Wednesday, April 30, 2008

உழைப்பின் வாரா உயர்வும் உண்டோ!





உழைத்து உழைத்து
உலகத்தை
உறுதியாக்கிவிட்டு
களைத்துப்போய்விட்ட
காளையர், கன்னியர்களுக்கு
இன்று ஒருநாள்
இன்பத்தையும் ஓய்வையும்
இனிதே தரட்டும்!

எல்லோருக்கும்
ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து
டயர்ட் ஆகியவர்களை தவிர
எல்லோருக்கும்
என்னுடைய
உளம் கனிந்த
உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்!

உழைப்பு உழைப்பு என்று
உரைக்கும் போதுதான்
உழைக்க ஆர்வமாயிருக்கிறது
ஆனால் இன்று விடுமுறை....ஹ..ஹா..ஹா...
வாழ்த்துக்கள்!

Friday, April 18, 2008

படிங்க....முடிஞ்சா சிரிங்க!

கவிதைகளுக்கு மத்தியில் சில கடிகளையும் அவ்வப்போது தந்தால்தான் இங்கே வந்துபோகிறவர்கள் நொந்துபோக ஏதுவாக இருக்கும்! வந்தாச்சுல்ல...அப்புறம் என்ன முழுசா படிச்சுட வேண்டியதுதானே! வேற வழியேயில்லை.....


சரி..என்ன நடந்தது, இப்ப சொல்லப்போகிற கடி, உண்மையிலேயே நடந்ததுப்பா! கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் என்னுடைய நண்பர்களில் ஒருவர் செங்காங் பகுதியில் வீடு வாங்கி குடிபுகுந்தார், குடிநுழையும் விழாவிற்கு (House warming) என்னையும் அழைத்திருந்தார். நெருங்கிய நண்பர் என்பதால் செல்லவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஓய்வுதான், பகலில் நல்ல ஓய்வுஎடுத்துவிட்டு மாலையில் அங்கே செல்ல முடிவெடுத்திருந்தேன்!

அன்று, மாலை நேரத்தில் அந்த நிகழ்ச்சிக்கு செல்ல ஆயத்தம் ஆகும் வேலையில், என்ன வாங்கிச் செல்லவது, திடீர் குழப்பம், நானும் மாற்றி மாற்றி யோசித்தேன் ஒன்றும் மனதில் தெளிவாக தெரியவில்லை! விலை மதிப்புமிக்க பொருள் வாங்கவேண்டிய அளவிற்கு அவசியமில்லை என்றிருந்தபோதும், சரி...என்னதான் வாங்குவது......குழப்பத்துடன் லிட்டில் இந்தியா பகுதிக்குச் சென்றேன். வழக்கம்போல என்னுடைய நண்பர்களை சந்தித்தேன். அவர்களிடம் நிகழ்ச்சிக்கு செல்லவேண்டியது பற்றி கூறினேன். அவர்களும் ஆளுக்கு ஒரு ஐடியா தந்தார்கள். ஆனால் எனக்கு உடன்பாடு இல்லை.

கடைசியில் நானே முடிவெடுத்து, அவர்களிடம் கூறினேன்! என்ன கூறினேன்....இப்படியே கடையோரமாக செல்கிறேன் வழியில் என்ன என் மனதுக்கு பிடிக்கிறதோ அதை வாங்கி கொண்டுபோகிறேன் என்று சொன்னேன். முக்கிய விஷயம் என்னவென்றால் அதோடு நான் நிறுத்தவில்லை....அப்படி சொல்லிவிட்டு அங்கிருந்த ஒரு நண்பரிடம்..... சரி....நான் ஒருபொருளை வாங்கி சென்றால் , அதே போன்ற பொருள் ஏறகனவே அவர்கள் வீட்டில் இருந்தால் என்ன செய்வது அண்ணே! என்று என் நண்பரிடம் கேட்க.......
அவர், கொஞ்சமும் தயங்காமல்.....நீ வாங்கிகொண்டு போகும் பொருள் மாதிரி அங்கே பயன்பாட்டில் இருந்தால், நீ வாங்கிகொண்டு போகும் புது பொருளை கொடுத்துவிட்டு அங்கே ஏற்கனவே இருக்கும் அதை எடுத்துகொண்டு வந்துவிடு.....என்று cool ஆக பதில் சொன்னதுதான் மிச்சம்....அங்கிருந்த அனைவரின் சிரிப்பையும் அடக்க அரைமணி நேரம் ஆகிவிட்டது...அட நாந்தான் எப்பவும் அவர்களை மணி கணக்கில் சிரிக்கவைத்துகொண்டே இருப்பேன்...ஆனால் அன்று அவர் அடித்த ஜோக்கை...இன்று நினைத்தாலும் சிரிப்புதான் வருகிறது.....உங்களுக்கு எப்படி? சிரிப்பு வரவில்லையா?! அட இன்னும் நான் ஜோக்கே சொல்லவில்லையே......இது எப்படி இருக்கு!!!

