Friday, December 29, 2006

புத்தம் புது பூ பூத்தது 2007!




எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
இந்த 2007 நம் அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைய ஆண்டவை வேண்டிக்கொள்கிறேன்! நல்லது பல நடக்கவேண்டும்! உலகத்தில் அமைதி நிலைபெறவேண்டும்!
எந்த ஒரு சிறு அசம்பாவிதமும் நடக்ககூடாது என்று ஆண்டவனிடம் முறையிடுகிறேன்...
மேலும் ஒவ்வொருவருடைய வாழ்கையிலும் அவர்கள் நினைத்தது போல எல்லா சுபகாரியங்களும் இந்த ஆண்டில் நடந்து... இந்த நூற்றாண்டின் சிறந்த ஆண்டாக இந்த 2007 தேர்வு பெற எல்லாம் வல்ல இறைவன் எல்லோருக்கும் அருளட்டும்! வாழ்க வையகம்! வாழ்க மனிதகுலம்! வாழ்த்துக்கள்!

Friday, December 15, 2006

நான் முன்னால போனா 'அது' எனக்கு முன்னால போகும்!







என்ன நண்பர்களே! தலைப்பை பார்த்ததும் தலையை சுற்றுதா, ஆமாங்க...

பொதுவா, நீ முன்னால போனா நான் பின்னால வாரேன்...இப்படித்தான் பாட்டு இருக்கு, ஆனா இது பாட்டு இல்லேங்க, என் பாடு எப்படியிருகுன்னு இப்படி சொன்னேன்!

அட., ஆமாங்க நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த பாட்டு போட்டியில்ல பாட்டு போட்டு....என்ன போட்டின்னு கேட்குறீங்களா....அதாங்க நம்ம மீடியா கார்ப் ரேடியோக்காரங்க நம்ம ஒலி 96.8 நடத்தும் 100 பாடல்கள் COUNT DOWN நிகழ்ச்சி வருகின்ற 31 தேதி FORT CANNING PARK --ல் நடக்கப்போவுது தெரியுமா, அங்கே அந்த நிகழ்ச்சியில் KARAOKE போட்டி எல்லாம் வச்சிருக்காங்க....

அதனால என்ன, அட அந்த கரோக்கி போட்டியில் பங்கெடுக்கனும்னு ஆசைதான்... டேய், அதுக்கு பாட்டு பாடனும்டா....தெரியுங்க....நானும் நிறையா பாட்டு பாடியிருகேன்! எங்கேடா....எப்போ? வேற எங்கே குளியலறையில்தான்! அங்கே பாடுவதும்போதே வீட்டில் இருப்பவர்கள் ஏசுவார்கள்! இருந்தாலும் பாடி பார்போம் என்ற ஆசை! ஆனால் அந்த போட்டியில் பங்கேறபதற்கு முன்னாடி வருகின்ற 22ம் தேதி ஒலியின் ஒலிபரப்பு நிலையத்தில் நடக்கும் தகுதிச் சுற்றில் கலந்து வெற்றி பெற்றால்தான் போகமுடியும்....

பிரேம்குமார்(ஒலி) கிட்ட போன் செய்து பதிவு செய்தாகிவிட்டது! அப்புறம் என்ன போய் பாடிபாக்கலாம்தேனே.... நீங்க கேட்பது புரிகிறது....இப்பதான் அந்த பாடல் வரிகள் வேலை செய்யப்போகிறது.... என்ன்... என்னவேலை...

ஆமாப்பா...நான் 22 தேதி வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு அந்த நிகழ்ச்சிக்கு செல்ல ஆர்வமா இருந்த வேலையில், நேற்று தான் நம்ம MR. இடஞ்சல் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது... ஆமாங்க... அதே தேதி... அதே நேரம்.... 22ம் தேதி மாலை 7 மணிக்கு எங்க அலுவலகத்தின் 2006 ஆண்டிற்கான STAFF ANNUAL DAY PARTY வச்சுட்டானுங்கப்பா... நான் இல்லாம இந்த பார்டியா.... இந்த நிருவனத்தில் இது என்னுடைய முதல் ஆண்டுவேற அதுமட்டுமல்லாமல் எங்க நிருவனத்தின் ஆக சிறியவன், செல்லப்பிள்ளை மாதிரி எல்லோருக்கும்... நான் வரமாட்டேன் என்று சொல்ல முடியாது... பரிசு எல்லாம் கிடைக்கும்....ம்ம்ம்ம்ம்...எப்படி நீங்களே சொல்லுங்க... விட்டுட்டு பாட்டுப் பாட் போகமுடியும்.... என்ன செய்வது ஒரு கதவு திறந்தா இன்னொரு கதவு மூடிவிடுகிறது! ஒரு வருடத்தில் இத்தனை நாட்கள் இருக்கும்போது, இந்த இரு நிகழ்ச்சியும் இப்படி ஒன்னா வந்து என்னை இம்சை செய்கிறது!

