Friday, January 30, 2009

உண்மையான தமிழக ஹீரோ....


தம்பி மருதுபாண்டி!
உன் ஒரு உயிர்
உலகில் எத்தனை
உயிர்களுக்கு
உத்திரவாதம் தந்திருக்கு!

தமிழகத்தின்
கதாநாயகன் நீ
சோனியா அம்மையாருடன்
இந்திய திருநாடே
இணைந்து சொல்கிறது!!

நீ
தமிழன்
தமிழ்நாடே
தலை வணங்குகிறது!

நீ
ஒருவன்
நிறுபித்துவிட்டாய்
உலகில் பிறந்ததன்
உண்மையை!
வாழ்க நீ....வாழ்க உன் குடும்பம்!

Wednesday, January 28, 2009

இந்த பிறவியில் இயலவில்லையே....

ஆண்டவனிடம்
அடுத்த பிறவி
அடிக்கடி கேட்கிறேன்!
உன்னுடன் வாழ
உள்ளம் கேட்கச் சொன்னது!!

Thursday, January 15, 2009

வழி பிறந்திருக்கிறது.....



என் இனிய தமிழ் மக்களே.....
என் உள்ளத்தில் குடியிருக்கும் அன்பர்களே...நண்பர்களே....அனைவருக்கும்
உளம் கனிந்த தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

நாமெல்லாம் தமிழர்கள் என்று நமக்கு ஞாபகப்படுத்தும் ஒரே திருவிழா இந்த பொங்கல் திருவிழாதான், இதை உலகமெல்லாம் பரவியிருக்கும் அனைத்து தமிழ் பேசும் தமிழ் மக்களும் கொண்டாடித்தான் ஆகவேண்டும்!

உழவு செய்பவர்களுக்கு நாம் தரும் மரியாதை இது! உழவன் சேற்றில் கால் வைத்ததற்கு நன்றி தெரிவிக்காவிட்டால்...சோற்றில் கை வைக்க அருகதையற்றவர்களாக ஆகிவிடுவோம்!
அவனுக்கு உருதுணையாக இருக்கும் எருதுகளுக்கும் இன்று வாழ்த்துக்களை சொல்லித்தான் ஆகவேண்டும்! மாட்டுப்பொங்கல் மாடுகளுக்கு நாம் தரும் மரியாதை....
நமக்காக உழைக்கும் எந்த ஒரு ஜீவனையும் நாம் கடவுளை போலத்தான் போற்றவேண்டும்!
மாட்டுப்பொங்கல கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!
பொதுவா மாட்டுபொங்கல் அன்று மாடுகளுக்கு வாழ்த்துச் சொல்லனும் என்று ஆசையிருந்துச்சு ஆனா...நான் போய் அதுங்ககிட்ட வாழ்த்துச் சொல்லபோய்...அதுங்க திரும்பி Same to You என்று சொல்லிவிட்டால்.....பக்கத்திலிருப்பவர்கள் சிரிப்பாங்கலே அதுதான் மக்களிடம் சேத்து சொல்லியிருக்கிறேன், உங்களில் யாரேனும் போய் அதுக்கிட்ட என் சார்பா சொல்லிவிடுங்கள். நன்றி!!

நாடும் வீடும்
நல்லாயிருக்க
மாடு கூட உதவுகிறது!
மனிதா நீ மட்டும்தான்
மனிதனையே கொல்கிறாய்
மாடுகளைப்போல..
மானிடனாய் பிறந்த
மாடுகளைவிட
மனிதனுக்காக உழைக்கும்
மாடுகளே மேல்!

இதற்குமேல் மாடுகளை பற்றி எழுதினால் எல்லோரும் ஓடுவீர்கள் என்று தெரியும். நிறுத்திகொள்கிறேன்... மீண்டும் அனைவருக்கும் பொங்கல்,புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

Monday, January 12, 2009

அட....காமடிக்கு பொறந்த கவிதையே....

ஹேய்....யாரை கேட்டு உள்ளே நுழைந்தாய்..ஹ! சரி....வந்துவிட்டேய்...வாழ்ந்துவிட்டாய்.....இப்ப போகிறேன் என்கிறாய்....போஓ.....(ஜெயம் படத்தில் வரும் கதாநாயகி ஸ்டைலில் சொல்வதாக வைத்துக்கொள்ளவும்)

சரி....வரும்போது ஒன்னும் கொட்டுவரவில்லை....ஆனா போகும்போது என்னவோ கையில் ஒளித்து எடுத்து செல்கிறாயே....என்ன அது?!! காட்டு...காட்டு.....

அடிப்பாவி....அது என்னுடைய உயிர்!

இருக்கும்போது கொஞ்சம் கொஞ்சமா கொடுதே...
இப்ப மொத்தமா எடுத்துகிட்டு கிளம்பிட்டாயா!

சரி போ...பரவாயில்லை!
உன் உயிர் இங்கேதானே இருக்கு...அதுபோதும் நான் வாழ்ந்துகொள்வேன்!


இது என்ன என்று யாரும் என்னை கேட்காதீர்கள்!

காமடி எழுத நினைத்தேன்....திடீரென்று கவிதை எழுத தோன்றியது....
கடைசியில் ஒரு காபி வாங்கிவந்து டீ போட்டு வைத்திருக்கிறேன்....
யாரும் குடித்து தொலைக்காதீங்க....ஹ..ஹா...ஹா....