Friday, August 07, 2009

வசந்தம் ஸ்டார்! திரு. APL க்கு வாழ்த்துக்கள்!

அன்பும், பண்பும், பாசமும் நிறைய கொண்டிருக்கும் அன்பர்களே, நண்பர்களே, இவை எதுவும் கொஞ்சம்கூட இல்லாத அன்பர்கள் அனைவருக்கும் மீண்டும் வணக்கம்! எழுதவே வேண்டாம் என்ற முடிவு ஒரு நல்ல முடிவாக தெரியவில்லை, ஆண்டவன் படைப்பில் அப்படியும் இப்படியுமாகத்தான் எல்லாமே இருக்கிறது, இதில் துயர சம்பவங்களுக்கு துவண்டு போகுதல் மட்டும் சரியான தீர்வாக இருந்துவிட முடியாது என்பதற்காக என்னுடைய பானியில் எழுத்துவது எனக்கு மேலும் ஆறுதலாக இருக்கும் என்ற எண்ணத்தில் உங்களுடன் மீண்டும்....பிரியமுடனையே......

இரண்டு செய்திகளை பகிர்ந்துகொள்கிறேன்!

1. வசந்தம் ஸ்டார்! சிங்கப்பூர் வாழ் மக்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒரு விஷயம்! வசந்தம் என்ற உள்ளுர் தொலைக்காட்சி நிறுவனத்தார், 2 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தும் இந்த சிங்கப்பூர் தமிழ் ஐடல் நிகழ்ச்சிதான் இந்த வசந்தம் ஸ்டார்! பாட்டு மற்றும் அனைத்து திறன்களும் கொண்டவர்கள் இறுதியில் இந்த பட்டத்தை வெல்வது வழக்கம்!
பதிவு செய்து கொண்டிருப்பது நாந்தான்!

2 வது முறையாக நானும் இந்த போட்டியின் தேர்வு சுற்றுக்கு சென்றிந்தேன், அவ்வளவாக ஆர்வம் இல்லாமல் இருந்திருந்தாலும், என் மீது உள்ள நம்பிக்கையால, இந்த முறை ஒரு கலக்கு கலக்கி விடலாம் என்ற ஆசையுடன் சென்றிருந்தேன்! ஏகப்பட்ட கூட்டம் அங்கே, மதியம் 1 மணிக்கு அங்கு சென்ற எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது இரவு 7 மணிக்கு! கார் நிறுத்தும் இடத்தில் அனைவரையும் அமர வைத்து, அவிய வைத்து பிறகு அவர்கள் முன் அப்பளம் பொறிக்கச் சொன்னார்கள்! கடையில் சமையல் சரியில்லை என்று சொல்லிவிட்டனர். என்னடா...வசந்தம் ஸ்டார் சமையல் நிகழ்ச்சியா என்று கேட்காதீர்கள். அதைவிட ரொம்ப கஷ்டமான வேலை அது! கூட்டு செய்துவிடலாம்,, ஆனால் பாட்டு செய்வது பெறும் பாடு அய்யா....

சரி...அங்கே சென்றவுடன் வழக்கம்போல என்னுடைய பதிவு எண் கொடுத்து அமர வைத்துவிட்டார்கள். நான் 130 வது நபர் என்றால் பாருங்களேன்...

கொஞ்சம் வயசு வேற ஆகிப்போச்சு, அதை மறைக்க மீசையை எடுத்து சும்மா சூர்யா மாதிரி இருக்காலாம் என்ற கொடுமையா ஆசையில் அதையும் எடுத்துவிட்டு சென்றேன்!

உள்ளூர்வாசிகளுக்கு கிடைக்கும் இந்த ஒரு வாய்ப்பை ஏன் தவற விடவேண்டும் என்ற ஓரே ஆசைதான் இதில் பங்கெடுக்க காரணம்! சரி என்னதான் நடந்தது ....சொல்கிறேன்!
6 மணி நேரம் காத்திருந்து என்னுடைய திருப்பம் வரும்போது பாடுவதற்கு உள்ளே அழைத்திருந்தார்கள். நான் 3 பாடல்கள் தேர்வு செய்துகொண்டு சென்றிந்தேன், 1. மெளனராகத்திலிருந்து.....மன்றம் வந்த தென்றலுக்கு 2. வாரணம் ஆயிரத்திலிருந்து முந்தினம்...பார்தேனே மற்றும், நெஞ்சுக்குள் பெய்திடும்!