இப்ப இந்த பாடல் வரி சரிதானெ.... நாம ஒரு இலக்கை நோக்கி இரயிலில் சென்றால் நம்முடைய mr. இடஞ்சல் நமக்கு முன்னாடி இரயில் எஞ்ஜினில் செல்கிறார். என்ன செய்வது, நமக்கு அந்த வாய்ப்புக்கு வழியில்லாத காரண்த்தால் நம்முடைய இம்சையில்லாமல் நிறையா நல்ல பாடகர்கள் எல்லாம் பாடி நிகழ்ச்சி நல்லாயிருக்கும் என்ற சந்தோஷம் நம்மகிட்ட இருக்கு. அதுபோதும் நமக்கு! வருடம் பிறக்கும்போது நான் வேற ஏன் நிகழ்ச்சிக்கு வருகின்ற ரசிகர்களை தொந்தரவு செய்யனும். அதுதான் ஆண்டவனே பார்த்து அடக்கிவச்சுட்டான் ஆசையை! ஆர்வம் இன்னும் என்னிடம் என்றும்போல.........

Thursday, December 07, 2006

பூத்து..பூத்து குலுங்குதடி...பூவு!


பூவுக்கெல்லாம் சிறகு முளைத்து
பறந்து வரப்போகிறது!
எங்கே?
அட இங்கேதாப்பா!
எங்கள் அலுவலப்பகுதியில்
எங்கேயிருக்கு அது!
அட,
நம்ம SUNTEC CITY, SINGAPORE போதுமா!!
ஓ..அப்படியா? அங்கேதான் அடிக்கடி ஏதேதோ விழாக்கல் நடக்குதே, இப்ப என்ன நடக்கப்போவுது...
ஒரு நிமிஷம் இருங்க... நான் சொல்லுவதைவிட கீழேயிருப்பதை சொடுக்குங்க அது நிறையா கலர், கலரா சொல்லும்பா...என்ன ஆளவிடுங்க...

Tuesday, November 28, 2006

புரியாதத் தகவல் புரியுதா உங்களுக்கு!



இன்றைய தகவலாக வருவது உணவு பழக்க வழக்கம் பற்றிய ஐயம்!
கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன் சிங்கப்பூர் வானொலியான ஒலியின் கல..கல..ப்பான படைப்பாளர் செல்வி. விமலாதேவி அவர்கள் ஒரு உணவு குறிப்பு வானொலியில் தந்தார்கள். வழக்கம்போல எல்லோரையும் போல நானும் அதை கேட்டுவிட்டேன்.. அட எனக்கும் அந்த குறிப்பைத் தொடரவேண்டும் என்ற ஆசை வர அன்று முதலே கடைபிடிக்க ஆரம்பித்தேன்.. ஆனால் மனதுக்குள் ஏற்பட்ட ஒரு பெரிய ஐயத்தால், இதுவரை அந்த பழக்கத்தை நடைமுறை படித்தாமல் காத்திருக்கிறேன்... யாராவது தகுந்த விளக்கம் கொடுத்து என்னை தெளிவு படுத்தினால் தொடர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது!
அதுசரி... என்ன அந்த குறிப்பு என்றே நான் இன்னும் சொல்லவில்லையா.. மன்னிக்கவும்... இதோ..இதோ... விமலா சொன்னாங்க.... உடல் நிலையை ஆரோக்கியமா வைத்துக்கொள்ள உணவு பழக்க வழக்கத்தில் மாற்றம் தேவை, கட்டுப்பாடுதேவை என்றும் அதை எப்படி கடைபிடிக்கவேண்டும் என்பதற்கு ஒரு உதாரணமாக சில செய்திகளைச் சொன்னார்கள்! அது என்ன...இதோ கீழே...
நாம் மூன்று வேலைகள் சாப்பிடுகிறொம் இல்லையா! அதை எவ்வாறு கடைபிடித்தால் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம் என்பதற்கு அவர் சொன்ன உதாரணங்கள்:
காலை: சக்கரவர்த்தி போல சாப்பிடவேண்டும்!
மதியம்: இளவரசர் போல சாப்பிடவேண்டும்!
இரவு : பிச்சைகாரன் போல சாப்பிடவேண்டும்!
இதில் என்ன இருக்கு சரியாதானே சொல்லியிருக்காங்க என்று நீங்க நினைப்பது சரிதான்... நான் கூட அப்படி நினைத்து காலை, மதியம் இருவேலையும் கடைபிடித்துப் பிறகு மூன்றாவதாக இரவு வந்ததும் சாப்பிட உட்காரும் முன், அவர்கள் சொன்னது ஞாபகம் வர ...பிச்சைக்காரன் போல என்றார்களே... அது எப்படி? சந்தேகம் வர... கடுமையாக யோசித்தேன்.. இரவில் பிச்சைக்காரன் போல என்றால்.. இரவில் பிச்சைக்காரன் எப்படி?!!!! இரவில் பிச்சை என்பது ராப்பிச்சை என்பார்களே அதுவா? அப்படியென்றால்,. இரவில் பிச்சைக்காரன் ராப்பிச்சை என்ற பெயரில் குறைந்தது ஒரு 5 அல்லது 6 வீடுகளில் சோறு வாங்கி மொத்தமாக வைத்துக்கொண்டு சாப்பிடுவான்.... அப்படியென்றால் நம்மை விமலா... 5,6 வீட்டில் பிச்சை எடுத்து சாப்பிட சொல்கிறாரா அல்லது அந்த இரவு பிச்சைக்காரன் சாப்பிடும் அளவிற்கு நிறையா சாப்பிட சொல்கிறாரா என்று தெரியாமல் இன்று வரை இரவு சாப்பாடே சாப்பிடுவதில்லை... அட உங்களில் யாருக்காவது இது எப்படின்னு சொல்லத்தெரிந்தால் சொல்லுங்க இன்று இரவாவது நிம்மதியா சாப்பிடனும்... தயவுசெய்து நீங்க யாரும் இரவு சாப்பிட போகும்போது... இந்த கதையை நினைக்காதீங்க. நினைத்தீங்கன்னா அப்புறம் என் கதைதான் உங்களுக்கும் சொல்லிபுட்டேன் ஆமாம்....

