Wednesday, December 29, 2010

HAPPY NEW YEAR 2011

Hi...Everybody....Wish u a Happy New Year.......2011. New year...New plans....New life...New postings....superb...wait...wait...wait for sometime. All the very best guys....Have a good year! Prem

Tuesday, October 19, 2010

கடுப்பா எழுதிய கவிதை ( காரணமேயில்லாமல்)

உப்பு சப்பில்லா
உறவு!
உன்னிடத்தில் உணர்ந்தேன்!
உப்பில்லா பத்தியக்காரனாக
உண்மையில் பைத்தியக்காரனாகவும்
உலாவருகிறேன்!
நீ
உள்ளத்தில் இருப்பதால்
உயிராக இருக்கிறாய்
உப்பில்லாமல் இருந்தாலும்
உன் நினைவுகளில்
உலகில் வாழ்வதில்
தப்பில்லை என்று
தவறாமல் நினைக்கிறேன்!
இனிய குரலுக்கு
இனி இந்த குழல் அடிமை!
அந்த குரலை வைத்து
அடியேனை ஒருமுறை
அழைத்து அன்பே....என்பாயா?
ஆசையில் பாதி
ஆயுசே போய்விட்டது,
ஆனாலும்
கள்ளி நீ
கருணையே காட்டவில்லை!
உனக்கு
கவிதை ஒரு கேடா.....
ஓடிப்போய்விடு...
ஒருவரி கூட படிக்காதே....

Friday, May 21, 2010

இது என்ன கூத்து......

என்ன என் இனிய நண்பர்களே! புதியதாக வந்தவர்களே! வணக்கம்! அடிக்கடி வராவிட்டாலும் ஆடிக்கும் அமாவாசைக்குமாக வருவது தவறுதான் மன்னிக்கவும்! ஆசை இருந்தாலும் நேரம் நம்மை கையை கட்டி போட்டுவிடுகிறது....அட ஆர்வம் கூட அவ்வளவாக இல்லாமல் போய்விட்டது என்பதும் உண்மைதானோ! சரி உங்கள் நேரத்தை வீணடிக்காமல் எதையாவது எழுதிவிடுகிறேன். என்ன நம்ம அனுபவங்கள்தான்......

வழக்கம் போல உள்ளூர் தொலைக்காட்சி வசந்தம் தான் மீண்டும். அட என்ன செய்வது சிங்கப்பூர் தமிழ் மக்களுக்கு ஒரே விஷயம் உள்ளூர் தமிழ் தொலைக்காட்சிதான். அதில் அவ்வப்போது இடம் பெறுவது வாடிக்கையாக வந்துவிட்டது. எனக்கு இதை விட்டா எழுதுவதற்கு ஒன்றும் தெரியவில்லை. சரி என்ன நடந்தது.

இப்பொழுதெல்லாம் சற்று அடிக்கடி தொலைக்காட்சியில் தோன்றுவதாக நண்பர் என்னை பெருமை படுத்த நினைத்தாலும், நான் முடிந்த அளவு எல்லாவற்றையும் சுருக்கி கொள்ளத்தான் ஆசைப்படுகிறேன். அந்த வகையில் ஒரு சில நாடக தாயாரிப்பு குழுக்கள் என்னை அழைத்தபோதும், இருக்கின்ற நிரந்தர வேலைக்கு இடையூரு வரும் என்ற அச்சத்தில் எந்த வித ஒப்பந்தத்திலும் கையெழுத்திட தயங்கி வருகின்ற வாய்புகளை விட்டுவிடுவதில் கவனமாக இருக்கிறென். இருந்தபொழுதும், கடந்த மாதம் ஒரு பாட்டு போட்டி வசந்தத்தில் நடந்துவருகிறது, அதுதான் இது என்ன பாட்டு, இதில் பங்கெடுத்து மாபெரும் தோல்வியை முதல் சுற்றில் பெற்று வீடு திரும்பியது சந்தோஷம்! அடுத்த சுற்றுவரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது! இந்த நிகழ்ச்சி வரும் ஞாயிறு இரவு 7.30 மணிக்கு வசந்தத்தில் ஒளிபரப்பாக இருக்கிறது. முடிந்தால் அதை இங்கே பதிவில் போடுகிறேன். அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுவது.....ஒன்றே ஒன்று....ஒரு தொலைக்காட்சி நாடகத்தில் ஒரு சில காட்சிகளில் தோன்றும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது...அது சம்மந்தமாக அடுத்த பதிவில்...மீண்டும் சந்திப்போம்....

Tuesday, March 30, 2010

வருவேன் விரைவில்....

நண்பர்களே! ஒரு சில சுவையான தகவல்களுடன் விரைவில் வருகிறேன். இப்ப எங்கேயும் போகவில்லை....விரைவில் எழுதுகிறேன் என்பதைத்தான் தெளிவாக குழப்பி எழுதியிருக்கிறேன். நன்றி

Tuesday, February 09, 2010

அட...படிச்சுட்டுத்தான் போங்களேன்...காசா...பணமா..

என்ன தமிழ் மக்களே.....மீண்டும் தமிழா என்று கேட்கிறீர்களா....தமிழனாய் பிறந்ததற்கு என்ன தவம் செய்தேனோ என்று சந்தோஷமாக இருக்கும் வேலையில் தமிழில் எழுதுவது தானே சிறப்பு! உங்களுக்கு எல்லாம் வருது சிரிப்பு! தயவுசெய்து சிரிக்கவேண்டாம். சரி விடுங்க...வந்த வேலையை பார்போம்!

