Monday, February 23, 2009

உலகில் உயர்ந்தவன் நீயே!


சின்ன சின்ன ஆசைகளுடன்
புறப்பட்டு இன்று
சிகரத்தை தொட்டுவிட்டாய்!
தொட்டது நீயாக இருந்தாலும்
பெருமைகளை எங்களுக்கு
பகிர்ந்துகொடுத்துவிட்டாய்!

இறைவனுக்கு எல்லா புகழையும் தந்திருந்தாலும்
இனிய தமிழில் சொல்லும் பொழுது
தமிழர்களுக்கு அல்லவா போய் சேர்ந்திருக்கிறது!
இறைவன் இங்கே ஒவ்வொரு நல்ல உள்ளத்திலும்
இருப்பதை நீ அறிந்திருப்பதால் சொன்னாயோ!!

உனக்கு விருதுகிடைக்க
உலகெங்கும் இருந்த
உள்ளங்கள் வேண்டியதை
இறைவன் பார்த்துவிட்டான்
இதோ தந்துவிட்டான்!
அவனை புகழ
அருகதையுள்ள ஆளும் நீதான்!
புகழை தந்த ஆண்டவனையே
புகழும் மனிதா உன்
புகழை பாட
எவனும் இன்னும் பிறக்கவில்லை!
உயர்ந்து நிற்கிறாய்!

இறைவன் உமக்கு
எல்லா அருளையும் தரட்டும்!
உமக்கும் உமது குடும்பத்தார்களுக்கும்
இசை குடும்பத்துக்கும்
இறைவன் எல்லாவற்றையும் அருளட்டும்!
வாழ்க தமிழ்! வளர்க இசை! வாழ்த்துக்கள் ஏ.ஆர்.ஆர்!

Wednesday, February 11, 2009

காதலே....நிம்மதி!!


காதலர் தினம் வருகிறது!
கவிதையும் வந்திருக்கிறது!
படிப்பதற்கு உங்களுக்கு
ஆர்வம் வரவில்லை என்றால்
அபத்தம் இல்லை!
படித்துவிட்டு
ஆத்திரம் வந்தால்
அதற்கு நான் பொறுப்பில்லை!

இதோ கவிதை.....


சொந்த வேரோடு
தான் கொண்ட காதலை
சொன்னால்தான்
தெரியுமா?

சொன்னால்தான் காதலா?
சொன்னால் காதல்
சுடுகாட்டோடு எரிக்கப்படுகிறது
சொல்லாவிட்டால்
சொர்க்கத்திலும்
சுவைக்கிறது!

இருக்கும்போது
இனிக்கவைக்காத காதல்
இனி சொர்கம்வரை சென்று
என்ன கிழிக்கப்போகிற்து
கேட்பது புரிகிறது!
சொல்லாத காதலுக்கு
சொல்லப்படும் நியதி இது!
எல்லோரையும்போல்
இவனும்!

இதில் சில
சுட்டவரிகளும்
சுவையூட்டப்பட்டிருக்கிறது
இனித்தால் சுவைக்கவும்
இல்லையேல் சும்மா இருக்கவும்!
காதலிக்கிறீங்களா என்றெல்லாம்
கேட்கப்பிடாது!
என் மனைவி காதில் விழுந்தது
எனக்கு காது இருக்காது!!
இருந்தாலும்
காதோடு..காது வைத்ததுபோல
காதல் ஓடிக்கிட்டுதான் இருக்கு!
ஹி...ஹி...ஹி...ஹீ...

உண்மையான காதலுக்கு
உயிரை கொடுக்காதீர்கள்!
வெறொருவன் வந்துவிடுவான்
வாழ்வதற்கு!!
உன்னை கொடு
இல்லையென்றால்
காதலிப்பதை
சொர்கத்தில் தொடரவும்!

Friday, February 06, 2009

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா....




எல்லோருக்கும்
என் இனிய
'தைப்பூசம்'
வாழ்த்துக்கள்!

சிங்கப்பூர் வாழ் தமிழர்களின் சிறந்த பண்டிகைகளில் ஒன்றுதான் தைப்பூசம். உலகளவில் தமிழ் கடவுளான முருகப்பெருமானை வணங்கும் அனைவருக்கும் இது முக்கியமான திருவிழா!! எல்லோரையும் காத்து நிற்கும் எம்பெருமான் முருகப்பெருமானை நினைத்து காணிக்கை செலுத்துவதும், காவடி எடுப்பதும மேலும் பல பல நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் சிங்கப்பூர் தமிழர்களின் சீரிய நடவடிக்கை, அந்த வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை இங்கே கோலகலம் காணவிருக்கிறது தைப்பூச திருவிழா!
இந்தவருடம் விடுமுறை தினத்தில் வருவதால் ஏகப்பட்ட பக்தர்கள் கூட்டம் அலை அலையாக அங்கு வருவார்கள் என்று தோன்றுகிறது!! எல்லோருக்கும் நல்ல அருள் கிடைத்து எல்லோருக்கும் நிம்மதியான வாழ்க்கை அமைய நானும் என் குடும்பத்தார்களும் அனைவருக்க்காகவும் வேண்டிக்கொள்கிறோம். அனைவரும் என் குடும்பத்துக்காக வேண்டிகொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன். ஓம்....ஓம்! அரோகரா...அரோகரா...

Monday, February 02, 2009

விழியில் விழுந்து இதயம் நுழைந்த....

அவளை
விழிகளுக்கு மட்டும்
பிடித்திருந்தால்
விழிகளை கழுவி
விடை கொடுத்திருப்பேன்!

இதயத்துக்குள்
இடம்பிடித்து
இறங்க மறுப்பதால்
இம்சையடைகிறேன்!

ஹ..ஹா..ஹா....கழுதைக்கு கவிதையெல்லாம் வருதுய்யா...
அட..டா..டா...கழுதை என்றதும் ஒரு கவிதை ஞாபகம் வருகிறது..

எனக்கும் கழுதைக்கும்
ஏதோ தொடர்பாம்
அவள் சொன்னால்
என்னுடைய எல்லா
கடிதத்தையும்
மிச்சம் வைக்காமல்
மேய்ந்துவிடுகிறதாம்!
என்
கடிதம் மீது பாவம்
கழுதைக்கே வந்தது
காதல்!
அந்த கழுதைக்கோ
அரவே வரவில்லை!!

சரி...சரி...கூல்ல்....கூல்ல்ல் டவுன்....

நன்றி!