Monday, November 20, 2006

வருக! வருக! வணக்கம்!

என் வலைப்பூ விற்கு வருகை தந்துள்ள அனைத்து தமிழ் நெஞ்சங்களையும் தலை வணங்கி வரவேற்கிறேன்! சிறுபிள்ளைத்தனமான சில கிறுக்கல்களை பெரிய மனதுகொண்டு மன்னிக்கவும்!

இப்படியொரு ஆசையும் வந்துட்டா!


அட என்னங்க செய்வது நீண்ட நாள் விருப்பமும் ஆசையும் கூட, நீண்ட நாட்களுக்கு பிறகு காலம் கூடி வர, ஓடிப்போய் நின்னுட்டேன் நானும், எங்கேன்னு தெரியனுமா! அட நம்ம சிங்கப்பூர் மிடியா கார்ப் அலுவலகத்தில் கடந்த ஞாயிறு (19-11-06) நடந்த TV12 DRAMA AUDITION 2006 -ல் தான்!

அங்கே நமக்கு என்ன வேலைன்னு கேட்கிறீங்களா, அட நடிக்க போனேப்பா! என்ன்னனனன..நடிக்கவா?!!!!!! ம்ம்ம்ம்ம்ம்...ஆமாப்பா! சரி...சரி.. நடந்ததை சொல்லித்தொல..

அது! இங்கிருந்து போனேனா, போன உடனேயே அங்கே வரவேற்பறையில் 2 பெண்கள் இருந்தாங்கப்பா, அவுங்ககிட்ட போய் நின்றதும், அவுங்க விண்ணப்பத்தை கொடுத்து பூர்த்தி செய்ய சொன்னார்கள், நான் பூர்த்தி செய்து கொடுத்தவுடன் ஒரு ஒட்டும் தாளில் என்னுடைய அடையாள அட்டை எண்னையும், ஒரு ref No. ம் எழுதி கைதி நம்பர் மாதிரி எழுதி மார்பு பகுதியில் சட்டையில் ஒட்டிவிட்டுவிட்டார்கள். என்னுடைய திருப்பம் வந்தவுடன் என்கூட 10 பேரையும் உள்ளுக்குள்ளே அழைத்துச்சென்று, புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.

பிறகு ஒவ்வொருவராக உள்ளே அழைத்து அவர் அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த கதா பாத்திரத்தில் வசனங்களை பேசி நடிக்கவேண்டும்! இருங்க...இருங்க....எனக்கு என்ன பாத்திரம், என்ன காட்சி என்று கேட்கிறீங்களா!...சொல்றேப்பா....இங்கே சொல்லாம வேற யாருகிட்ட போய் இதெல்லாம் சொல்லிகிட்டு இருக்கப்போறேன்....

என் கதாபாத்திரத்தின் பெயர் 'SIVA' நான் உள்ளே போய் அங்கிருந்த ஒரு பெண்ணிடம் (அந்த பெண் அவுங்க ஆளுப்பா, ரொம்ப அனுபவம் வாய்ந்தவங்கன்னு நினைக்கிறேன்) சென்று இணைந்து நடிக்க வேண்டும்... காட்சி நேரம் குறைவுதான்... ஏதோ செஞ்சுட்டு வந்தேன்... வெளியில் இருந்து பாத்தவங்க, நல்லா செஞ்சதா சொல்றாங்கப்பா.....ம்ம்ம்... யாருக்கு தெரியும்.....ஒருவேலை தேர்வு செஞ்சா நான் சந்தோஷப்படுவேன்... தேர்வு செய்யாட்டா தொலைக்காட்சி பார்க்கும் நேயர்கள் சந்தோஷமாயிருப்பார்கள்!

