Wednesday, October 24, 2007

இதயத்தை இதமாக்கும் இவர்களுக்கு வாழ்த்துக்கள்!

எல்லா புகழும் இவர்களுக்கு கிடைக்க என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!



உள்ளூர் வானொலியில் தேனொலி கேட்க காரணமான ஒலி விமலாவுக்கும், பச்சை தமிழை பிச்சு பிச்சு வீசும் பிஞ்சு நெஞ்சம் பாஞ்சாலிக்கும் என் உளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Tuesday, October 23, 2007

உலகம் ஒரு நாடகமேடை

வந்துட்டேன்....சொல்லுவோம்ல...என்ன அவசரம்! கடந்த போஸ்ட்ல என்னமோ சொல்றேன்னு சொல்லியிருந்தேன்ல, அதப்பத்திதான் இப்ப, என்ன சரியா! ஆனா நீங்க எதிர்பார்க்கும் அளவிற்கு சுவராஸ்சியம் இல்லாம போய்விட்டது அந்த நிகழ்ச்சி!

அட, ஆமாங்க! சில நாட்களுக்கு முன் இங்கே இயங்கிகொண்டிருக்கும் ஒரு தொலைக்காட்சி சானலுக்கு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் ஒரு நிருவனம், தாங்கள் படபிடிப்பு நடத்தவிருக்கும் நாடகத்தில் நடிக்க ஆட்களை தேடும் வகையில் ஒரு ஆடிசன்( திறமையரியும் சோதனை) நடத்தினார்கள்...

நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டார்கள். நான் கூட போக விரும்பாமல் இருந்து கடைசி நேரத்தில் வீட்டில் போர் அடித்ததால் கிளம்பி சென்றேன். அங்கே நான் சென்றபோது கிட்டதட்ட ஆடிசன் முடியும் தருவாயில் இருந்தது, எனவே வந்தவர்களும் எந்த வசன குறிப்பும் கொடுக்காமல் செய்துகாட்டச் சொன்னார்கள்! அந்தவகையில் எனக்கு முன் நிறையப்பேர் போனார்கள் கேமரா முன் நின்றார்கள் ஏதேதோ செய்ய முற்பட்டார்கள், சிலர் சுமாராக செய்தார்கள், சிலர் திகைத்து நின்றார்கள் சிலர் நிற்பதை பார்தே அவர்கள் போகச் சொல்லிவிட்டார்கள்!

நடப்பவற்றை வெளியிலிருந்து பார்த்துகொண்டிருந்த எனக்கு அடிக்கடி கழிவறை நோக்கி ஓடவேண்டியதாயிற்று! ஒரு கட்டத்தில் திரும்பி ஓடிவிடலாமா என்று கூட தோன்றியது, ஆனால் கூட இருந்த என் நண்பர்கள் டேய்...இருடா...எல்லோரையும் போல நீயும் போய்விட்டு ஒரு சின்ன அறிமுகச் செய்துவிட்டு வாடா என்று தைரியம் சொன்னார்கள்! சரி என்று நின்றுவிட்டேன்!

என் திருப்பம் வந்தது, என்னை அழைத்தார்கள், போய் நின்றேன், லைட்ஸ் ஆன், புகைப்படம் எடுத்தார்கள், சுய அறிமுகம் செய்துகொண்டேன். திடீர் என்று ஏதாவது நடித்துக்காட்டுங்கள் என்றதும் எனக்கு டர்....ஆகிவிட்டது! அதுவும் சூழ்நிலை எதுவும் அவர்கள் தருவதாக இல்லை.. உடனே எனக்கு ஒரு யோசனை வர. நானே ஒரு சூழ்நிலையை எடுத்துக்கொண்டு, அதை பற்றி அவர்களிடம் சொல்லிவிட்டு......ஆரம்பித்தேன் பாருங்கள்....
அட...அட...எங்கிருந்துதான் வந்ததோ தெரியவில்லை....என்னை அரியாமேலே சும்மா சீன் அப்படித்தான் போனது. எனக்கே தெரிந்துவிட்டது நம்ம அசத்துகிறோம் என்று, செய்துகாட்டிவிட்டு நிறுத்தியதும் அங்கிருந்த சோதனையாளர்கள், கேமராமென்கள் எல்லோரும் வெகுவாக பாராட்டியதோடு, தயாரிப்பாளரும் வெளியில் வரும் போது ரொம்ப நல்லா செய்தீர்கள் என்று பாராட்டி அனுப்பினார்கள்... அதைவிட பிறகு தொலைபேசியில் கூப்பிடுவதாகவும் சொல்லி அனுப்பினார்கள்!

