடாது!
துயரத்தின் வேகம்
தூரயிருந்தால்
தூரமாயிருக்கும்!\\

யதார்த்தமான உண்மை!

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி பார்த்தா இப்படி கவிதை எழுத வருமா???

Sathiya said...

என்ன எழுதி இருக்கீங்கன்னு புரியுதோ இல்லையோ, ரொம்ப சோகத்துல எழுதி இருக்கீங்கன்னு தெரியுது;) நல்லா எழுதறீங்க. வாழ்த்துக்கள்!

Divya said...

Hi Premkumar,
thx for visiting my blog after a longggggggggggg time:)-

Anonymous said...

நல்லா இருக்கு