Friday, November 17, 2006

கவியரசு கண்ணதாசன் விழா 2006, சிங்கப்பூர்.

உன் எழுத்து ஒவ்வொன்றும் உனக்கு நீயே கட்டிக்கொண்ட தாஜ்மஹால்!- வைரமுத்து!

கடந்த சனிக்கிழமை இரவு அருள்மிகு சிங்கப்பூர் தெண்டாயுதபாணி திருக்கோவில் மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு செல்லும் வாய்ப்பு இத்துனை ஆண்டுகளுக்கு பிறகு அன்று அடியேனுக்கு கிடைத்தது ஆண்டவன் அருளால்!

தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கி சில குழந்தைகள் நடனமாட கவிஞர் பல கவிபாட பாட்டுப்போட்டியில் பல குயில்பாட படு ஜோராய் சென்றது விழா!
நிகழ்ச்சியின் இருதியாக சிறப்பு சொற்பொழிவு ஆற்றியது யார் தெரியுமா, super star ரஜினியை மட்டும் வைத்து 25 படங்களுக்கு மேல் இயக்கி மொத்தத்தில் 100 படங்களுக்கு மேல் இயக்கியுள்ள பிரபல இயக்குனர் திரு. SP. முத்துராமன் அவர்கள்தான். அதிகநேரம் பேசி அசத்திவிட்டார். மீண்டும் கண்ணதாசனை பார்த்தோம் அவரது சொற்பொழிவில்! அருமை! அருமை!

கூட்டம் மண்டபம் முழுவது நிரம்பிவிட்டது! பல முக்கிய பிரமுகர்களும், கண்ணதாசன் உறவினர்களும், சிங்கப்பூர் பிரபலங்களும் வந்திருந்தனர் அவர்களுள் ஒலி குடும்பத்தார்களான, பொன்.மகாலிங்கம், உமா கணபதி, v.s. ஹரி ஆகியோர்களும் கூட வந்திருந்தனர்.
அருமையான நிகழ்ச்சி அது முடிந்ததும் அருமையான இரவு உணவு.. செவி இனித்து பின் நாவினிக்க நல்லா நடந்த நிகழ்சியை உங்கள் விழியினிக்க விருந்தாக்குகிறேன்..

'கவியரசை' பாராட்டி வரிகள் தந்திருந்தார், மேலே இருக்கும் வைரமுத்து தன்னுடைய மேன்மையான வரிகளினால்! அடித்தளத்தில் இருக்கும் அடியேனுக்கும் அது போன்று எழுத ஆசை வந்தாலும், ஏதோ என் அளவிற்கு முடிந்த இந்த எளிய வரிகளை தருகிறேன், கவிப்பேரரசின் வரிகளை தழுவிக்கொண்டு...

"உன்னுடைய ஒவ்வொரு எழுத்துக்களும், இக்கால இளைஞர்கள் கவிமலையின் உச்சியை கஷ்டப்படாமல் சென்றடைய நீ கட்டிக்கொடுத்த படிக்கட்டுகள்!"

Saturday, November 11, 2006

ஒலி 96.8 ல் தீபாவளி இரவு கொண்டாட்டங்கள்!




வணக்கம் நண்பர்களே! இங்கே இரண்டு செய்திகள் இருக்கிறது, இரண்டாவதாக The Pines ல் நடந்த நிகழ்ச்சி, முதலாவதாக, நிகழ்ச்சிக்கு டிக்கட் வாங்க சென்றபோது MEDIA CORP அலுவலகத்தில் நடந்த சுவையான நிகழ்வுகள்!


