Monday, April 30, 2007
coming soon.......Sivaji!
Hi Friends! Im sorry! still im busy. coming soon! what coming soon! he...he..he.. Sivaji! Take care bye!
Wednesday, March 07, 2007
BACK....BACK....
Hello Friends! How r u all? im here oredi in singapore! will soon start......pls wait for a while! God bless u all! bye bye....
Monday, January 22, 2007
பணியிடம் மாற்றம்!
என வரைப்பூவுக்குள் தேன் எடுக்க தினந்தோறும் வந்துபோகும் தேனி நண்பர்களே!
உங்கள் அனைவருக்கும் வணக்கம்! என்னுடைய நிர்வாகம் என்னுடைய பணியிடத்தை சில வாரங்களுக்கு இந்தியாவுக்கு மாற்றியுள்ளது.... என்னுடைய நிருவனம் இந்தியாவில் ஒரு Project எடுத்து உள்ளார்கள்....அதற்கு என்னையும் அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.... இந்தியனாக இருப்பதுமட்டுமே அதற்கு காரணம்... நான் உள்ளூர் வாசிதான் என்றாலும் ஒரு நிருவனத்தில் மாட்டிக்கொண்டால் அவர்கள் சொல்வதெல்லாம் செய்யத்தான் வேண்டியுள்ளது....இந்தியாவும் நம்முடைய தாயகம்தானே....சென்றுவரலாம் என்று நானும் சம்மதித்துவிட்டேன்... எனவே பயணம் இன்னும் இரண்டொரு நாளில் இருக்கும்.... அங்கு சென்றபிறகு பதிவுக்கு எல்லாம் நேரமிருக்கா தெரியாது....எனவே.... அனபர்கள் அனைவரும்.....நினைவுகளோடு இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் விடைபெறுகிறேன்....
என்னுடைய மின்னஞ்சல் இருக்கிறது...நன்றி!
poopremkumar@gmail.com
உங்கள் அனைவருக்கும் வணக்கம்! என்னுடைய நிர்வாகம் என்னுடைய பணியிடத்தை சில வாரங்களுக்கு இந்தியாவுக்கு மாற்றியுள்ளது.... என்னுடைய நிருவனம் இந்தியாவில் ஒரு Project எடுத்து உள்ளார்கள்....அதற்கு என்னையும் அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.... இந்தியனாக இருப்பதுமட்டுமே அதற்கு காரணம்... நான் உள்ளூர் வாசிதான் என்றாலும் ஒரு நிருவனத்தில் மாட்டிக்கொண்டால் அவர்கள் சொல்வதெல்லாம் செய்யத்தான் வேண்டியுள்ளது....இந்தியாவும் நம்முடைய தாயகம்தானே....சென்றுவரலாம் என்று நானும் சம்மதித்துவிட்டேன்... எனவே பயணம் இன்னும் இரண்டொரு நாளில் இருக்கும்.... அங்கு சென்றபிறகு பதிவுக்கு எல்லாம் நேரமிருக்கா தெரியாது....எனவே.... அனபர்கள் அனைவரும்.....நினைவுகளோடு இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் விடைபெறுகிறேன்....
என்னுடைய மின்னஞ்சல் இருக்கிறது...நன்றி!
poopremkumar@gmail.com
Friday, January 12, 2007
கதை மாறிப்போன கதை...கடியாக மீண்டும்!


வணக்கம் நண்பர்களே! என்னடா!!! கதை எழுதுறேன்...எழுதுறேன்னு கதைவிட்டுபுட்டு இப்ப என்ன எழுத வந்திருக்கிறாய் என்று கேட்பது புரிகிறது....
அய்யா சாமி...மன்னிச்சுக்குங்கோ....கதை எழுத, கதை வேணும்ல...நம்ம கிட்ட அது எங்கே இருக்கு! இருந்தாலும் என் மனதில் தோன்றிய செய்திகளை ஒரு கடியாக அதுவும் சில திரைப்பட நகைச்சுவைகளை நினைவுகூரும் வகையில் எழுதுகிறேன்... சும்மா சிரிக்க முடிந்தா சிரிச்சுட்டு போங்க... யாரும் சீரியஸாக எடுத்துகிட்டு பின்னூட்டம் போடாதீங்க....வேண்டும் என்றால் ரெண்டு கிக்கு விட்டுட்டு போங்க வாங்கிகொள்கிறேன்....ஹ...ஹ...ஹாஅ...இதோகதை......
முன்னுரை: கதை என்றால் இது இருக்கனும்ல...அட...இந்த கதைக்கு(கடி) காரணம்... கடந்த ஆண்டின் இறுதி நாளன்று நடந்த, சிங்கப்பூர் ரேடியோவான ஒலி 96.8 நடத்திய COUNT DOWN 2007 நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன்... நீங்கள் நினைப்பது புரிகிறது.. என்னடா இவன் எப்ப பார்த்தலும் ஒலி..ஒலி..ன்னு சொல்லிகிட்டே இருக்கான்னு கேட்பது கேட்கிறது... அய்யா... இந்த ஊரில் இத விட்டா நம்ம தமிழர்களுக்கு வேறு நாதி இல்லை... இவுங்கதான் எங்களுடைய கதி! சின்ன நாடு... வேற என்ன இருக்கு தமிழர்களுக்கு... இவுங்க நடந்துர நிகழ்ச்சிகள்தான் ஏதோ கொஞ்சம் இங்கு வாழும் தமிழர்களுக்கு உறுதுணையாக இருக்கு... இவர்களை விட்டா கோவில் குளம்தான் இருக்கு... அதனாலதான் இவுங்க பின்னாடியேயயயயயய போய்கிட்டு இருக்கிறோம்... இப்ப புரியுதா....
அந்த வகையில் அன்று அந்த நிகழ்ச்சிக்கு போனேனா... அப்ப அங்கே நடந்த நிகழ்சிகளை பார்த்துவிட்டு வந்து வீட்டில் படுத்தவுடன் அந்த நிகழ்ச்சி பற்றி சில கர்பனன எனக்குள் ஒடியது.. எனக்குள் உதித்த நகைச்சுவையான கர்ப்பனையை ஒரு கப்சா கட்டுரையாக எழுதலாம் என்ற எண்ணம்தான் அது...
சரி... இப்ப என்ன நடக்கபோவுதுன்னா.. அந்த நிகழ்ச்சியை ஒரு திருமணம் ஆகாத ஒரு அழகான திறமையான படைப்பாளர் வழி நடத்துவதாக கற்பனை... அப்போது... நிகழ்ச்சியில் ஆண்களுக்கான பாட்டு போட்டி நடத்த சில ஆண்களை மேடைக்கு அழைகிறார் அந்த பெண் படைப்பாளர்... அவர் பெயர் கமலா!
இப்பொழுது ஒவ்வொரு ஆணாக மேடை ஏறுகிறார்கள்.. ஒவ்வொரு பங்கேற்பாளரிடமும் சில கேள்விக் கனைகளை தொடுத்துவிட்டு அவர்களை திக்குமுக்காட செய்துதான் பிறகு பாட அனுமதிக்கிறார் அந்த படைப்பாளர்.... இதை பார்த்துகொண்டிருந்த நம்ம நண்பர் அதாங்க இந்த கதையின் கதாநாயகன் மிஸ்டர் போக்கிரி!( அட இப்ப Hero வுக்கு இப்படித்தான் பேர் வைத்தால்தான் எடுப்பா இருக்கும்!) என்னடா நம்ம ரசிகர்கள் படையை இந்த காச்சு காச்சுறாங்களே இவுங்க, என்ற கடுப்போடு அடுத்த பங்கேற்பாளராக நம்ம போக்கிரி மேடை ஏற....
கமலா: வணக்கம்!
போக்கிரி: வணக்கம்!
கமலா: சரி, எங்கிருந்து வர்றீங்க?
போ: வீட்டிலிருந்து!
கமலா: அது தெரியாதா, வீடு எங்கேயிருக்கு?
போ: நான் எங்கே இருக்கேனோ அங்கேயத்தான் இருக்கு!
