Thursday, April 10, 2008

என்ன எழுதுவது என்று யோசித்தபோது...

காலத்தின்
நொடி,
நொடிப்பொழுதில்
நிமிடமாகி
மணியாகி
நாளாகி நாளாகி
மாதமாகி
மாதம் பலவாகி
வருடமாகி
வருடம் பலவாகி!

எத்தனை
வருடங்களாகியும்
என் இதயம்
எங்கிருக்கிறதோ
என்றும் அங்கேயே!
இதயத்திற்கு
இடமாற்றம் என்றும்
இருந்ததில்லை!
இதயத்திற்குள்ளும்
இடமாற்றம்
இருந்துவிட்டால்
இறந்துவிடுமே
இதயம்
என்று தெரிந்து
என் இதயத்தை
என்றோ உன்னிடம்!


என்ன நண்பர்களே...கவிதையை படித்தீர்களா? கவிதை எங்கிருக்கு என்று கேட்ககூடாது, என் பிலாக் வந்துட்டா நான் சொல்கிற பொய் எல்லாவற்றையும் கேட்டுகனும் சரியா! அது! அப்புறம் என் கவிதை படித்துவிட்டு.....கரகாட்டக்காரனில் செந்தில் கவுண்டரிடம் கேட்பதுபோன்று, இதயத்தை வச்சிருந்த உடம்பு இங்கிருக்கு.....இப்ப இதயதை யாரு வச்சிருக்கா என்றெல்லாம் கேட்க பிடாது ஓகேவா!!! யார்..யாரு காரை....சாரி இதயத்தை எங்கே வச்சிருக்காங்க என்று கணக்கெடுப்பதா என்வேலை...படிச்சாச்சுதானே...அப்புறம் என்ன! என்ன பார்ட்டி வைக்கனுமா? எதுக்கு? படிச்சதுக்கா?!! எத்தனை பேர் கிளம்பியிருக்கீங்க!

2 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்! தொடர்ந்து எழுதுங்கள்!!

அன்புடன்,
ஜோதிபாரதி.

Shanti said...

Hello Brother,

Thanks for the nice compliments in my blog. I love coming to your blog but definitely face difficulties reading those in tamil. Nevertheless, I never give up reading. It has improved tremendously. Cheers to you brother!!!