Thursday, July 03, 2008

குசேலா...சாரல் தூவுதோ...

வணக்கம், நீண்ட நாட்களுக்கு பிறகு எழுதுவதால் அறிவுப்பூர்வமாகவோ அல்லது ஆக்கப்பூர்வமாகவோ எழுதி உங்களை வெறுப்பேற்ற விரும்பவில்லை, பிறகு என்ன செய்வது ஒரு நகைச்சுவையாக இருக்கட்டுமே என்று இப்படி எழுதி பார்த்தேன், குண்டக்க மண்டக்க யோசிச்சாதானே எல்லோருக்கும் இப்பெல்லாம் பிடிக்கிறது...இதோ...
தாயீ.....நீங்க எங்க ஊரு படப்பிடிப்புக்கு வந்த பிறகு ஒரு பய கூட கோயிலுக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டு இங்கே வந்து உங்களை பாத்துகிட்டு நிற்கிறார்கள்! தாயீ நாந்தான் இந்த ஊர் கோயில் பூசாரி...அவர்கள் யாரும் வராததால் கோயில்ல கூட்டமில்லை, தட்டிலும் நாலு காசு இல்ல....எனக்கு பொழப்பு கொடு தாயீ...சீக்கிரமே கிளம்பிவிடும்மா...நீங்க நல்லாயிருப்பீங்க...
கவலை படாதே வடிவேலு...கட்டாயம் சயந்தாரா திரும்பிவந்துவிடுவார்! உன் கவலைகளை நீ மறந்துவிடு! இந்த படத்தில் நீ சயந்தாராவோடு இணைந்து ஆட ஆண்டவன் உன்னை ஆசிர்வதிப்பார், வாழ்த்துக்கள்!
அய்யோ...பயமாயிருக்கு, நான் திரும்ப வந்திருக்கிறேன், கிழவன் வந்தாலும் வந்துவிடபோகிறான், வண்டியை விட்டு இறங்கவே பயமாயிருக்கு! ப...ப..ப்...ப..பயமாயிருக்கு! கி..கி..கி..கிழவனை நினைத்தால்...
அஹா...வந்துட்டாயா...வந்துட்டாயா... கிழவனுக்கு பயந்து வராமல் போய்விடுவாளோ என்று பயந்துகிடந்தேன்...ம்ம்ம்ம்ம்..ம்ம்ம்ம் வந்துட்டாயா!

நான் இல்லாம நடிக்கமாட்டேன்னு சொன்னீங்கலாமே...ஆமாவா! சொல்லுங்க வடிஸ்! ஏன் ஊளையிடுறீங்க....பயமாயிருக்கு!
சிவசிவ...எப்படியோ வடிஸ்சும் சயந்தராவும் சேந்துட்டாங்க நமக்கு இனிமே இந்த டூயட் பாட்டில் எல்லாம் ஆட வேண்டியதில்லை...நம்ம கிளம்பவேண்டியதுதான்...
கூல்...கூல்யா...நான் என்ன செய்வது எல்லா பாட்டுக்கும் வடிஸ்தான் சயந்தராவுடன் ஆடுவேன்னு அடம் பிடிக்கிறார், நான் என்ன செய்ய முடியும்,அவர் மார்கெட் இப்ப நம்ம மார்கெட்டை விட அதிகமா போச்சுல்ல...கூல்...
முடியல...என்னதான் பெரிய மனசோட விட்டுகொடுத்தாலும் வடிஸ் செஞ்சத ஏத்துக்க முடியல..அதான் தண்ணி பாட்டிலும் கையுமா ஆயிட்டேன்....என்ன செய்றதுன்னு எனக்கே புரியல...வடிஸ்...வடிஸ்...சயந்தர...சயந்தரா...
பரவாயில்லை விடுங்க...எதை எதையோ விட்டு கொடுத்துட்டேன். பழைய படி பட்டையை போட்டுகிட்டு இமையமலை பக்கம் கூலா போகவேண்டியதுதான்! என்ன சரியா...ஹ..ஹா..ஹா...
எல்லோருக்கும் வணக்கம் போய்ட்டு வருகிறேன்! நல்லாயிருக்க!!
ஏய்..ஏய்...சீக்கிரம் தள்ளுங்கடி! கஜினி அங்கிள் கோச்சுகிட்டு போகிறாராம்...சீக்கிரம் போய் சமாதானப் படுத்தி கூட்டிகிட்டு வரனும் அவர் இல்லாம நம்ம படத்தை யாரு பார்பா! சீக்கிரம் தள்ளு...தள்ளு...
என்ன வீனா அக்கா கஜினி அங்கிள சமாதான படுத்தி அழைத்து வந்துட்டீங்களா? ஹலோ..ஹலோ...என்ன குட்டிகளா இவ போய் சமாதான செய்தால் கஜினி வராமல் போய்விடுவாரா என்ன! ஏன்னா இவளுக்குத்தான் சின்ன வயதிலிருந்தே அவரை தெரியுமே! என்ன சரியா வாண்டுகளா? என்ன பொடுசுகளா...எப்படி எனக்கு வீனா அக்கா ஜோடின்னு கேட்குறீங்களா! நம்ம ஆளுதான் டல்லு...இவளுக்கு இப்ப மார்கெட்டே டல்லா போச்சுல்ல..
கருப்புதான் எனக்கு புடிச்ச கலருன்னு இப்ப இவுங்களும் பாட ஆரம்பிச்சுட்டாங்க...எப்படி நம்ம ஜோடி!

3 comments:

Shanti said...

Namaste Brother,

So fast you blogged Kuselan shots...you must be a hard-fan of Rajini I suppose. Why didn't you post Dasaavataram...that movie is also equally good. Thanks for dropping some nice stuff in my blog. I'm also very busy...I have 6 profs to handle.

Cheers!

Maddy said...

பிரேமுக்கு பிரேம் பின்னிடீங்க பிரேம்குமார்!!! நல்லவே அதுருது

whAt A LiFe said...

Enna, unga blog le, superstar paadam cumma adheredhe. Hahaha....

Nice shots with a slim nayanthara. Poramaya irukke ennaku :(