கமலா: ய்ய்ய்ய்ய்ய்... சரி, நீங்க எங்கே இருக்கீங்க?
போ: என் வீடு எங்கே இருக்கோ, அங்கேதான் நானும் இருக்கேன்!
கமலா: கடவுளே...காப்பாத்து! சரி..சரி...இப்ப சரியா கேட்கிறேன்..
நீங்களும், உங்க வீடும் எங்கே இருக்கீங்க..?
போ: இப்ப நான் சரியா சொல்லிவிடுகிறேன்...நானும், என் வீடும் எங்கே இருக்கிறோமோ
அங்கேயத்தான் நானும் என் வீடும் இருக்கிறோம்!
கமலா: அய்ய்யய்ய்ய்யோ.....ஆள விடுங்க.....
போ: ஹலோ..ஹலோ...இருங்க..இருங்க... உங்களுக்கு என்ன தேவ... என்னுடைய
அட்ரஸ் வேணுமா? அட்ரஸ் என்னன்னு கேட்கவேண்டியதுதானே... ஏன் குழப்புறீங்க
சரி... இதோ என்னுடைய அட்ரஸ்
நம்பர் 6, சுவாமி கமலானந்தா தெரு
சிங்கப்பூர் குறுக்கு சந்து,
சிங்கப்பூர் மெயின் ரோடு,
சிங்கப்பூர். 600006
கமலா: ஹாங்...ஹாங்...ய்ய்ய்ய்ய்ய்... என்ன இது....
போ: என்ன புரியலையா? வேண்டுமென்றால் திருப்பிச்சொல்லட்டா....திருப்பி..திருப்பி..
கமலா: அய்யோ...வேண்டாம்..வேண்டாம்... நம்ம இப்ப நிகழ்ச்சிக்கு போகலாம்..
போ: என்ன நிகழ்ச்சிக்கு இனிமேதான் போறோமா.. அப்ப இவ்வளவு நேரம் என்னை ரேகிங்க் செய்தீங்களா... சரி சரி... பரவாயில்லை... கேளுங்க.....
கமலா: சரி..அதெல்லாம் இருக்கட்டும் இப்ப என்ன பாட்டு பாட வந்திருக்கீங்க...
போ: என்ன பாட்டா....சினிமா பாட்டுதான்...
கமலா: ஆகா...ஆரம்பிச்சிட்டீங்களா...அது தெரியுது, எந்த சினிமாவிலிருந்து எந்த பாட்டுடுடு?
போ : ஓ...அதுவா.... தமிழ் சினிமாவிலிருந்து, தமிழ் பாட்டு!
கமலா: அய்யோ... என்னால முடியாது வேற படைப்பாளரை மேடைக்கு அனுப்புறேன்....
போ: ஹலோ..ஹலோ... இருங்க...இருங்க.... என்னங்க இதுக்கெல்லாம் போய்...
நீங்க மட்டும் ரேடியோவில யாராவது பேச தெரியாத ஆள் மாட்டிகிட்டா அவனை டர்ர்ர்... ஆங்கிவிடுவதில்லையா? இதுக்குபோய் இப்படி ஜகா வாங்குவது ஒங்கல மாதிரி திறமையான படைப்பாளருக்கு அழகா...அதுவும் அழகான படைப்பாளருக்கு!!!!
கமலா: சரி..சரி... ரொம்பத்தான் ஐஸ் வைக்கிறீங்க... போனா போவுது...உங்களை பாடவிடறேன்... பாடிட்டு ஓடிவிடுங்க சரியா?
போ : ரொம்ப நன்றி கமலா மேடம்! நான் பாடிட்டு நீங்க சொன்னமாதிரியே ஓடிவிடுகிறேன்...
கமலா: சரி.. பாடலாம்... இருங்க,இருங்க.. என்ன.... பாட்டு முழுசா தெரியுமா... இல்ல நாலு வரிமட்டும் பாடுவீங்களா? ஏன் கேட்கிறேன் என்றால்.. இப்படி அதிகமாக பேசுபவர்கள் எல்லோருக்கும் சரியா பாடத் தெரியாதுன்னு யாரோ சொல்லி கேள்வி பட்டிருக்கிறேன்... அதான் கேட்கிறேன்....
போ: அதுதான் எனக்கு நல்லா தெரியுமே!
கமலா; என்ன...என்ன தெரியும்!
போ: அதாங்க...அதிகம் லொட...லொடன்னு பேசுபவர்களுக்கு பாட்டு வராது... பாடவும் தெரியாதுன்னு தெரியும்ன்னு சொன்னேன்!
கமலா: எத வச்சு உறுதியா இப்படி சொல்றீங்க.....
போ: எல்லாம் உங்கள வச்சுத்தான்... அப்படின்னு சொன்னா கோச்சுகுவீங்க...அதனால என்னை வைத்துதான்ன்னு வச்சுகுங்களேன்...
கமலா: ஆமாம்... இந்த லொள்ளு பேசுறீங்களே உங்களுக்கு எந்த கம்பெணி வேலை
கொடுத்திருக்காங்க....ங்ங்ங்....
சரி... பாடுவதற்கு முன் ஒரே ஒரு கேள்வி இருக்கு அதையும் கேட்கனும்.. ஏன்னா இந்த கேள்வி எல்லோரிடம் கேட்டேன் அதுதான்... உங்களிடமும் கேட்கனும்...
போ: சரி...கேளுங்க... என் பாட்டை கேட்பதைவிட உங்கள் கேள்வியை கேட்கதான் மக்கள்
ஆசைப்படுகிறார்கள்... கேளுங்க..
கமலா: சரி, எங்க வேலை பாக்குறீங்க?
போ: எங்க...வேலை பாக்கிறோம்... சும்மா அலுவலகத்தில் போய் உட்காந்துவிட்டு நேரம்
ஆனா... வீட்டுக்கு போவதுதான் வேலை!
கமலா: சரி..சரி... இங்க உங்களுடைய வேலை பற்றியெல்லாம் கேட்கவில்லை கேட்ட கேள்விக்கு புரிந்துகொண்டு சரியா பதில சொல்லுங்க...
போ: சாரி மேடம்.... மன்னிச்சுக்குங்க.... எ..எ...என்ன... கேட்டீங்க....
கமலா: ம்ம்ம்ம்ம்...எங்கே வேலை செய்றீங்க...
போ : வேற எங்கே அலுவலகத்தில்தான்!
கமலா: அட...அட... அது தெரியுது எந்த அலுவலகத்தில்
போ; நான் வேலை செய்றேன்ல அந்த அலுவலகத்தில்!
கமலா: போச்சுடா...கெளம்பிட்டீங்களா...சரி....உங்க அலுவலகம் எங்கே இருக்கு?
போ: நான் வேலை செய்யுற எடத்தில்தான் இருக்கு!
கமலா: உஹிம்...உஹிம்...ம்ம்ம்ம்ம்ம்ம்......அம்ம.....ம்ம்ம்ம்ம்ம்...
போ: ஹலோ..ஹலோ...கமலா...கமலாமேடம்.. ஏன்...ஏன் அழுவுறீங்க..
கமலா: சும்மா இருங்க... அழுவாம என்ன செய்றது... எந்த கேள்வி கேட்டாலும் இப்படியா
பதில் சொல்றது.....
போ: ஹலோ... என்ன... என் பதிலுக்கு என்ன கொறை... இத பாருங்க... உங்களுக்கு
சரியா கேட்க தெரியலைன்னு சொல்லுங்க....
கமலா: ஹாங்....ஹி...ஹிங்ங்....எனக்கு கேட்க தெரியலையா?!!!!!
போ: அட..ஆமாங்க நீங்க குண்டக்க மண்டக்க கேள்வியைத்தான் தெளிவா கேட்குறீங்க....
ஆனா... தெளிவா கேட்கவேண்டிய கேள்வியெல்லாம் குண்டக்க மண்டக்க கேட்டா
இப்படித்தான் பதில் சொல்ல முடியும்...
