மூன்றுநாள் விடுமுறை, மூன்று மணி நேரம்போல பறந்துபோச்சு! இருந்தாலும் இந்த நாட்களில் என்ன என்ன நடந்தது என்று எழுத ஆசைதான், ஆனால் தமிழில் எனக்குபிடிக்காதது....அதிகம் எழுதுவது படிப்பது!! எனவே நச்சுன்னு...ஓகேவா...
கடந்த சனிக்கிழமை இரவு சினிமா பார்கலாம் என்ற ஆசை வர நண்பனும் அதை ஆமோதிக்க, இருவரும் இரவு உணவை முடித்துக்கொண்டு நள்ளிரவு காட்சிக்கு சென்றோம்!! என்ன படம்....அட அதுதான் நம்ம தல நடிச்ச...ஏகன்!!
பில்லா பார்த்த பீதியில் இருந்த எனக்கு ஏகன் எப்படியிருக்குமோ என்ற ஏக்கம் இருந்தது! ஆனாலும் அடுத்த இரு நாட்கள் விடுப்பு என்ற சந்தோஷம்...சூப்பர் இரவு உணவு சாப்பிட்ட சந்தோஷம்...நல்ல திரையயரங்கம், பக்கத்தில் என்னுடைய நல்ல சினேகிதன்....இதுபோன்ற சிறப்பு அம்சங்களுடன் திரையரங்கத்தில் அமர்ந்து படம் பார்ததால் ஏகன் எனக்கு என்னவோ ரொம்ப பிடித்திருந்தது என்றுதான் சொல்லவேண்டும்!!
படம் பார்பதற்கு நல்ல மனநிலை வேண்டும் என்பது என்னவோ உண்மைதான் போலிருக்கு! ஆனால் அதற்கு பின் சில நண்பர்களிடம் படத்தை பற்றி கருத்து கேட்கும்போது அவ்வளவாக நல்ல கருத்து வரவில்லை! எனக்கு பிடிச்சிருக்குப்பா....
என்ன சிறப்பு அம்சங்கள் என்று கேட்டால்...சொல்வதற்கு ஒன்னுமில்லைதான்!!
1. நல்ல கேமரா!
இதில் ஒரு காமடி இருக்கு, திரைப்படம் பார்த்துகொண்டிருக்கும்போது, இந்த வார்த்தையை பக்கத்தில் இருக்கும் என் நண்பரிடம் சொன்னபோது, எனக்கு வலதுபக்கம் உட்காந்திருந்த ஒரு முந்திரிகொட்டை நபர் என்னிடம் சொன்னது, ஆமான்னே....இப்ப எல்லாம் டிஸிட்டல் கேமராதான் பயன்படுத்துகிறார்கள்! அவரிடம் அதுக்குமேல நான் பேச விரும்பவில்லை!
2. அஜித் நடிப்பு எப்போதும் போல இருந்தாலும் ரசிக்கும்படியும் இருந்தது!!
3. முக்கியமான அம்சம்...நம்ம நயன்ஸ்தான்....அட...அட....சொல்லும்படி ஒன்னும் இல்லீங்க.....அட..ஒன்னும் இல்லேன்னு சொல்றேன்ல...திரும்ப திரும்ப....என்ன என்னன்னு கேட்டா என்னத்த சொல்வது....போய் பருங்கப்பா.....
இப்படி பல நல்ல விஷயங்களும் கதையில்லா சூப்பர் கதையும் இருந்தது! எனக்கு பிடிச்சிருக்கு......

உன்னை பார்த்த பின்பு நான்...நானாக இல்லையே! என்னை மறந்து இன்று நான்......அட நான் பாடலீங்க...அப்புறம் ஆறு...பாடுறது? சொல்வோம்ல...

அட...நாந்தாங்க அஜித்குமார்! என்ன பாட்டுன்னு கேட்குறீங்களா! அட ஒன்னுமில்லீங்கோ....என்னுடைய "ஏகன்" படத்தில் அந்த நயன்ஸ் வருகின்ற அழகை பார்த்துதான் இப்படி பாடுகிறேன்!

அதுக்காக ஏகன் படத்தில் இப்படியெல்லாம் இருப்பேன்னு நினைத்து அதிர்ந்து போய்விடாதீங்க!! சும்மா....சும்மா....அப்படித்தான் இருக்கேன்? எப்படி இருக்கீங்க! அதான் சொன்னோம்ல....."சும்மா"

கெளம்புங்க...எல்லாரும் கெளம்புங்க...இன்றே போய் என் படத்தை எல்லோரும் பார்கனும்.. இல்லேன்னா......சுட்டுவிடுவேன்! இதுதான் நம்ம புது கெட்டப்பு, எப்படியப்பு இருக்கு?

என்ன....ஏகன் பார்க தயாராகிவிட்டீங்கலா! தலமேல உங்களுக்கு நம்பிக்கையிருந்தா வந்து பாருங்க....ரொம்ப நன்றி!