Wednesday, April 02, 2008

கவிதை கவிதையா....வருதுப்பா!!!

மறுபடியும்
வரவேண்டும்
வரம் வேண்டும்!
கரம் வேண்டும்
தர வேண்டும்!
மனதிற்கு,
உரம் வேண்டும்
உடன் வேண்டும்!
மதிமயக்கும்,
சுரம் வேண்டும்
சரமா வேண்டும்!
குரல் வேண்டும்!


எனக்கு
சம்மந்தமில்லா
என் வரிகள்
என்னை இங்கே
சந்தோஷப் படுத்தி...
எனக்கு
சம்மந்தப்பட்ட
என் வலிகள்
என்றுமே என்னை
சங்கடப்படுத்தியே....


நான்
பிடித்த பேனா
எனக்கு
பிடித்த வரிகளை
எழுதித் தந்தது!
என்னை
பிடிக்காதவருக்கு
எழுதுகிறேன்
என்று தெரிந்தும்!

ஆஹா..ஆஹா...கவிஞன் ஆகிட்டேனோ?!
ஏதோ வந்தா இதெல்லாம் வருமாமே!
எனக்கென்னவோ இதெல்லாம் வருகிறது ஆனா
அது வந்தமாதிரி தெரியலையே!!

என்னது அதுவல்லையா,
ஏழு கழுதை வயசாச்சு அது வரலையா...ஆசையப்பாரு....எடு செருப்ப...

4 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

கவிதையைக் கொட்டுகிறீர்கள்.
அது என்ன கடைசியில் கோபம், யார் மேல்?

அன்புடன்,
ஜோதிபாரதி.

Shanti said...

Nandri Prem for waking me up...I'm very busy these days with lots of multi-tasking....will do something by end of the week...thanks and how are you my friend?

Saravanan said...

Migavum Inimai Prem... You should write more whenever you feel like and compile it as a book.

whAt A LiFe said...

Great post