கமலா: இனிமே... உங்க கிட்ட கேள்வி எதுவும் கேட்பதற்கு இல்லை... நீங்க பாடலாம்
வணக்கம்!
போ: சரிங்க... அப்படியே நடக்கட்டும்... கமலா மேடம்... உங்க கிட்ட ஒன்னு சொல்லனும்!
அதுவும் ரகசியமா... கொஞ்சம் ஒலிவாங்கியை பின்னாடி வைத்துகொண்டு உங்க காதை
என் முன்னாடி கொண்டு வரமுடியுமா?
கமலா: அதெல்லாம் முடியாது.... நீங்க இவ்வளவு நேரம் கடித்தது போதாதுன்னு என் காதை
கடிக்கலான்னு நினைக்கிறீங்களா...
போ: அப்படி ஒன்னும் இல்ல... சரி.. போனா போவுது விடுங்க... வேற யாருகிட்டையாவது
அந்த விஷயத்தை சொல்லிகிறேன்.... சரி...நீங்க இறங்கி போங்க நான் பாடனும்....
அ...அ...ஆஅ....ஆஅ......
ம்ம்ம்...ம்ம்ம்..ம்ம்..ம்ம்....
இதயம் ஒரு கோவில்
அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவதை நீ!
...............................
(ஒரு வழியா பாடி முடித்தான் நம்மபோக்கிரி, சொல்லப்போனால் ரொம்ப நல்லாவே பாடினான்)
பாடிமுடித்ததும்... படைப்பாளர் கமலா... சிரித்த முகத்துடன் மேடைக்கு வந்து ...
வாழ்த்து தெரிவித்து....
கமலா: ரொம்ம நல்லாவே பாடுனீங்க...வாழ்த்துக்கள்...
ஆமாம் ஏதோ சொல்றேன்னு சொன்னீங்களே...
(என்று கேட்டவாறே ஒலிவாங்கியை கீழிறக்கிக் கொண்டார்)
போக்கிரி: இல்ல....வருஷம் வேற பொறக்க போவுது இப்ப போய் ஒரு பொய் சொல்லனுமான்னு நினைச்சேன், அதான் வேண்டான்னு விட்டுட்டேன்..
கமலா: அப்படி ஏன் நினைக்கிறீங்க... இன்னும்தான் இந்த வருடம் முடியவில்லையே.. நீங்க சொல்லப்போகும் பொய் இந்த ஆண்டின் இறுதி பொய்யாக இருக்கட்டுமே... அது என்னதான்னு தெரிந்துகொண்டால்தான் இங்கே வந்திருக்கும் வருகையாளர்களுக்கு நிம்மதியிருக்கும் எனவே சும்மா தைரியமா சொல்லுங்க...
போக்கிரி: நீங்களே ரொம்ம ஆவலா கேட்கும்போது சொல்லித்தான் ஆகனும், சரி அந்த விஷயம் என்ன தெரியுமா.... அதுவந்து...அதுவந்து.... நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க...ம்ம்ம்ம்
கமலா: அய்யே....ரொம்பத்தான்.... வழியுது தொடச்சுகுங்க....இதெல்லாம் அருந்த பழசு...இதெல்லாம் எப்பவோ சினிமாவில வந்திருச்சு....புதுசா எதாவது சொல்லுப்பா...
போக்கிரி: என்ன.....சினிமாவில வந்திருச்சா...இது நான் சிந்திச்சு வச்ச டலயாக் ஆச்சே அதுக்குள்ள இது எப்படி கோடம்பாக்கம் போனது.... இதுக்குத்தான்... இந்த மாதிரி காமெடி விஷயங்களை எல்லாம் பப்ளிக்கா யாரிடமும் பேசக்கூடாது என்கிறது.... இப்ப பாருங்க என்னுடைய காமெடியை யாரோ எடுத்து எந்த படத்திலொயோ போட்டுவிட்டானுங்க....
கமலா: ஹலோ...ஹலோ.... நிறுத்துங்க...நிறுத்துங்க.... இந்த கதையெல்லாம் இங்கே வேணாம்.. இது பாட்டா கூட வந்திருச்சு...
போக்கிரி: என்ன்ன்ன்ன.....பாட்டா கூட எழுதிவிட்டார்களா....ம்ம்ம்ம்ம்ம்....என்னடா இந்த போக்கிரிக்கு வந்த சோதனை! எத சிந்திச்சாலும் நமக்கு முன்னாடி கண்டுபிடிச்சு இப்படி நம்ம சரக்கையெல்லாம் இவனுங்க வித்துகிட்டு இருக்கானுங்க....கட்டாயம் கன்சூமர் கோர்ட் போகனும்....
போக்கிரி: கமலா மேடம்.... இதுவரை நான் ஒரு நகைச்சுவைக்காகத்தான் இப்படியெல்லாம் கொஞ்சம் அதிகமாகவே பேசிவிட்டேன்... தயவுசெய்து பெரிய மனதுகொண்டு மன்னிக்கவும்....என்ன இருந்தாலும் என் போன்ற ஒரு நல்ல ரசிகர்களுக்கு நீங்கள் எப்போதுமே ஒரு கலங்கரை விளக்கம்தான்... அதில் எந்த கலங்கமும் என்றுமே வராது....உங்களுடைய படைப்புக்கு முன நாங்கள் அனைவரும் நல்ல நேயர்களாகவே கடைசிவரை இருந்து உங்களுக்கு நல் ஆதரவு வழங்க விரும்புகிறோம்... எங்களுடைய ஆரோக்கியமான ஆதரவு உங்களை போன்ற திறனாளர்களுக்கு என்றுமே உறுதுணையாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இனி இருக்காது..... நன்றி!
கமலா: அட...நீங்க வேற மிஸ்டர் போக்கிரி! நான் எதுவும் தப்பா நினைக்கவில்லை, நீங்க இப்படி பேசியதைகூட நம் நேயர்கள் நன்றாக ரசித்து கைதட்டியதை பார்த்தீர்கள் அல்லவா, எனவேதான் நானும் உங்களை இதுபோன்று பேச விட்டுவிட்டேன்.... என்னை பொறுத்தவரை மக்களை சந்தோஷப்படுத்தும் பணியை நான் செய்தாலும் அல்லது உங்களைப் போன்ற நல்ல நேயர்கள் செய்தாலும் எனக்கு மகிழ்ச்சிதான்... எனவே எந்த வருத்தமும் இல்லாம இருங்கள்... இதோ உங்களுடைய சிறந்த பாட்டுக்கான... எங்கள் சிறப்பு பரிசு...
இதில் இருக்கும் பரிசை கண்டு நிச்சயம் நீங்கள் மகிழ்வீர்கள்...வீட்டில் சென்று திறந்து பாருங்கள்...வாழ்த்துக்கள்...நன்றி!
நல்லிரவில் வருடம் பிறந்ததும்....கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய போக்கிரி....அவசரம்...அவசரமாக...அந்த பரிசு பொட்டலத்தை பிரித்தான்....
கிர்..........கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........
அலார சத்தம்....அதில் இருந்தது அலாரம் இல்லை...அங்கே அடித்ததுதான் அலராம்....
அப்படின்னா அதில் இருந்தது....அட அதுதான் நம்ம கனவு கலைந்துவிட்டதே....அப்புறம் அதில் என்ன இருந்துச்சுன்னு எனக்கு என்ன தெரியும்....வேண்டும் என்றால் போக்கிரி கிட்ட கேட்டுச் சொல்றேன்... ஓகேவா.......
சரி...சரி....படம் முடிஞ்சு போச்சு.... எல்லோரும் எழுந்துபோய்.... புதுசா யாரோ நம்ம கதை கதாநாயகன் பேரை சுட்டு படத்துக்கு பெயராக வைத்து படம் எடுத்திருக்காங்கலாம் அத போய் பாருங்க.....என்ன வர்டா.......டா...டா....
Friday, January 05, 2007
புத்தாண்டில் புது முயற்சி!

என் இனிய தமிழ் மக்களே! இதுவரை ஒரு பயனும் இல்லாத பதிவுகளை போட்டுவந்த இந்த பிரியமுடன் பிரேம்குமார் இப்பொழுது சுத்தமாக ஒரு பயனும் இல்லாத பதிவுகளை போட முடிவெடுத்துள்ளான்!