முதல்பகுதி: - நிகழ்ச்சிக்கு போகவேண்டும் என்ற ஆவல் இருந்தது, கடைசி நேரத்தில் முடிவெடுத்து செல்லமே பிரேமிடம் டிக்கட் கேட்டால் waiting list என்று சொல்லிவிட்டார், கடைசியில் வெள்ளிக்கிழமை காலை அழைத்து டிக்கட் வந்து வாங்கிக்கொள்ள சொன்னார்... அலுவலக நேரத்தில் எப்படி செல்லமுடியும்... எப்படியோ ஒரு வாய்ப்பு கிடைக்க எங்க company chairman car ஐ எடுத்துக்கொண்டு சைக்கிள் கேப்பில் சென்றுவிட்டு வரலாம் என்று சென்றால், அங்கே போனா பிரேம்குமார் எங்கேயோ போய்விட்டார்.. கடைசியில் Reception போய் நிற்றுவிட்டேன். வரவேற்பு பகுதியில் சேவையில் இருந்த அந்த மலாய் அம்மணியிடம் பிரேம்குமாரை பார்க்கவேண்டும் என்றேன்..உடனே அவர் டிக்கட் வாங்கவா என்று கேட்க, ஆம் என்று நான் சொல்ல எந்த பெயரில் டிக்கட் எடுக்க வந்திருக்கிறீர்கள் என்று அவர் கேட்க நான் பிரேம்குமார் என்று சொல்ல, மீண்டும் அந்த அம்மணி அதே கேள்வியை திரும்ப கேட்க நானும் பிரேம்குமார் என்று திரும்ப சொல்ல அவருக்கு பதட்டம் அதிகரித்து, அந்த நேரத்தில் அங்கே வந்த இன்னோரு பெண்ணிடம் அதை சொல்ல, அவர் கேட்க கேள்வி சற்று வித்தியாசமாக ஆதாவது உங்கள் பெயர் என்ன என்று கேட்க நான் பிரேம்குமார் என்று சொல்ல பலத்த சிரிப்பு இருவரிடமும், எனக்கு பாதியிலேயெ நடப்பது என்னவென்று தெரிந்துவிட்டாலும் நான் அப்படியே கடைசிவரை என்பதிலில் மாற்றம் செய்யவில்லை. உடனே அந்த பெண் என்னிடம் நீங்கள் உங்கள் பெயரைச் சொல்லும்பொழுது My name is Premkumar என்று சொல்லவேண்டும் என்று கூறியவுடனே என்பதில் என்னதெரியுமா! நான் என்ன Kindergarten going Kid ஆ அப்படி பதில் சொல்ல மறுமுறையும் சிரிப்பு..பிறகு யாரிடமோ பேசினார்கள், சரி police ஐ தான் கூப்பிடுகிறார்களோ என்று நினைக்க சிரித்த முகத்துடன் சுசிலா வந்தார்கள்...அட அட அப்படி ஒரு சிரித்த முகத்துடன் என்னை வரவேற்று டிக்கட் கொடுத்து மழை பெய்கிறதே எப்படி போவீர்கள் என்று அன்புடன் கேட்க.. நான் car ல்தான் வந்திருக்கிறேன் என்று சொன்னதும், நனையாமல் செல்லமுடியுமே என்று நினைத்து அவர்கள் சந்தோஷப்பட்டு வழியனுப்பிவைத்தார்கள்!அவருக்கு என் நன்றி!
இப்பொழுது முக்கியமான

Second Part: தனியே செல்கிறோமே என்ற தயக்கம் இருந்தாலும், அந்த அழகான அறையில் சென்று அமர்ந்தவுடன் அருகிலிருந்த அன்பர்களை என் நண்பர்களாக்கிக் கொண்டேன் அனைவரும் சற்று முதியவர்கள் என்பதால் என்னை தன் மகன் போல பாவித்தார்கள்! குளிர் பானங்களுடன் குளிர்ச்சியாக தொடங்கியது நிகழ்ச்சி! அதன்பின் அருமையான பல அங்கத்துடன் நிகழ்ச்சி கலை கட்டியது, இடையிடையே சூடான உணவு வழங்கப்பட்டது really it was sumptuous ! ருசியான உணவு ரசிக்க கூடிய நிகழ்ச்சி என நல்லா போனது! ஆனால் இடையிலே இரண்டுமுறை எனக்கு ஆப்பு காத்திருந்தது...திடீரென்று என்முன்னே வசந்தம் சென்ரல் காமிரா மேனும் ஒலிவாங்கியுடன் ஒருவருமாக என் முன் தோன்றி என் முகத்திற்கு முன் ஒலிவாங்கியை நீட்டி நிகழ்ச்சி பற்றிய கருத்தைக்கேட்டால் என்ன சொல்வது ஆடிப்போனாலும் சமாளித்துக்கொண்டு ஏதோ அடிச்சுவிட்டேன்! இப்படியாக நிகழ்ச்சி சென்றுகொண்டிருக்கும் பொழுது இறுதி அங்கமாக பாட்டுக்கு பாட்டு போட்டி வந்தது, பங்குபெரும் விருந்தினர்களும் கலந்து கொண்டனர். ஒலிவாங்கியை தூங்கிகொண்டு ஒவ்வொரு மேசையாக ஓடிவந்த பாலா என் அருகே வந்தவுடன் என்கிட்ட கொடுத்து பாடச்சொல்லிவிட்டார், எனக்கு வந்த எழுத்து 'மா' திடீரென்று கொடுத்து பாடச் சொன்னால் என்ன பாடுவது பதட்டம்வேறு அதைவிட குளிர்பானம் குடித்து தொண்டைவேறு கட்டிவிட்டது. உடனே ஒரு பாட்டு நினைவில் வந்து ஆரம்பிக்க..சலசலப்பாக இருந்த அந்த அரங்கம் திடீரென்று அமைதியாகி அனைத்து தலைகளும் என்பக்கம் திரும்ப வெட்கம் என்னை கவ்விக்கொள்ள வார்த்தை மாறியது, வாயில் வந்த சொல்லையெல்லாம் போட்டு பாடவேண்டயதாயிற்று, அதற்குள் எதிர் அணியினர் பாட்டில் பிழை இருப்பதாகச் சத்தம் போட நிறுத்திவிட்டேன்.. இதனை பார்த்துக்கொண்டிருந்த ஒரு சிலர் தலையை குனிந்துகொண்டனர்... இப்படி நம்ம நிலம போச்சு அங்கே! கடைசியாக நிகழ்ச்சி முடியும்வரை இருந்துவிட்டு! escape and Run away! வெளியே ஓடிவந்த நொடிமுதல் ஒட்டிக்கொண்டது ஒரு ஏக்கம்! என்று பார்க்கப்போகிறோம் இனிமேல்...(நிகழ்ச்சியை) என்ற ஏக்கத்துடன்!
அடுத்த நிகழ்ச்சியில் அனைவரையும் சந்திக்கும்வரை இந்த இனிமையான நினைவுகளோடு....