Thursday, April 10, 2008

என்ன எழுதுவது என்று யோசித்தபோது...

காலத்தின்
நொடி,
நொடிப்பொழுதில்
நிமிடமாகி
மணியாகி
நாளாகி நாளாகி
மாதமாகி
மாதம் பலவாகி
வருடமாகி
வருடம் பலவாகி!

எத்தனை
வருடங்களாகியும்
என் இதயம்
எங்கிருக்கிறதோ
என்றும் அங்கேயே!
இதயத்திற்கு
இடமாற்றம் என்றும்
இருந்ததில்லை!
இதயத்திற்குள்ளும்
இடமாற்றம்
இருந்துவிட்டால்
இறந்துவிடுமே
இதயம்
என்று தெரிந்து
என் இதயத்தை
என்றோ உன்னிடம்!


என்ன நண்பர்களே...கவிதையை படித்தீர்களா? கவிதை எங்கிருக்கு என்று கேட்ககூடாது, என் பிலாக் வந்துட்டா நான் சொல்கிற பொய் எல்லாவற்றையும் கேட்டுகனும் சரியா! அது! அப்புறம் என் கவிதை படித்துவிட்டு.....கரகாட்டக்காரனில் செந்தில் கவுண்டரிடம் கேட்பதுபோன்று, இதயத்தை வச்சிருந்த உடம்பு இங்கிருக்கு.....இப்ப இதயதை யாரு வச்சிருக்கா என்றெல்லாம் கேட்க பிடாது ஓகேவா!!! யார்..யாரு காரை....சாரி இதயத்தை எங்கே வச்சிருக்காங்க என்று கணக்கெடுப்பதா என்வேலை...படிச்சாச்சுதானே...அப்புறம் என்ன! என்ன பார்ட்டி வைக்கனுமா? எதுக்கு? படிச்சதுக்கா?!! எத்தனை பேர் கிளம்பியிருக்கீங்க!

Wednesday, April 02, 2008

கவிதை கவிதையா....வருதுப்பா!!!

மறுபடியும்
வரவேண்டும்
வரம் வேண்டும்!
கரம் வேண்டும்
தர வேண்டும்!
மனதிற்கு,
உரம் வேண்டும்
உடன் வேண்டும்!
மதிமயக்கும்,
சுரம் வேண்டும்
சரமா வேண்டும்!
குரல் வேண்டும்!


எனக்கு
சம்மந்தமில்லா
என் வரிகள்
என்னை இங்கே
சந்தோஷப் படுத்தி...
எனக்கு
சம்மந்தப்பட்ட
என் வலிகள்
என்றுமே என்னை
சங்கடப்படுத்தியே....


நான்
பிடித்த பேனா
எனக்கு
பிடித்த வரிகளை
எழுதித் தந்தது!
என்னை
பிடிக்காதவருக்கு
எழுதுகிறேன்
என்று தெரிந்தும்!

ஆஹா..ஆஹா...கவிஞன் ஆகிட்டேனோ?!
ஏதோ வந்தா இதெல்லாம் வருமாமே!
எனக்கென்னவோ இதெல்லாம் வருகிறது ஆனா
அது வந்தமாதிரி தெரியலையே!!

என்னது அதுவல்லையா,
ஏழு கழுதை வயசாச்சு அது வரலையா...ஆசையப்பாரு....எடு செருப்ப...