வணக்கம் மக்களே! நண்பர்களே! உங்களுக்கெல்லாம் புத்தாண்டு எப்படி பூத்துள்ளது? சந்தோஷமா பிறந்திருக்கா? எனக்கு உண்மையிலேயே குதுகலத்துடன் பிறந்ததது....
நான் புத்தாண்டு பிறந்த போது... சிங்கப்பூர் ரேடியோ ஒலி 96.8 நடத்திய கவுண்ட் டவுன் நிகழ்ச்சியில் ஆட்டம் பாட்டத்தோடு இருந்தேன்....
ஒரு நாள் முழுவது நடந்த நிகழ்ச்சி அது... அதில் பல்வேறு அங்கங்கள் படைக்கப்பட்டது...
அப்படி அந்த நிகழ்ச்சியை பார்த்துவிட்டு வந்த எனக்கு இரவில் படுக்கும்போது ஒரு கற்பனை உதித்தது.... அந்த கற்பனையின் படி ஒரு கதை எழுதலாமே என்று கூட தோன்றியது... நம்ம என்ன பட்டுக்கோட்டை பிரபாகரா அல்லது பாலகுமாரா கிரைம் நாவல் எழுதுவதற்கு... சும்மா நம்ம பிளாக்கில் கப்சா விடலாம் என்று எண்ணியிருகிறேன்....
விரைவில் முடிந்தால் நாளைக்கு நான் அலுவலகம் வந்தால் நாளையே எழுதிவிடுகிறேன்...
அப்படி என்ன இருக்கும் அந்த கதையில் என்று கேட்டால் ஒன்றும் இருக்காது
சில கற்பனை, கதை, காமெடி.....அப்புறம் கதைக்கா ஒரு சின்ன காதல் அவ்வளவுதான்
பாட்டு கூட இருக்கும் ஆனா சண்டை இருக்காது! விரைவில்......
Friday, December 29, 2006
புத்தம் புது பூ பூத்தது 2007!



எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
இந்த 2007 நம் அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைய ஆண்டவை வேண்டிக்கொள்கிறேன்! நல்லது பல நடக்கவேண்டும்! உலகத்தில் அமைதி நிலைபெறவேண்டும்!
எந்த ஒரு சிறு அசம்பாவிதமும் நடக்ககூடாது என்று ஆண்டவனிடம் முறையிடுகிறேன்...
மேலும் ஒவ்வொருவருடைய வாழ்கையிலும் அவர்கள் நினைத்தது போல எல்லா சுபகாரியங்களும் இந்த ஆண்டில் நடந்து... இந்த நூற்றாண்டின் சிறந்த ஆண்டாக இந்த 2007 தேர்வு பெற எல்லாம் வல்ல இறைவன் எல்லோருக்கும் அருளட்டும்! வாழ்க வையகம்! வாழ்க மனிதகுலம்! வாழ்த்துக்கள்!
Friday, December 15, 2006
நான் முன்னால போனா 'அது' எனக்கு முன்னால போகும்!




என்ன நண்பர்களே! தலைப்பை பார்த்ததும் தலையை சுற்றுதா, ஆமாங்க...
பொதுவா, நீ முன்னால போனா நான் பின்னால வாரேன்...இப்படித்தான் பாட்டு இருக்கு, ஆனா இது பாட்டு இல்லேங்க, என் பாடு எப்படியிருகுன்னு இப்படி சொன்னேன்!
அட., ஆமாங்க நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த பாட்டு போட்டியில்ல பாட்டு போட்டு....என்ன போட்டின்னு கேட்குறீங்களா....அதாங்க நம்ம மீடியா கார்ப் ரேடியோக்காரங்க நம்ம ஒலி 96.8 நடத்தும் 100 பாடல்கள் COUNT DOWN நிகழ்ச்சி வருகின்ற 31 தேதி FORT CANNING PARK --ல் நடக்கப்போவுது தெரியுமா, அங்கே அந்த நிகழ்ச்சியில் KARAOKE போட்டி எல்லாம் வச்சிருக்காங்க....
அதனால என்ன, அட அந்த கரோக்கி போட்டியில் பங்கெடுக்கனும்னு ஆசைதான்... டேய், அதுக்கு பாட்டு பாடனும்டா....தெரியுங்க....நானும் நிறையா பாட்டு பாடியிருகேன்! எங்கேடா....எப்போ? வேற எங்கே குளியலறையில்தான்! அங்கே பாடுவதும்போதே வீட்டில் இருப்பவர்கள் ஏசுவார்கள்! இருந்தாலும் பாடி பார்போம் என்ற ஆசை! ஆனால் அந்த போட்டியில் பங்கேறபதற்கு முன்னாடி வருகின்ற 22ம் தேதி ஒலியின் ஒலிபரப்பு நிலையத்தில் நடக்கும் தகுதிச் சுற்றில் கலந்து வெற்றி பெற்றால்தான் போகமுடியும்....
பிரேம்குமார்(ஒலி) கிட்ட போன் செய்து பதிவு செய்தாகிவிட்டது! அப்புறம் என்ன போய் பாடிபாக்கலாம்தேனே.... நீங்க கேட்பது புரிகிறது....இப்பதான் அந்த பாடல் வரிகள் வேலை செய்யப்போகிறது.... என்ன்... என்னவேலை...
ஆமாப்பா...நான் 22 தேதி வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு அந்த நிகழ்ச்சிக்கு செல்ல ஆர்வமா இருந்த வேலையில், நேற்று தான் நம்ம MR. இடஞ்சல் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது... ஆமாங்க... அதே தேதி... அதே நேரம்.... 22ம் தேதி மாலை 7 மணிக்கு எங்க அலுவலகத்தின் 2006 ஆண்டிற்கான STAFF ANNUAL DAY PARTY வச்சுட்டானுங்கப்பா... நான் இல்லாம இந்த பார்டியா.... இந்த நிருவனத்தில் இது என்னுடைய முதல் ஆண்டுவேற அதுமட்டுமல்லாமல் எங்க நிருவனத்தின் ஆக சிறியவன், செல்லப்பிள்ளை மாதிரி எல்லோருக்கும்... நான் வரமாட்டேன் என்று சொல்ல முடியாது... பரிசு எல்லாம் கிடைக்கும்....ம்ம்ம்ம்ம்...எப்படி நீங்களே சொல்லுங்க... விட்டுட்டு பாட்டுப் பாட் போகமுடியும்.... என்ன செய்வது ஒரு கதவு திறந்தா இன்னொரு கதவு மூடிவிடுகிறது! ஒரு வருடத்தில் இத்தனை நாட்கள் இருக்கும்போது, இந்த இரு நிகழ்ச்சியும் இப்படி ஒன்னா வந்து என்னை இம்சை செய்கிறது!
இப்ப இந்த பாடல் வரி சரிதானெ.... நாம ஒரு இலக்கை நோக்கி இரயிலில் சென்றால் நம்முடைய mr. இடஞ்சல் நமக்கு முன்னாடி இரயில் எஞ்ஜினில் செல்கிறார். என்ன செய்வது, நமக்கு அந்த வாய்ப்புக்கு வழியில்லாத காரண்த்தால் நம்முடைய இம்சையில்லாமல் நிறையா நல்ல பாடகர்கள் எல்லாம் பாடி நிகழ்ச்சி நல்லாயிருக்கும் என்ற சந்தோஷம் நம்மகிட்ட இருக்கு. அதுபோதும் நமக்கு! வருடம் பிறக்கும்போது நான் வேற ஏன் நிகழ்ச்சிக்கு வருகின்ற ரசிகர்களை தொந்தரவு செய்யனும். அதுதான் ஆண்டவனே பார்த்து அடக்கிவச்சுட்டான் ஆசையை! ஆர்வம் இன்னும் என்னிடம் என்றும்போல.........
Thursday, December 07, 2006
பூத்து..பூத்து குலுங்குதடி...பூவு!