Friday, November 10, 2006

கண்களை குளிரச்செய்த காமரன் ஹைலாண்ட்ஸ்!


எங்கு பார்த்தாலும் இனிமையான இயற்கை! பார்க்கும் இடமெல்லாம் பச்சை கம்பளங்கள்! இப்ப நினைத்தாலும் குளிர்ச்சி மனதுக்குள்!
அங்கே மலர்ந்திருந்த ஆயிரம் வகை மலர்களில் இதும் ஒரு வகைதாங்க! மனதை மலரச்செய்கிறதல்லவா!
இந்த அருவிகூட அசத்தலாகத்தான் இருந்தது! குழிப்பது அரிது என்பதால் கண்களை மட்டும் அந்த இயற்கையால் கழுவிவிட்டு வந்தோம்!
மலேசிய விரைவுச் சாலையில் எங்களை முதலிலி அசத்தியவர்.. அட ஆள் இல்லேங்க... மனிதபொம்மைங்க அது!


Thursday, October 26, 2006

CAMERON HIGHLANDS, MALAYSIA

இந்த ஆண்டு தீபாவளிக்கு 4 நாட்கள் விடுப்பு எடுக்கும் வாய்ப்பு வர நண்பர்களுடன் கலந்தாலோசிக்க காமரன் ஹைலாண்ட்ஸ் போகலாம் என் திட்டம் தீட்டப்பட்டது. நீண்ட்தூர பயணம் என்பதால் சற்று யோசித்தாலும் வாடகைக்கு நல்ல பெரிய வசதியான "HYUNDAI TRAJET" எடுத்துக்கொண்டு கிளம்பியாச்சு.. நானும் என் நணபனும் மாற்றி மாற்றி காரை செலுத்தினோம்...மலேசிய விரைவுச் சாலைக்கும் தேர்வு செய்யப்பட்ட பாடல் தொகுப்புக்கும் பயணம் அப்படித்தான் இருந்தது போங்க...சூப்பரப்பு! காமரன் உண்மையிலேயே பார்கவேண்டிய இடம்... நிறைய போட்டோ சுட்டோம்.. ஒரு சில மட்டும் இங்கே! 3 நாட்களில் நிறைய விஷயம் தெரிந்துகொண்டோம்... இது சம்மந்தமாக ஏதாவது பயணக்குறிப்பு நண்பர்கள் யாருக்காவது தேவைப்பட்டால் தயக்கமின்றி எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும்..
சிங்கப்பூரிலிருந்து அங்கே எங்களைப் போன்று நிறையப் பேர் வாகனத்தில் வந்திருந்ததைப் பார்த்தோம்... எனவே ஒரு முறை போயிட்டுத்தான் வாங்கலேன்! சிங்கப்பூரிலிந்து குறைந்த பட்சம் 650 கி.மி தூரத்தில் இருக்கிறது அழகிய காமரன் ஹைலாண்ட்ஸ்!

Wednesday, October 18, 2006

தித்திக்கும் தீபப்பெருநாள்! சிங்கப்பூர் 2006





சிங்கையின் சிறப்பு
தீபாவளியிலும் இருக்கு!
தித்திக்கும் இனிப்பு
தீபாவளியின் களிப்பு!
ஒளிவெல்லம் ஊரெல்லாம்
குட்டி இந்தியாவிலும்
கொட்டிக்கிடக்கிறது!