ஆனால், நேற்று வரை எந்த தகவலும் அவர்களிடமிருந்து வராததால், நான் அழைத்து கேட்டேன், அதற்கு அவர்கள் சொன்ன பதில் எனக்கு சந்தோஷத்தை தரவில்லை! அவர்கள் ஒரு சில மாதம் கழித்து நாடகம் உருவாக்க போகிறார்களாம், அதில் எனக்கு ஏற்ற கேரக்டர் இருந்தால் என்னை கட்டாயம் கூப்பிடுகிறார்களாம்! நான் போவதாக இல்லை! ஏன் என்று கேட்கிறீர்களா! வாழ்க்கையே ஒரு நாடகமேடை இதில் தினமும் தினமும் நடிக்கவேண்டியுள்ளது, இதில் நாடகத்தில் நடிப்பதற்காகவெல்லாம் காத்திருக்க முடியாது, ஒருவேலை உடனே அழைத்திருந்தால் நடித்திருப்பேன்! காத்திருந்து நடிக்கவெல்லாம் விருப்பமில்லை!

புரியுது, புரியுது, நீங்க கேட்பது புரியுது, ஏன்டா கேமராவில் முகத்தை காட்ட கிளம்பிட்டியே அதுக்கு முன்னாடி கண்ணாடியில் ஒருமுறை உன் முகத்தை நீயே பாத்துகிட்டாயா என்று நீங்கள் கேட்பது புரிகிறது! சத்தியமா பாத்திருக்கிறேன். ஊஹும்...ஒன்னுமில்லை...இருந்தாலும் முகத்தில் 0 இருந்தாலும் அகத்தில் ஒரு சின்ன நம்பிக்கை! சினிமாவிலேயே பார்க்க போனால் கதாநாயகனை தவிர வேற யாரும் அழகாக இருப்பதாகத் தெரியவில்லையே, அட சில காதாநாயகன்களே அழகு இல்லையே!

சரி என்ன இப்ப....என் முகத்தையும் இங்கே ஒருநாள் போஸ்ட் செய்கிறேன் நீங்க பாத்துவிட்டு ஓகே சொல்லுங்கள் அப்பறம் பார்போம்! எனக்கு என்ன பயமாயிருகுன்னா...நான் என் முகத்தை இங்கே போட...அதை நீங்க எல்லாம் பார்க்க அப்புறம் பயந்துகிட்டு நீங்க யாரும் என் பிலாக் பக்கமே வாராமல் போய்விட்டால்.....என்ன செய்வது...சரி சரி...போடுறேன்...ஏன்னா நீங்க எல்லோரும் இந்து பிரேம்குமாரின் முகத்துக்கு ஒருநாளும் முக்கியத்துவம் கொடுக்காமல் என் எழுத்துக்குதான் முக்கியத்துவம் கொடுத்து இங்கு வந்து போகிறீர்கள் என்று தெரியும். என்வே துனிந்து என் முகத்தையும் விரைவில் வெளியிடுகிறேன்!
அப்படியே எடுத்துகிட்டு போய் வீட்டு வாசலில் திருஷ்டியாக மாட்டிவைத்துக்கொள்ளுங்கள்!

Wednesday, October 10, 2007

மீண்டும்....கெளம்பிட்டாய்யா...கெளம்பிட்டாய்ய்யா!

என் இனிய நண்பர்களே தலைப்பை பார்த்ததும் தலை சுற்றுகிறதா, கொடுத்து வைத்தவர்கள், உங்கள் முதுகை நீங்களே பார்த்துகொள்ளலாம் இல்லையா! அய்யோ என் முதுகை காப்பாத்திக்கொள்கிறேன் இப்பொழுது!

கெளம்பிட்டாய்யா...பிரேம் மீண்டும் கிளம்பிட்டாய்யா...என்பதற்கு நீங்கள் நினைப்பதுபோல மீண்டும் எங்கேயும் வெளிநாடு எங்கேயும் கிளம்பவில்லை...இந்த கிளம்பல் என்பது, ஒருவகை நக்கல், நய்யாண்டி, எடக்கு, மொடக்கு, எகத்தாலம், இருமாப்பு, ஆப்பு, வேட்டு, வேடிக்கை இதுபோன்ற அர்த்தங்களில் ஒன்று! காத்திருங்கள் சொல்கிறேன்! எல்லாம் நம்ம சம்மந்தப்பட்டதுதான். நமக்கு நம்ம கதையை பேசவே நேரமில்லை இதில் எங்கே உலகத்தை பற்றியெல்லாம் இங்கே எழுதுவது! நான் ரொம்பவும் தற்பெருமை இல்லாத ஆளாக்கும்! விரைவில்.......