பூவுக்கெல்லாம் சிறகு முளைத்து
பறந்து வரப்போகிறது!
எங்கே?
அட இங்கேதாப்பா!
எங்கள் அலுவலப்பகுதியில்
எங்கேயிருக்கு அது!
அட,
நம்ம SUNTEC CITY, SINGAPORE போதுமா!!
ஓ..அப்படியா? அங்கேதான் அடிக்கடி ஏதேதோ விழாக்கல் நடக்குதே, இப்ப என்ன நடக்கப்போவுது...
ஒரு நிமிஷம் இருங்க... நான் சொல்லுவதைவிட கீழேயிருப்பதை சொடுக்குங்க அது நிறையா கலர், கலரா சொல்லும்பா...என்ன ஆளவிடுங்க...
Tuesday, November 28, 2006
புரியாதத் தகவல் புரியுதா உங்களுக்கு!


இன்றைய தகவலாக வருவது உணவு பழக்க வழக்கம் பற்றிய ஐயம்!
கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன் சிங்கப்பூர் வானொலியான ஒலியின் கல..கல..ப்பான படைப்பாளர் செல்வி. விமலாதேவி அவர்கள் ஒரு உணவு குறிப்பு வானொலியில் தந்தார்கள். வழக்கம்போல எல்லோரையும் போல நானும் அதை கேட்டுவிட்டேன்.. அட எனக்கும் அந்த குறிப்பைத் தொடரவேண்டும் என்ற ஆசை வர அன்று முதலே கடைபிடிக்க ஆரம்பித்தேன்.. ஆனால் மனதுக்குள் ஏற்பட்ட ஒரு பெரிய ஐயத்தால், இதுவரை அந்த பழக்கத்தை நடைமுறை படித்தாமல் காத்திருக்கிறேன்... யாராவது தகுந்த விளக்கம் கொடுத்து என்னை தெளிவு படுத்தினால் தொடர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது!
அதுசரி... என்ன அந்த குறிப்பு என்றே நான் இன்னும் சொல்லவில்லையா.. மன்னிக்கவும்... இதோ..இதோ... விமலா சொன்னாங்க.... உடல் நிலையை ஆரோக்கியமா வைத்துக்கொள்ள உணவு பழக்க வழக்கத்தில் மாற்றம் தேவை, கட்டுப்பாடுதேவை என்றும் அதை எப்படி கடைபிடிக்கவேண்டும் என்பதற்கு ஒரு உதாரணமாக சில செய்திகளைச் சொன்னார்கள்! அது என்ன...இதோ கீழே...
நாம் மூன்று வேலைகள் சாப்பிடுகிறொம் இல்லையா! அதை எவ்வாறு கடைபிடித்தால் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம் என்பதற்கு அவர் சொன்ன உதாரணங்கள்:
காலை: சக்கரவர்த்தி போல சாப்பிடவேண்டும்!
மதியம்: இளவரசர் போல சாப்பிடவேண்டும்!
இரவு : பிச்சைகாரன் போல சாப்பிடவேண்டும்!
இதில் என்ன இருக்கு சரியாதானே சொல்லியிருக்காங்க என்று நீங்க நினைப்பது சரிதான்... நான் கூட அப்படி நினைத்து காலை, மதியம் இருவேலையும் கடைபிடித்துப் பிறகு மூன்றாவதாக இரவு வந்ததும் சாப்பிட உட்காரும் முன், அவர்கள் சொன்னது ஞாபகம் வர ...பிச்சைக்காரன் போல என்றார்களே... அது எப்படி? சந்தேகம் வர... கடுமையாக யோசித்தேன்.. இரவில் பிச்சைக்காரன் போல என்றால்.. இரவில் பிச்சைக்காரன் எப்படி?!!!! இரவில் பிச்சை என்பது ராப்பிச்சை என்பார்களே அதுவா? அப்படியென்றால்,. இரவில் பிச்சைக்காரன் ராப்பிச்சை என்ற பெயரில் குறைந்தது ஒரு 5 அல்லது 6 வீடுகளில் சோறு வாங்கி மொத்தமாக வைத்துக்கொண்டு சாப்பிடுவான்.... அப்படியென்றால் நம்மை விமலா... 5,6 வீட்டில் பிச்சை எடுத்து சாப்பிட சொல்கிறாரா அல்லது அந்த இரவு பிச்சைக்காரன் சாப்பிடும் அளவிற்கு நிறையா சாப்பிட சொல்கிறாரா என்று தெரியாமல் இன்று வரை இரவு சாப்பாடே சாப்பிடுவதில்லை... அட உங்களில் யாருக்காவது இது எப்படின்னு சொல்லத்தெரிந்தால் சொல்லுங்க இன்று இரவாவது நிம்மதியா சாப்பிடனும்... தயவுசெய்து நீங்க யாரும் இரவு சாப்பிட போகும்போது... இந்த கதையை நினைக்காதீங்க. நினைத்தீங்கன்னா அப்புறம் என் கதைதான் உங்களுக்கும் சொல்லிபுட்டேன் ஆமாம்....
Monday, November 20, 2006
வருக! வருக! வணக்கம்!
இப்படியொரு ஆசையும் வந்துட்டா!

அட என்னங்க செய்வது நீண்ட நாள் விருப்பமும் ஆசையும் கூட, நீண்ட நாட்களுக்கு பிறகு காலம் கூடி வர, ஓடிப்போய் நின்னுட்டேன் நானும், எங்கேன்னு தெரியனுமா! அட நம்ம சிங்கப்பூர் மிடியா கார்ப் அலுவலகத்தில் கடந்த ஞாயிறு (19-11-06) நடந்த TV12 DRAMA AUDITION 2006 -ல் தான்!
அங்கே நமக்கு என்ன வேலைன்னு கேட்கிறீங்களா, அட நடிக்க போனேப்பா! என்ன்னனனன..நடிக்கவா?!!!!!! ம்ம்ம்ம்ம்ம்...ஆமாப்பா! சரி...சரி.. நடந்ததை சொல்லித்தொல..
அது! இங்கிருந்து போனேனா, போன உடனேயே அங்கே வரவேற்பறையில் 2 பெண்கள் இருந்தாங்கப்பா, அவுங்ககிட்ட போய் நின்றதும், அவுங்க விண்ணப்பத்தை கொடுத்து பூர்த்தி செய்ய சொன்னார்கள், நான் பூர்த்தி செய்து கொடுத்தவுடன் ஒரு ஒட்டும் தாளில் என்னுடைய அடையாள அட்டை எண்னையும், ஒரு ref No. ம் எழுதி கைதி நம்பர் மாதிரி எழுதி மார்பு பகுதியில் சட்டையில் ஒட்டிவிட்டுவிட்டார்கள். என்னுடைய திருப்பம் வந்தவுடன் என்கூட 10 பேரையும் உள்ளுக்குள்ளே அழைத்துச்சென்று, புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.
பிறகு ஒவ்வொருவராக உள்ளே அழைத்து அவர் அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த கதா பாத்திரத்தில் வசனங்களை பேசி நடிக்கவேண்டும்! இருங்க...இருங்க....எனக்கு என்ன பாத்திரம், என்ன காட்சி என்று கேட்கிறீங்களா!...சொல்றேப்பா....இங்கே சொல்லாம வேற யாருகிட்ட போய் இதெல்லாம் சொல்லிகிட்டு இருக்கப்போறேன்....
என் கதாபாத்திரத்தின் பெயர் 'SIVA' நான் உள்ளே போய் அங்கிருந்த ஒரு பெண்ணிடம் (அந்த பெண் அவுங்க ஆளுப்பா, ரொம்ப அனுபவம் வாய்ந்தவங்கன்னு நினைக்கிறேன்) சென்று இணைந்து நடிக்க வேண்டும்... காட்சி நேரம் குறைவுதான்... ஏதோ செஞ்சுட்டு வந்தேன்... வெளியில் இருந்து பாத்தவங்க, நல்லா செஞ்சதா சொல்றாங்கப்பா.....ம்ம்ம்... யாருக்கு தெரியும்.....ஒருவேலை தேர்வு செஞ்சா நான் சந்தோஷப்படுவேன்... தேர்வு செய்யாட்டா தொலைக்காட்சி பார்க்கும் நேயர்கள் சந்தோஷமாயிருப்பார்கள்!
