

என் இனிய தமிழ் மக்களே.....
என் உள்ளத்தில் குடியிருக்கும் அன்பர்களே...நண்பர்களே....அனைவருக்கும்
உளம் கனிந்த தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
நாமெல்லாம் தமிழர்கள் என்று நமக்கு ஞாபகப்படுத்தும் ஒரே திருவிழா இந்த பொங்கல் திருவிழாதான், இதை உலகமெல்லாம் பரவியிருக்கும் அனைத்து தமிழ் பேசும் தமிழ் மக்களும் கொண்டாடித்தான் ஆகவேண்டும்!
உழவு செய்பவர்களுக்கு நாம் தரும் மரியாதை இது! உழவன் சேற்றில் கால் வைத்ததற்கு நன்றி தெரிவிக்காவிட்டால்...சோற்றில் கை வைக்க அருகதையற்றவர்களாக ஆகிவிடுவோம்!
அவனுக்கு உருதுணையாக இருக்கும் எருதுகளுக்கும் இன்று வாழ்த்துக்களை சொல்லித்தான் ஆகவேண்டும்! மாட்டுப்பொங்கல் மாடுகளுக்கு நாம் தரும் மரியாதை....
நமக்காக உழைக்கும் எந்த ஒரு ஜீவனையும் நாம் கடவுளை போலத்தான் போற்றவேண்டும்!
மாட்டுப்பொங்கல கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!
பொதுவா மாட்டுபொங்கல் அன்று மாடுகளுக்கு வாழ்த்துச் சொல்லனும் என்று ஆசையிருந்துச்சு ஆனா...நான் போய் அதுங்ககிட்ட வாழ்த்துச் சொல்லபோய்...அதுங்க திரும்பி Same to You என்று சொல்லிவிட்டால்.....பக்கத்திலிருப்பவர்கள் சிரிப்பாங்கலே அதுதான் மக்களிடம் சேத்து சொல்லியிருக்கிறேன், உங்களில் யாரேனும் போய் அதுக்கிட்ட என் சார்பா சொல்லிவிடுங்கள். நன்றி!!
நாடும் வீடும்
நல்லாயிருக்க
மாடு கூட உதவுகிறது!
மனிதா நீ மட்டும்தான்
மனிதனையே கொல்கிறாய்
மாடுகளைப்போல..
மானிடனாய் பிறந்த
மாடுகளைவிட
மனிதனுக்காக உழைக்கும்
மாடுகளே மேல்!
இதற்குமேல் மாடுகளை பற்றி எழுதினால் எல்லோரும் ஓடுவீர்கள் என்று தெரியும். நிறுத்திகொள்கிறேன்... மீண்டும் அனைவருக்கும் பொங்கல்,புத்தாண்டு வாழ்த்துக்கள்!!