Friday, September 29, 2006

அருள்மிகு மகாமாரியம்மன் தீமிதி திருவிழா 2006!

ஒவ்வொரு ஆண்டையும் போல, இந்த ஆண்டும் தீமிதி திருவிழா, நம் சிங்கப்பூர் அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோவிலில் நடைபெறவிருக்கிறது!
வருகின்ற 09 அக்டோ 2006 அதிகாலை 03.00 மணி முதல் தீக்குழி இறங்கும் விழா ஆரம்பமாகவிருக்கிறது,. அது சமயம் அணைத்து பக்தர்களும் வந்திருந்து அம்மாவின் அருளைப் பெற்றுச் செல்லவும்!

Monday, September 25, 2006

தில்லானா மோகனம்பாளின் திசைமாறிவிட்ட பயணம்!

"நாட்டியப் பேரொளி" பத்மினி அவர்கள் இன்று நம்மிடையே இல்லாதது மிகுந்த வருத்தம்தான். 25-09-06 இரவு சென்னையில் மாரடைப்பால் மரணம். அன்னாரது ஆத்மா ஷாந்தியடைய அனைவரும் பிராத்திப்போம்...

Thursday, September 21, 2006

புதிய கண்டுபிடிப்பு




உலகத்தில் ஒரேமாதிரி ஏழு பேர் இருப்பாங்களாமே! sorry friends, என்னால 5 பேர்தான் முடிந்தது, உங்களுக்கு தெரிந்தா அனுப்பி வையுங்களேன்!
இதெல்லாம் எங்களுக்கு வேலையா, என்று கேட்பது புரிகிறது. முடிந்தால் போதும்.ஹி..ஹி.ஹி.

Tuesday, September 19, 2006

HAPPY BIRTHDAY GAJA!

யானையா பொறந்திருக்கலாம்!

Wednesday, September 13, 2006

பிடிச்சிருக்கு! சூர்யா உன்னை பிடிச்சிருக்கு!


இரு மனம் மட்டும்
இணைந்திருந்தது
இதுவரை!
இன்று இருவருமே
இணைந்துவிட்டோம்
இனிய திருமணத்தில்!
இனிவரும் காலத்தில்
இணைந்திருப்போம்
இருவரது உடலில்
இருப்பது ஓர் உயிராக!

சூர்யா!
சூரியன் இருக்கும்வரை
சூப்பராக வாழ்வாய்!
ஜோவுடன்
ஜோடி சேர்ந்து
ஜோராக வாழவேண்டும்!

நாம் இருவரும்
நல்லபடி வாழ்ந்து
நக்கல் செய்தவர்கள்
நாக்கை
நறுக்கவேண்டும்!

சினிமா நடிகர்கள்
சிதறிப்போவார்கள் என்ற
சிந்தனையைச்
சிதறடிக்கவேண்டும் -நம்
சிறந்த வாழ்க்கையால்!
சிந்தித்து செயல்படிவோம்
சிறப்பாக வாழ்ந்திடுவோம்!
வந்திருந்தோர்
வாழ்த்தியபடி
வம்பு சண்டையில்லாமல்
வாழ்ந்திடுவோம்
வையகம் உள்ளவரை!

சூர்யா!
என்னையே உனக்கு
எடுத்து கொடுத்துவிட்டேன்,
என் பசுமையான
எண்ணங்களில்
பாலை வார்க வா
பாசமானவனே!

பிரியமானவர்கள்
வாழ்தும் நேரத்தில்
பிரியமுடன் என்னை
பிடித்துக்கொள்
பிரியாமல் வாழ்ந்திடுவோம்!

ஆண்டவன் நமக்கு
அருள் புரியட்டும்
அனைத்து வரமும்
அமையட்டும்!
அமைதி நம்வாழ்வில்
அடித்தளம்
அமைக்கட்டும்!

Monday, September 11, 2006

இல்லறமும் இனி இனிதாகட்டும்!


வாழ்த்துக்கள்! இவ்வுலகில் இருக்கும் வரை இருவரும் இணை பிரியாமல் இணைந்திருக்க, பிரியமுடன் வாழ்த்துகிறேன்!

Friday, September 08, 2006

பண்னாட்டு நிதி நிறுவன, உலக வங்கி கூட்டங்கள்!


<எங்கள் இடத்தில் விழாக்கோலம்! ஆம், உலக வங்கி, IMF கூட்டங்கள் நடந்தேறி வருகின்றது!
எங்கள் Tower -ஐ சுற்றியும் Steel Barricades கொண்டு அரண் அமைக்கப்பட்டுள்ளது. பார்பதற்கு சற்று அச்சமாகக் கூட இருக்கிறது. ஆனாலும் எந்தவித அசம்பாவிதமும் நம் இடத்தில் நடந்துவிட கூடாது என்ற எண்ணம், நம்மிடையே தைரியத்தை ஊட்டுகிறது.
உண்மையில் சொல்லப்போனால், நம் நாட்டில் இந்த மாநாடு நடப்பது நமக்கெல்லாம் பெருமைதான்!அதுமட்டுமல்ல, அழகான நாடு என்ற பெருமையுடன் சேர்ந்து ஆபத்தில்லா நாடு என்ற பெருமையுடனும், நிம்மதியுடனும் நாம் வாழலாம்!
SUNTEC CITY -ஐ சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் சும்மா பூத்து குலுங்குகிறது. அவ்வளவு அழகு! நான் இங்கிருக்கும் Tower 2 உள்ள ஒரு அலுவலகத்தில் பணி. ஆகவே நான் இங்குள்ள அழகான சூழ்நிலையை தினந்தோரும் ரசிப்பதுபோல நீங்களும் எங்க பகுதிக்கு ஓய்வாக இருக்கும் பொழுது வந்து பார்து செல்லலாமே! ஆனால் மாநாடு நடக்கும் பகுதிக்கு வருவது சிரமம், ஆனால் car or public transports பயன்படுத்தி இந்த பகுதியின் அழகை கண்டுரசித்து செல்லமுடியும்! வண்ண வண்ண பூக்கள் கண்களுக்கு நல்ல விருந்து!

Thursday, September 07, 2006

Tuesday, September 05, 2006

PRIYAMUDAN PREMKUMAR

எதையும் கேள்வி கேட்பது அறிவின் முதற்படி! எல்லாவற்றுடனும் ஒத்துப்போவது அறிவின் உச்சப்படி! இப்படி உத்துப்பார்பது கொஞ்சம் அதிகப்படி!

Blog Archive