இந்தியர்களின்
இனிமை பெருமையை
இதுதாங்க எடுத்துகாட்டுது!

முகமெல்லாம்
மலர்ச்சி
அகத்தில் ஆயிரம்
குளிர்ச்சி!

வருடத்திற்கு ஒருமுறை
வந்தால்கூட
இதயத்தில் ஒரு
இதமான இடத்தை
இது வைத்திருக்கிறது
!

இந்த விழாக்காலத்தில்
உலாப்போவதும்
விரும்பியதை உண்பதும்
வேடிக்கை பார்பதும்
வேதனைகளை துறப்பதும்
வேண்டியதை வாங்குவதும்
வெளிப்படையாக பேசுவதும்
பளபளப்பாக உடையனியவும்
பகலெல்லாம் சுத்தவும்
ஒளிவெல்லத்தை ரசிக்கவும்
ஒய்யாரமாக நடக்கவும்
பல கதைகள் பேசவும்
பல கடைகள் பார்க்கவும்
உறவினர்களை பார்கவும்
உளமாற பேசவும்
இனிப்பு பல வாங்கவும்
இதமாக இருக்கவும்
சுற்றி சுற்றி வரவும்
சுறுசுறுப்பை பெறவும்
அலங்காரங்களை ரசிக்கவும்
அசந்துபோய் நிற்கவும்
உற்சாகத்துடன் உழைக்கவும்
அச்சாரமாக அமைந்தது
இந்த தித்திக்கும் "தீபாவளி"
இனிதே கொண்டாடுவோம்!
தீபாவளி வாழ்த்துக்கள்!

என்றும்
பிரியமுடன்
பிரேம்குமார்
:)

Tuesday, October 10, 2006

நான் யார்?




இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், தலப்பா, மீசை, தாடிக்குள் ஒலிந்திருக்கும் இவர் யார் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு நமது அரசர் 1975-ம் ரவாகேசரி அவர்கள் ஆயிரம் கூமுட்டைகளை பரிசாக வழங்குவார்!

ஒருவரை கண்டுபிடித்தால் பரிசு கொடுக்கப்படும் இன்னொருவரை கண்டுபிடித்தால் கொடுத்த கூமுட்டைகள் திருப்பி பெற்றுக்கொள்ளப்படும்! முயற்ச்சி செய்ய விருப்பம் இருக்கா? இல்லையென்றால் இந்த இரு பறவைகளையாவது பிடித்து அவர் யார் என்று காட்டுங்கப்பா! அழகான இயற்கையின் இடையில் அந்த முகம் தெரிவதைவிட இப்படி இருப்பதே மேல்! என்ன சரியா?

Monday, October 02, 2006

கல..கல..கலக்கும் ஒலி படைப்பாளர்!

பலே...பலே! இந்த ஆண்டும் இவுங்கதான் லக்க...லக்க....sorry கல..கல..ப்பான படைப்பாளராமே!
நமக்குத்தான் முன்பே தெரியுமே! நம்மெல்லாம் ஓட்டு போட்டிருக்கோமில்ல....
எனக்கும் பிடித்த படைப்பாளரை என்னைப் போலவே ஓட்டு போட்டு வெற்றியடையச் செய்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் ஒரு ஆயிரம் நன்றி! ம்ம்ம்ம்ம்...இல்ல இல்ல கோடி நன்றி! (காசா, பணமா) போதுமா, பத்தாதா? அதுக்கு மேலே வேண்டுமென்றால் வெற்றி பெற்றவரை கேளுங்கப்பா....

Friday, September 29, 2006

அருள்மிகு மகாமாரியம்மன் தீமிதி திருவிழா 2006!

ஒவ்வொரு ஆண்டையும் போல, இந்த ஆண்டும் தீமிதி திருவிழா, நம் சிங்கப்பூர் அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோவிலில் நடைபெறவிருக்கிறது!
வருகின்ற 09 அக்டோ 2006 அதிகாலை 03.00 மணி முதல் தீக்குழி இறங்கும் விழா ஆரம்பமாகவிருக்கிறது,. அது சமயம் அணைத்து பக்தர்களும் வந்திருந்து அம்மாவின் அருளைப் பெற்றுச் செல்லவும்!

Monday, September 25, 2006

தில்லானா மோகனம்பாளின் திசைமாறிவிட்ட பயணம்!

"நாட்டியப் பேரொளி" பத்மினி அவர்கள் இன்று நம்மிடையே இல்லாதது மிகுந்த வருத்தம்தான். 25-09-06 இரவு சென்னையில் மாரடைப்பால் மரணம். அன்னாரது ஆத்மா ஷாந்தியடைய அனைவரும் பிராத்திப்போம்...

