Monday, February 04, 2008

இது என்ன மாயம்! எதுவரை போகும்!

உயிரை
விலகச் சொல்ல
உடலுக்கு
உரிமையில்லை!
உரிமையில்லா
உடலில்
உயிர் இருந்தும்
உறவுமில்லை!

தூரத்தில் சென்றுவிட்டால்
துயரம்
தூரமாகிவிடாது!
துயரத்தின் வேகம்
தூரயிருந்தால்
தூரமாயிருக்கும்!

என்ன எழுதியிருக்கிறேன்
எனக்கே புரியவில்லை!
இப்படி
எழுதிவிட்டால்
இது கவிதை என்று
எவன் சொன்னது!
நீங்க யாரும் சொல்லமாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்
நன்றி! நன்றி! நன்றி! அட அடிக்கடி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி பார்கிறோம்ல....