அப்புறம் வாழ்க்கையெல்லாம் எப்படி போகுது! நல்லாயிருந்தா நல்லதுதான் நாட்டுக்கும் நமக்கும்!அட... நம்ம வாழ்க்கைகூட அப்படித்தான் ஏனோ தானோ என்று ஓடிக்கொண்டிருக்கு, ஆண்டவன் அருளில் எப்போதும்போல ஓடுவதால் சந்தோஷம்தான்!
ஒரு விஷயம் சொல்ல மறந்துவிட்டேன்! ஒரு சில மாதங்களுக்கு முன் உள்ளூர் தொலைக்காட்சியில் பதிவு செய்யப்பட்ட என்னுடைய இரண்டு பட்டிமன்றமும் வெளியாகிவிட்டது, நான் உங்களுக்கு தகவல் தர மறந்துவிட்டேன், கூடிய சீக்கிரமே அதை பதிவில் போடுகிறேன்! பார்த்து நொந்துபோகலாம்! ஹா..ஹா.ஹா..

இல்லங்க. கொஞ்சம் நல்லாயிருந்ததா, நான் நினைத்தாலும், ரொம்ப நல்லா நான் பேசியிருந்ததா என் நண்பர்களும், அதில் இருக்கும் குறைகளை சுட்டிகாட்டி வேறு சில நல்ல நண்பர்களும் சொல்லியிருந்தார்கள். எப்படியோ இருந்தது என்னையும் ஒரு சில வாரங்கள் தினந்தோறும் பலமுறை தொலைக்காட்சியில் காட்டி காட்டி இங்கே இருக்க்கும் அனைத்து தமிழ்மக்களின் பார்வையில் படவைத்து, என்னை அடையாளம் காட்டிவிட்டார்கள். அதன் விளைவுகளையும் சில இடங்களில் காண முடிகிறடு! ஆட்டோகிராப் போட்டு போட்டு பேனா வாங்கமுடியவில்லை...ஹ..ஹா...ஹா...ஹா.... ரொம்ப ஓவரா இருக்கா....மன்னிக்கவும். இன்னும் ஏதேதோ தகவல்கள் எழுத நினைத்தேன், நேரமாகிவிட்டது, வீட்டுக்கு போகவேண்டும், துணியெல்ல்லாம் நானே துவைக்கவேண்டும்!ம்ம்ம்ம்ம்ம்ம்......என்ன...என்ன...நீங்க கேட்கும் கேள்வி எனக்கு கேட்கிறது! மனைவி துவைக்க மாட்டார்களா என்றுதானே கேட்கிறீர்கள். இப்பெல்லாம் எங்கெங்க மனைவி துவைக்கிறார்கள். வாசிங் மெசின் தான் நம்ம சொல்லுவதை கேட்குது. என் மனைவிதான் இந்தியாவில் இருக்காங்கலே. ஆமாம் அப்படியே இங்கே இருந்துட்டாலும்....அவளுடையதையும் நாந்தான் சேர்த்து துவைக்கவேண்டியிருக்கும்! சரி விடுங்க...இதெல்லாம் குடும்ப சாமாச்சாரம்! கல்யாணம் ஆனவர்களின் ஆதங்கம்! வாழ்க வணக்கம்!

Tuesday, January 26, 2010

SMILE PLEASE.

Hi....Everybody...Wish u Happy New Year!!!!!
English...Yap.....English!!!!
Son of White people!
Hello...Hello....Dont think like that!
My Tamil Keyboard not working la! So no way to kill u by my Pure Tamil. Hence Im here to kill u all by my worst English.
Are u asking me, what im going to write here today!
Many things, but nothing ya!

Okey...My dear Freinds, How is your life is going on with your blogspot, facebook and all...How...okey right! Thats Good. Keep it up.
I hope that u could understand What im going to tell u! Haa..haa... Nothing ya!
I have huge plan to write in English from now onwards. U r the guys, Are u ready to read this? Dare devils wont afraid right, then wait and read my post lah...
Why dont u allow me to write different things in my next post. Pls leave me lah...See u all soon with a interesting topic okey.Good Friends. Smile pls...bye

Thursday, January 14, 2010

இனிக்க இனிக்க இங்கே பொங்கல் புத்தாண்டு பிறந்திருக்கிறது!

தைப் பொங்கலும் வந்தது,
பதிவும் தந்தது
பார்க்க வந்தது யார்!

என் பதிவுக்குள் வந்து
என் எழுத்துக்களை
படிக்கின்ற உங்களுக்கு
பாராட்டுகளை தெரிவித்து
வாழ்த்துகளையும்
வழங்க ஆசைப்படுகிறேன்.

எல்லோருக்கும்
என் இனிய தமிழ்
புத்தாண்டு மற்றும்
பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

பிறந்திருக்கும் இந்த
புதிய தமிழ் வருடத்தில்
புத்துணர்சியையும்
இழப்பில்லா
இனிய வாழ்க்கையையும்
இவ்வுலக மக்களுக்கு
இறைவன் அருளட்டும்!

இன்று பொங்கும்
இனிய பொங்கலைப்போல
மக்கள் வாழ்வில்
மகிழ்ச்சி பொங்கட்டும்!