Thursday, September 21, 2006

புதிய கண்டுபிடிப்பு




உலகத்தில் ஒரேமாதிரி ஏழு பேர் இருப்பாங்களாமே! sorry friends, என்னால 5 பேர்தான் முடிந்தது, உங்களுக்கு தெரிந்தா அனுப்பி வையுங்களேன்!
இதெல்லாம் எங்களுக்கு வேலையா, என்று கேட்பது புரிகிறது. முடிந்தால் போதும்.ஹி..ஹி.ஹி.

Tuesday, September 19, 2006

HAPPY BIRTHDAY GAJA!

யானையா பொறந்திருக்கலாம்!

Wednesday, September 13, 2006

பிடிச்சிருக்கு! சூர்யா உன்னை பிடிச்சிருக்கு!


இரு மனம் மட்டும்
இணைந்திருந்தது
இதுவரை!
இன்று இருவருமே
இணைந்துவிட்டோம்
இனிய திருமணத்தில்!
இனிவரும் காலத்தில்
இணைந்திருப்போம்
இருவரது உடலில்
இருப்பது ஓர் உயிராக!

சூர்யா!
சூரியன் இருக்கும்வரை
சூப்பராக வாழ்வாய்!
ஜோவுடன்
ஜோடி சேர்ந்து
ஜோராக வாழவேண்டும்!

நாம் இருவரும்
நல்லபடி வாழ்ந்து
நக்கல் செய்தவர்கள்
நாக்கை
நறுக்கவேண்டும்!

சினிமா நடிகர்கள்
சிதறிப்போவார்கள் என்ற
சிந்தனையைச்
சிதறடிக்கவேண்டும் -நம்
சிறந்த வாழ்க்கையால்!
சிந்தித்து செயல்படிவோம்
சிறப்பாக வாழ்ந்திடுவோம்!
வந்திருந்தோர்
வாழ்த்தியபடி
வம்பு சண்டையில்லாமல்
வாழ்ந்திடுவோம்
வையகம் உள்ளவரை!

சூர்யா!
என்னையே உனக்கு
எடுத்து கொடுத்துவிட்டேன்,
என் பசுமையான
எண்ணங்களில்
பாலை வார்க வா
பாசமானவனே!

பிரியமானவர்கள்
வாழ்தும் நேரத்தில்
பிரியமுடன் என்னை
பிடித்துக்கொள்
பிரியாமல் வாழ்ந்திடுவோம்!

ஆண்டவன் நமக்கு
அருள் புரியட்டும்
அனைத்து வரமும்
அமையட்டும்!
அமைதி நம்வாழ்வில்
அடித்தளம்
அமைக்கட்டும்!

Monday, September 11, 2006

இல்லறமும் இனி இனிதாகட்டும்!


வாழ்த்துக்கள்! இவ்வுலகில் இருக்கும் வரை இருவரும் இணை பிரியாமல் இணைந்திருக்க, பிரியமுடன் வாழ்த்துகிறேன்!

Friday, September 08, 2006

பண்னாட்டு நிதி நிறுவன, உலக வங்கி கூட்டங்கள்!


<எங்கள் இடத்தில் விழாக்கோலம்! ஆம், உலக வங்கி, IMF கூட்டங்கள் நடந்தேறி வருகின்றது!
எங்கள் Tower -ஐ சுற்றியும் Steel Barricades கொண்டு அரண் அமைக்கப்பட்டுள்ளது. பார்பதற்கு சற்று அச்சமாகக் கூட இருக்கிறது. ஆனாலும் எந்தவித அசம்பாவிதமும் நம் இடத்தில் நடந்துவிட கூடாது என்ற எண்ணம், நம்மிடையே தைரியத்தை ஊட்டுகிறது.
உண்மையில் சொல்லப்போனால், நம் நாட்டில் இந்த மாநாடு நடப்பது நமக்கெல்லாம் பெருமைதான்!அதுமட்டுமல்ல, அழகான நாடு என்ற பெருமையுடன் சேர்ந்து ஆபத்தில்லா நாடு என்ற பெருமையுடனும், நிம்மதியுடனும் நாம் வாழலாம்!
SUNTEC CITY -ஐ சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் சும்மா பூத்து குலுங்குகிறது. அவ்வளவு அழகு! நான் இங்கிருக்கும் Tower 2 உள்ள ஒரு அலுவலகத்தில் பணி. ஆகவே நான் இங்குள்ள அழகான சூழ்நிலையை தினந்தோரும் ரசிப்பதுபோல நீங்களும் எங்க பகுதிக்கு ஓய்வாக இருக்கும் பொழுது வந்து பார்து செல்லலாமே! ஆனால் மாநாடு நடக்கும் பகுதிக்கு வருவது சிரமம், ஆனால் car or public transports பயன்படுத்தி இந்த பகுதியின் அழகை கண்டுரசித்து செல்லமுடியும்! வண்ண வண்ண பூக்கள் கண்களுக்கு நல்ல விருந்து!