இதில் என்ன கொடுமை என்றால், மெளனராகம் பாடலை நான் வெளியில் உள்ளவர்களிடம் பாடி காட்டிய போது, அவர்கள் அனைவரும் நாந்தான் அடுத்த ஸ்டார் என்றார்கள், அதேபோல் முந்தினம் பாடல்களும் அவர்களை அசத்தியது. நெஞ்சுக்குள் பாடல் எனக்குபிடித்திருந்தது, ஆனாலி நிறையப்பேர் அதை பாடப்போகிறார்கள் என்பதால் அதைபாடவில்லை. முதலில் உள்ளே சென்று....முந்தினம் பார்த்தேனே பாடலுக்கு முன் வரும் அந்த வசனத்தை....அழகாக பேசினேன்.....ஹாய்...வசந்தம்,ஐ அம்......இப்படியாக பேசி அசத்தினேன், அதற்கு பிறகு அந்த பாடலை நன்றாக ஆரம்பித்தது போலத்தான் தெரிந்தது, என்ன தவறு செய்தேன், என்ன நடந்தது என்றே தெரியவில்லை, ஒரு சில வரிகள் பாடியவுடனேயே நடுவர் நிறுத்தச் சொல்லிவிட்டு, அவர் அதற்கு என்னவோ விளக்கம் சொல்லி கொண்டிருந்தார்! எனக்கு என்னவோ கொஞ்சம் பிழைகள் செய்தது போலத்த்தான் இருந்தது, அந்த பாடலுக்கு பதிலாக நெஞ்சுக்குள் பெய்திடும்பாடியிருந்தால் வாய்ப்பு இருந்திருக்கும்! சரி விடுங்க......Vasantham Star..பட்டம் நம்ம கையில் கிடைக்கவில்லை என்றாலும், அந்த பட்டத்திற்கு தேவையான எவ்வளவோ திறமைகள் நம்மகிட்ட இருப்பதாக நண்பர்களும், உறவினர்களும் சொல்கிறார்கள். வேற வழியில் ஒரு கலக்கு கலக்குவோம்! 2 வருடம் காத்திருப்போம்! அடுத்த வருடம் வசந்தம் ஸ்டார் என்கையில்தான்.......கனவு....ஸ்டார்ட்........


சரி என்ன அந்த 2 வது செய்தி! அது என் குடும்பச் செய்தி, எங்கள் ஊரில், எல்லோராலும் திரு. APL என்று அன்புடன் அழைக்கப்படும் ஒரு பொது நலவாதி ஒருவர் இருக்கிறார். இவரை பற்றி உங்களுடன் சில செய்திகளை பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்! அங்கப்பத்தேவர், குமரியம்மாளின் ஒரே அன்பு மகனாக பிறந்த இவர் குழந்தை பருவம் மாறிய காலத்திலிருந்தே.....உழைக்க ஆரம்பித்தவர். தன்னுடைய குடும்பத்துக்காகவும், ஊருக்காகவும் உழைக்கத் தொடங்கியவர்! ஏழ்மையான சூழ்நிலையிலிருந்து தன்னுடைய உழைப்பால் படிப்படியாக வாழ்க்கையில் முன்னுக்கு வந்தவர், தன்னுடைய 19 வயதிலேயே அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியை ஆரம்பித்தவர். அதற்கு பிறகு மேல் படிப்புகள் படித்து பதவி உயர்வுகளை பெற்றதோடு, தன் மனைவியையும் திருமணத்திற்கு பிறகு உயர் கல்வி படிக்க வைத்து இன்று அவர்களை ஒரு மேல்நிலைப்பள்ளி ஆசிரியையாக உயர்த்தியுள்ளார். இவர்கூட ஒரு சில வருடங்களுக்கு முன் அரசியலில் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக தன்னுடைய அரசு மேல்நிலைப்பள்ளி முதல்வர் பணியை விருப்ப ஓய்வு தந்துவிட்டு போட்டியிட வாய்ப்பு கேட்டார், அவர் குடும்பத்தினரின் நல்ல காலம் அவருக்கு அந்த வாய்ப்பு இறுதி நேரத்தில் கிடைக்கவில்லை! அந்த முறை அந்த தொகுதியில் அவருடைய கட்சிக்காரகளுக்கு தோல்விதான்! இப்படியாக சொந்த பணத்தை செலவு செய்துகொண்டு பொதுநலத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் திரு. APL அவர்கள் தன்னுடைய விருப்ப ஓய்வுக்கு பிறகு மிகவும் பொதுநலத்தில் முழுநேர சேவகம் செய்ய ஆரம்பித்துவிட்டார் எனபதற்கு அடையாளம் தற்பொழுது ஏற்றுக்கொண்டிருக்கும் பொறுப்பு, எங்கள் நகரத்தில் இயங்கிவரும் ரோட்டரி கிளப்பில் செயலாளராக ஒரு சில நாட்களுக்கு முன் பதவி ஏற்றுக்கொண்டுள்ளார். பரவாயில்லை...இவருடைய உழைப்பும், பொதுநலச் சேவையும் இவருக்கு நிம்மதியை தந்தாலே போதும், அதுதான் எல்லோருக்கும் தேவை என்று அவருடை குடும்பத்தை சார்ந்தவர்களும் பச்சை கொடி காட்டிவிட்டனர். இவ்வளவு நல்ல உள்ளமும் உழைக்கும் எண்ணமும் கொண்ட APL சார் அவர்கள் வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறோம். இந்த திரு. APL அவர்கள் வேறு யாருமில்லை.... என்னுடைய தந்தை ஹ...ஹா...ஹா....நன்றி! வாழ்த்துக்கள்!

வாழ்க வளமுடன் APL சார்!