Friday, March 27, 2009

இந்தியப் பயணம்!

வணக்கம் வந்தவர்களே!! நண்பர்களே!
வழக்கமா சொல்வதுதான்! நேரமில்லை பதிவு போட!

நாளை 28 ந் தேதி, குடும்பத்துடன் பிறந்த ஊருக்கு(பட்டுக்கோட்டை) பயணம்! ஒரு வாரம் மட்டும் விடுப்பு எடுத்துள்ளேன். தங்கை மகனுக்கு பெயர் சூட்டும் விழா எங்களது இல்லத்தில் நடைபெறுவதால் பங்கெடுக்க குடும்பத்துடன் செல்கிறோம்!! வந்த பின்பு பயணம் பற்றி பகிர்ந்துகொள்கிறேன். யாரு இதெல்லாம் கேட்டா ....என்று கேட்பது என் காதுக்கு கேட்கிறது!! இதெல்லாம் வழி தவறி வந்த ஆட்டுகுட்டிக்கு .....கூறுவதாக இருக்கட்டுமே....ஹி..ஹி.....ஹி... மீண்டும் சந்திப்போம்....வர்டா....

Monday, March 02, 2009

ஆத்தா....நான் தாய் மாமன் ஆயிட்டேன்...






என்னை
முதல் முறையாக
தாய் மாமனாக்கிய
தங்கைக்கு என் நன்றி!

பிறந்திருக்கும்
பிஞ்சு..
பிரேமிடம்
கொஞ்சும் நாளை நினைத்து
காத்திருக்கிறேன்!

இன்று
அழகிய ஆண் குழந்தைக்கு
அம்மா நீ!
ஆனாலும்
அனைவருக்கும்
அன்பு குழந்தையாகவே நீ
என்றும்!

தாய் மாமனாகவும் உன்
மகனுக்கும்!
அண்ணனாக உனக்கும்!
மச்சானாக உன்
மணவாளனுக்கும்
ஆயிரம் ஆயிரம்
ஆசிகளை வழங்கி
ஆனந்தம் கொள்கிறேன்!
ஆண்டவனின் ஆசிர்வாதம்
உங்களுக்கு என்றும் உண்டு!!

இதுவரை
இனிய தம்பதிகளாக இருந்து
இன்று முதல்
இனிய குழந்தைக்கு
பெற்றோராக அகம் மலரும்
டாக்டர் மஞ்சு! டாக்டர் கார்திக்
உங்களுக்கு வாழ்த்துக்கள்!

என்றும்
பிரியமுடன்
பிரேம்குமார், குடும்பம்!