Friday, November 17, 2006
கவியரசு கண்ணதாசன் விழா 2006, சிங்கப்பூர்.

கடந்த சனிக்கிழமை இரவு அருள்மிகு சிங்கப்பூர் தெண்டாயுதபாணி திருக்கோவில் மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு செல்லும் வாய்ப்பு இத்துனை ஆண்டுகளுக்கு பிறகு அன்று அடியேனுக்கு கிடைத்தது ஆண்டவன் அருளால்!
தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கி சில குழந்தைகள் நடனமாட கவிஞர் பல கவிபாட பாட்டுப்போட்டியில் பல குயில்பாட படு ஜோராய் சென்றது விழா!
நிகழ்ச்சியின் இருதியாக சிறப்பு சொற்பொழிவு ஆற்றியது யார் தெரியுமா, super star ரஜினியை மட்டும் வைத்து 25 படங்களுக்கு மேல் இயக்கி மொத்தத்தில் 100 படங்களுக்கு மேல் இயக்கியுள்ள பிரபல இயக்குனர் திரு. SP. முத்துராமன் அவர்கள்தான். அதிகநேரம் பேசி அசத்திவிட்டார். மீண்டும் கண்ணதாசனை பார்த்தோம் அவரது சொற்பொழிவில்! அருமை! அருமை!
கூட்டம் மண்டபம் முழுவது நிரம்பிவிட்டது! பல முக்கிய பிரமுகர்களும், கண்ணதாசன் உறவினர்களும், சிங்கப்பூர் பிரபலங்களும் வந்திருந்தனர் அவர்களுள் ஒலி குடும்பத்தார்களான, பொன்.மகாலிங்கம், உமா கணபதி, v.s. ஹரி ஆகியோர்களும் கூட வந்திருந்தனர்.
அருமையான நிகழ்ச்சி அது முடிந்ததும் அருமையான இரவு உணவு.. செவி இனித்து பின் நாவினிக்க நல்லா நடந்த நிகழ்சியை உங்கள் விழியினிக்க விருந்தாக்குகிறேன்..
'கவியரசை' பாராட்டி வரிகள் தந்திருந்தார், மேலே இருக்கும் வைரமுத்து தன்னுடைய மேன்மையான வரிகளினால்! அடித்தளத்தில் இருக்கும் அடியேனுக்கும் அது போன்று எழுத ஆசை வந்தாலும், ஏதோ என் அளவிற்கு முடிந்த இந்த எளிய வரிகளை தருகிறேன், கவிப்பேரரசின் வரிகளை தழுவிக்கொண்டு...
"உன்னுடைய ஒவ்வொரு எழுத்துக்களும், இக்கால இளைஞர்கள் கவிமலையின் உச்சியை கஷ்டப்படாமல் சென்றடைய நீ கட்டிக்கொடுத்த படிக்கட்டுகள்!"
Saturday, November 11, 2006
ஒலி 96.8 ல் தீபாவளி இரவு கொண்டாட்டங்கள்!

வணக்கம் நண்பர்களே!
இங்கே இரண்டு செய்திகள் இருக்கிறது, இரண்டாவதாக The Pines ல் நடந்த நிகழ்ச்சி, முதலாவதாக, நிகழ்ச்சிக்கு டிக்கட் வாங்க
சென்றபோது MEDIA CORP அலுவலகத்தில் நடந்த சுவையான நிகழ்வுகள்!
முதல்பகுதி: - நிகழ்ச்சிக்கு போகவேண்டும் என்ற ஆவல் இருந்தது, கடைசி நேரத்தில் முடிவெடுத்து செல்லமே பிரேமிடம் டிக்கட் கேட்டால் waiting list என்று சொல்லிவிட்டார், கடைசியில் வெள்ளிக்கிழமை காலை அழைத்து டிக்கட் வந்து வாங்கிக்கொள்ள சொன்னார்... அலுவலக நேரத்தில் எப்படி செல்லமுடியும்... எப்படியோ ஒரு வாய்ப்பு கிடைக்க எங்க company chairman car ஐ எடுத்துக்கொண்டு சைக்கிள் கேப்பில் சென்றுவிட்டு வரலாம் என்று சென்றால், அங்கே போனா பிரேம்குமார் எங்கேயோ போய்விட்டார்.. கடைசியில் Reception போய் நிற்றுவிட்டேன். வரவேற்பு பகுதியில் சேவையில் இருந்த அந்த மலாய் அம்மணியிடம் பிரேம்குமாரை பார்க்கவேண்டும் என்றேன்..உடனே அவர் டிக்கட் வாங்கவா என்று கேட்க, ஆம் என்று நான் சொல்ல எந்த பெயரில் டிக்கட் எடுக்க வந்திருக்கிறீர்கள் என்று அவர் கேட்க நான் பிரேம்குமார் என்று சொல்ல, மீண்டும் அந்த அம்மணி அதே கேள்வியை திரும்ப கேட்க நானும் பிரேம்குமார் என்று திரும்ப சொல்ல அவருக்கு பதட்டம் அதிகரித்து, அந்த நேரத்தில் அங்கே வந்த இன்னோரு பெண்ணிடம் அதை சொல்ல, அவர் கேட்க கேள்வி சற்று வித்தியாசமாக ஆதாவது உங்கள் பெயர் என்ன என்று கேட்க நான் பிரேம்குமார் என்று சொல்ல பலத்த சிரிப்பு இருவரிடமும், எனக்கு பாதியிலேயெ நடப்பது என்னவென்று தெரிந்துவிட்டாலும் நான் அப்படியே கடைசிவரை என்பதிலில் மாற்றம் செய்யவில்லை. உடனே அந்த பெண் என்னிடம் நீங்கள் உங்கள் பெயரைச் சொல்லும்பொழுது My name is Premkumar என்று சொல்லவேண்டும் என்று கூறியவுடனே என்பதில் என்னதெரியுமா! நான் என்ன Kindergarten going Kid ஆ அப்படி பதில் சொல்ல மறுமுறையும் சிரிப்பு..பிறகு யாரிடமோ பேசினார்கள், சரி police ஐ தான் கூப்பிடுகிறார்களோ என்று நினைக்க சிரித்த முகத்துடன் சுசிலா வந்தார்கள்...அட அட அப்படி ஒரு சிரித்த முகத்துடன் என்னை வரவேற்று டிக்கட் கொடுத்து மழை பெய்கிறதே எப்படி போவீர்கள் என்று அன்புடன் கேட்க.. நான் car ல்தான் வந்திருக்கிறேன் என்று சொன்னதும், நனையாமல் செல்லமுடியுமே என்று நினைத்து அவர்கள் சந்தோஷப்பட்டு வழியனுப்பிவைத்தார்கள்!அவருக்கு என் நன்றி!


முதல்பகுதி: - நிகழ்ச்சிக்கு போகவேண்டும் என்ற ஆவல் இருந்தது, கடைசி நேரத்தில் முடிவெடுத்து செல்லமே பிரேமிடம் டிக்கட் கேட்டால் waiting list என்று சொல்லிவிட்டார், கடைசியில் வெள்ளிக்கிழமை காலை அழைத்து டிக்கட் வந்து வாங்கிக்கொள்ள சொன்னார்... அலுவலக நேரத்தில் எப்படி செல்லமுடியும்... எப்படியோ ஒரு வாய்ப்பு கிடைக்க எங்க company chairman car ஐ எடுத்துக்கொண்டு சைக்கிள் கேப்பில் சென்றுவிட்டு வரலாம் என்று சென்றால், அங்கே போனா பிரேம்குமார் எங்கேயோ போய்விட்டார்.. கடைசியில் Reception போய் நிற்றுவிட்டேன். வரவேற்பு பகுதியில் சேவையில் இருந்த அந்த மலாய் அம்மணியிடம் பிரேம்குமாரை பார்க்கவேண்டும் என்றேன்..உடனே அவர் டிக்கட் வாங்கவா என்று கேட்க, ஆம் என்று நான் சொல்ல எந்த பெயரில் டிக்கட் எடுக்க வந்திருக்கிறீர்கள் என்று அவர் கேட்க நான் பிரேம்குமார் என்று சொல்ல, மீண்டும் அந்த அம்மணி அதே கேள்வியை திரும்ப கேட்க நானும் பிரேம்குமார் என்று திரும்ப சொல்ல அவருக்கு பதட்டம் அதிகரித்து, அந்த நேரத்தில் அங்கே வந்த இன்னோரு பெண்ணிடம் அதை சொல்ல, அவர் கேட்க கேள்வி சற்று வித்தியாசமாக ஆதாவது உங்கள் பெயர் என்ன என்று கேட்க நான் பிரேம்குமார் என்று சொல்ல பலத்த சிரிப்பு இருவரிடமும், எனக்கு பாதியிலேயெ நடப்பது என்னவென்று தெரிந்துவிட்டாலும் நான் அப்படியே கடைசிவரை என்பதிலில் மாற்றம் செய்யவில்லை. உடனே அந்த பெண் என்னிடம் நீங்கள் உங்கள் பெயரைச் சொல்லும்பொழுது My name is Premkumar என்று சொல்லவேண்டும் என்று கூறியவுடனே என்பதில் என்னதெரியுமா! நான் என்ன Kindergarten going Kid ஆ அப்படி பதில் சொல்ல மறுமுறையும் சிரிப்பு..பிறகு யாரிடமோ பேசினார்கள், சரி police ஐ தான் கூப்பிடுகிறார்களோ என்று நினைக்க சிரித்த முகத்துடன் சுசிலா வந்தார்கள்...அட அட அப்படி ஒரு சிரித்த முகத்துடன் என்னை வரவேற்று டிக்கட் கொடுத்து மழை பெய்கிறதே எப்படி போவீர்கள் என்று அன்புடன் கேட்க.. நான் car ல்தான் வந்திருக்கிறேன் என்று சொன்னதும், நனையாமல் செல்லமுடியுமே என்று நினைத்து அவர்கள் சந்தோஷப்பட்டு வழியனுப்பிவைத்தார்கள்!அவருக்கு என் நன்றி!
இப்பொழுது முக்கியமான
Second Part: தனியே செல்கிறோமே என்ற தயக்கம் இருந்தாலும், அந்த அழகான அறையில் சென்று அமர்ந்தவுடன் அருகிலிருந்த அன்பர்களை என் நண்பர்களாக்கிக் கொண்டேன் அனைவரும் சற்று முதியவர்கள் என்பதால் என்னை தன் மகன் போல பாவித்தார்கள்! குளிர் பானங்களுடன் குளிர்ச்சியாக தொடங்கியது நிகழ்ச்சி! அதன்பின் அருமையான பல அங்கத்துடன் நிகழ்ச்சி கலை கட்டியது, இடையிடையே சூடான உணவு வழங்கப்பட்டது really it was sumptuous ! ருசியான உணவு ரசிக்க கூடிய நிகழ்ச்சி என நல்லா போனது! ஆனால் இடையிலே இரண்டுமுறை எனக்கு ஆப்பு காத்திருந்தது...திடீரென்று என்முன்னே வசந்தம் சென்ரல் காமிரா மேனும் ஒலிவாங்கியுடன் ஒருவருமாக என் முன் தோன்றி என் முகத்திற்கு முன் ஒலிவாங்கியை நீட்டி நிகழ்ச்சி பற்றிய கருத்தைக்கேட்டால் என்ன சொல்வது ஆடிப்போனாலும் சமாளித்துக்கொண்டு ஏதோ அடிச்சுவிட்டேன்! இப்படியாக நிகழ்ச்சி சென்றுகொண்டிருக்கும் பொழுது இறுதி அங்கமாக பாட்டுக்கு பாட்டு போட்டி வந்தது, பங்குபெரும் விருந்தினர்களும் கலந்து கொண்டனர். ஒலிவாங்கியை தூங்கிகொண்டு ஒவ்வொரு மேசையாக ஓடிவந்த பாலா என் அருகே வந்தவுடன் என்கிட்ட கொடுத்து பாடச்சொல்லிவிட்டார், எனக்கு வந்த எழுத்து 'மா' திடீரென்று கொடுத்து பாடச் சொன்னால் என்ன பாடுவது பதட்டம்வேறு அதைவிட குளிர்பானம் குடித்து தொண்டைவேறு கட்டிவிட்டது. உடனே ஒரு பாட்டு நினைவில் வந்து ஆரம்பிக்க..சலசலப்பாக இருந்த அந்த அரங்கம் திடீரென்று அமைதியாகி அனைத்து தலைகளும் என்பக்கம் திரும்ப வெட்கம் என்னை கவ்விக்கொள்ள வார்த்தை மாறியது, வாயில் வந்த சொல்லையெல்லாம் போட்டு பாடவேண்டயதாயிற்று, அதற்குள் எதிர் அணியினர் பாட்டில் பிழை இருப்பதாகச் சத்தம் போட நிறுத்திவிட்டேன்.. இதனை பார்த்துக்கொண்டிருந்த ஒரு சிலர் தலையை குனிந்துகொண்டனர்... இப்படி நம்ம நிலம போச்சு அங்கே! கடைசியாக நிகழ்ச்சி முடியும்வரை இருந்துவிட்டு! escape and Run away! வெளியே ஓடிவந்த நொடிமுதல் ஒட்டிக்கொண்டது ஒரு ஏக்கம்! என்று பார்க்கப்போகிறோம் இனிமேல்...(நிகழ்ச்சியை) என்ற ஏக்கத்துடன்!
அடுத்த நிகழ்ச்சியில் அனைவரையும் சந்திக்கும்வரை இந்த இனிமையான நினைவுகளோடு....
Second Part: தனியே செல்கிறோமே என்ற தயக்கம் இருந்தாலும், அந்த அழகான அறையில் சென்று அமர்ந்தவுடன் அருகிலிருந்த அன்பர்களை என் நண்பர்களாக்கிக் கொண்டேன் அனைவரும் சற்று முதியவர்கள் என்பதால் என்னை தன் மகன் போல பாவித்தார்கள்! குளிர் பானங்களுடன் குளிர்ச்சியாக தொடங்கியது நிகழ்ச்சி! அதன்பின் அருமையான பல அங்கத்துடன் நிகழ்ச்சி கலை கட்டியது, இடையிடையே சூடான உணவு வழங்கப்பட்டது really it was sumptuous ! ருசியான உணவு ரசிக்க கூடிய நிகழ்ச்சி என நல்லா போனது! ஆனால் இடையிலே இரண்டுமுறை எனக்கு ஆப்பு காத்திருந்தது...திடீரென்று என்முன்னே வசந்தம் சென்ரல் காமிரா மேனும் ஒலிவாங்கியுடன் ஒருவருமாக என் முன் தோன்றி என் முகத்திற்கு முன் ஒலிவாங்கியை நீட்டி நிகழ்ச்சி பற்றிய கருத்தைக்கேட்டால் என்ன சொல்வது ஆடிப்போனாலும் சமாளித்துக்கொண்டு ஏதோ அடிச்சுவிட்டேன்! இப்படியாக நிகழ்ச்சி சென்றுகொண்டிருக்கும் பொழுது இறுதி அங்கமாக பாட்டுக்கு பாட்டு போட்டி வந்தது, பங்குபெரும் விருந்தினர்களும் கலந்து கொண்டனர். ஒலிவாங்கியை தூங்கிகொண்டு ஒவ்வொரு மேசையாக ஓடிவந்த பாலா என் அருகே வந்தவுடன் என்கிட்ட கொடுத்து பாடச்சொல்லிவிட்டார், எனக்கு வந்த எழுத்து 'மா' திடீரென்று கொடுத்து பாடச் சொன்னால் என்ன பாடுவது பதட்டம்வேறு அதைவிட குளிர்பானம் குடித்து தொண்டைவேறு கட்டிவிட்டது. உடனே ஒரு பாட்டு நினைவில் வந்து ஆரம்பிக்க..சலசலப்பாக இருந்த அந்த அரங்கம் திடீரென்று அமைதியாகி அனைத்து தலைகளும் என்பக்கம் திரும்ப வெட்கம் என்னை கவ்விக்கொள்ள வார்த்தை மாறியது, வாயில் வந்த சொல்லையெல்லாம் போட்டு பாடவேண்டயதாயிற்று, அதற்குள் எதிர் அணியினர் பாட்டில் பிழை இருப்பதாகச் சத்தம் போட நிறுத்திவிட்டேன்.. இதனை பார்த்துக்கொண்டிருந்த ஒரு சிலர் தலையை குனிந்துகொண்டனர்... இப்படி நம்ம நிலம போச்சு அங்கே! கடைசியாக நிகழ்ச்சி முடியும்வரை இருந்துவிட்டு! escape and Run away! வெளியே ஓடிவந்த நொடிமுதல் ஒட்டிக்கொண்டது ஒரு ஏக்கம்! என்று பார்க்கப்போகிறோம் இனிமேல்...(நிகழ்ச்சியை) என்ற ஏக்கத்துடன்!
அடுத்த நிகழ்ச்சியில் அனைவரையும் சந்திக்கும்வரை இந்த இனிமையான நினைவுகளோடு....
Friday, November 10, 2006
கண்களை குளிரச்செய்த காமரன் ஹைலாண்ட்ஸ்!




Thursday, October 26, 2006
CAMERON HIGHLANDS, MALAYSIA
இந்த ஆண்டு தீபாவளிக்கு 4 நாட்கள் விடுப்பு எடுக்கும் வாய்ப்பு வர நண்பர்களுடன் கலந்தாலோசிக்க காமரன் ஹைலாண்ட்ஸ் போகலாம் என் திட்டம் தீட்டப்பட்டது. நீண்ட்தூர பயணம் என்பதால் சற்று யோசித்தாலும் வாடகைக்கு நல்ல பெரிய வசதியான "HYUNDAI TRAJET" எடுத்துக்கொண்டு கிளம்பியாச்சு.. நானும் என் நணபனும் மாற்றி மாற்றி காரை செலுத்தினோம்...மலேசிய விரைவுச் சாலைக்கும் தேர்வு செய்யப்பட்ட பாடல் தொகுப்புக்கும் பயணம் அப்படித்தான் இருந்தது போங்க...சூப்பரப்பு! காமரன் உண்மையிலேயே பார்கவேண்டிய இடம்... நிறைய போட்டோ சுட்டோம்.. ஒரு சில மட்டும் இங்கே! 3 நாட்களில் நிறைய விஷயம் தெரிந்துகொண்டோம்... இது சம்மந்தமாக ஏதாவது பயணக்குறிப்பு நண்பர்கள் யாருக்காவது தேவைப்பட்டால் தயக்கமின்றி எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும்..
சிங்கப்பூரிலிருந்து அங்கே எங்களைப் போன்று நிறையப் பேர் வாகனத்தில் வந்திருந்ததைப் பார்த்தோம்... எனவே ஒரு முறை போயிட்டுத்தான் வாங்கலேன்! சிங்கப்பூரிலிந்து குறைந்த பட்சம் 650 கி.மி தூரத்தில் இருக்கிறது அழகிய காமரன் ஹைலாண்ட்ஸ்!
சிங்கப்பூரிலிருந்து அங்கே எங்களைப் போன்று நிறையப் பேர் வாகனத்தில் வந்திருந்ததைப் பார்த்தோம்... எனவே ஒரு முறை போயிட்டுத்தான் வாங்கலேன்! சிங்கப்பூரிலிந்து குறைந்த பட்சம் 650 கி.மி தூரத்தில் இருக்கிறது அழகிய காமரன் ஹைலாண்ட்ஸ்!
Wednesday, October 18, 2006
தித்திக்கும் தீபப்பெருநாள்! சிங்கப்பூர் 2006




சிங்கையின் சிறப்பு
தீபாவளியிலும் இருக்கு!
தித்திக்கும் இனிப்பு
தீபாவளியின் களிப்பு!
ஒளிவெல்லம் ஊரெல்லாம்
குட்டி இந்தியாவிலும்
கொட்டிக்கிடக்கிறது!
இந்தியர்களின்
இனிமை பெருமையை
இதுதாங்க எடுத்துகாட்டுது!
முகமெல்லாம்
மலர்ச்சி
அகத்தில் ஆயிரம்
குளிர்ச்சி!
வருடத்திற்கு ஒருமுறை
வந்தால்கூட
இதயத்தில் ஒரு
இதமான இடத்தை
இது வைத்திருக்கிறது!
இந்த விழாக்காலத்தில்
உலாப்போவதும்
விரும்பியதை உண்பதும்
வேடிக்கை பார்பதும்
வேதனைகளை துறப்பதும்
வேண்டியதை வாங்குவதும்
வெளிப்படையாக பேசுவதும்
பளபளப்பாக உடையனியவும்
பகலெல்லாம் சுத்தவும்
ஒளிவெல்லத்தை ரசிக்கவும்
ஒய்யாரமாக நடக்கவும்
பல கதைகள் பேசவும்
பல கடைகள் பார்க்கவும்
உறவினர்களை பார்கவும்
உளமாற பேசவும்
இனிப்பு பல வாங்கவும்
இதமாக இருக்கவும்
சுற்றி சுற்றி வரவும்
சுறுசுறுப்பை பெறவும்
அலங்காரங்களை ரசிக்கவும்
அசந்துபோய் நிற்கவும்
உற்சாகத்துடன் உழைக்கவும்
அச்சாரமாக அமைந்தது
இந்த தித்திக்கும் "தீபாவளி"
இனிதே கொண்டாடுவோம்!
தீபாவளி வாழ்த்துக்கள்!
என்றும்
பிரியமுடன்
பிரேம்குமார்:)
Tuesday, October 10, 2006
நான் யார்?



இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், தலப்பா, மீசை, தாடிக்குள் ஒலிந்திருக்கும் இவர் யார் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு நமது அரசர் 1975-ம் ரவாகேசரி அவர்கள் ஆயிரம் கூமுட்டைகளை பரிசாக வழங்குவார்!
ஒருவரை கண்டுபிடித்தால் பரிசு கொடுக்கப்படும் இன்னொருவரை கண்டுபிடித்தால் கொடுத்த கூமுட்டைகள் திருப்பி பெற்றுக்கொள்ளப்படும்! முயற்ச்சி செய்ய விருப்பம் இருக்கா? இல்லையென்றால் இந்த இரு பறவைகளையாவது பிடித்து அவர் யார் என்று காட்டுங்கப்பா! அழகான இயற்கையின் இடையில் அந்த முகம் தெரிவதைவிட இப்படி இருப்பதே மேல்! என்ன சரியா?
Monday, October 02, 2006
கல..கல..கலக்கும் ஒலி படைப்பாளர்!

நமக்குத்தான் முன்பே தெரியுமே! நம்மெல்லாம் ஓட்டு போட்டிருக்கோமில்ல....
எனக்கும் பிடித்த படைப்பாளரை என்னைப் போலவே ஓட்டு போட்டு வெற்றியடையச் செய்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் ஒரு ஆயிரம் நன்றி! ம்ம்ம்ம்ம்...இல்ல இல்ல கோடி நன்றி! (காசா, பணமா) போதுமா, பத்தாதா? அதுக்கு மேலே வேண்டுமென்றால் வெற்றி பெற்றவரை கேளுங்கப்பா....
Friday, September 29, 2006
அருள்மிகு மகாமாரியம்மன் தீமிதி திருவிழா 2006!
Monday, September 25, 2006
தில்லானா மோகனம்பாளின் திசைமாறிவிட்ட பயணம்!
Subscribe to:
Posts (Atom)